மகுமூது கசுனவீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஆப்பானிஸ்தானத்திலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தில் பரவியிருந்த பல்வேறு அரசுகளின் மீது முதன் முதலாகப் படையெடுத்தார் மகுமூது கசுனவீ (கஜினி முகமது). தொடர்ந்து பதினேழுமுறை அவர் வட இந்தியப் பகுதியிலிருந்த அரசுகளைத் தாக்கினார். அவற்றில், சோமநாதபுரப் படையெழுச்சி இந்தியக் கலாசாரத்தின் மீது விழுந்த தாக்குதலெனக் கருதப்படுகிறது. அவர் சோமநாதரின் விக்கிரகத்தை உடைத்துப் பெரும் பொருள் திரட்டிக்கொண்டு தனது நாட்டுக்குத் திருப்பிச் சென்றாரெனக் கூறப்படுகிறது.