மகாலங்கூர் இமால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாலங்கூர் இமால் என்பது இமயமலைத் தொடரில் உள்ள ஒரு துணைத் தொடர் ஆகும். இது நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையிலான எல்லையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் நான்கு இத்துணைத் தொடரிலேயே உள்ளன. எவரெஸ்ட், லோட்சே, மக்காலு, சோ ஓயு ஆகிய மேற்படி மலைகளுடன், வேறும் பல முக்கிய மலைகள் இதில் உள்ளன. இதனால் இதை உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர் எனலாம். இதன் திபேத் பக்கத்தில், ரோங்புக் பனியாறும், காங்சங் பனியாறும் உள்ளன. நேபாளப் பக்கத்தில், கோசும்பா பனியாறு, கும்பு பனியாறு என்பவை இருக்கின்றன. எவரெஸ்ட் மலைமுகட்டில் ஏறுவதற்கான வழமையான பாதை கோசும்பாப் பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதியே இத் தொடரில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட பகுதியாகும்.