மகததேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகததேசம் காசிக்கு தெற்கில் யமுனையும், கங்கையும் கூடும் பிரயாகை என்னும் இடத்தில் கிழக்கில் கயா, தெற்கில் சித்திரகூட மலை வரை பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசம் நடுவில் உயர்ந்தும்,நான்கு பக்கங்களிலும் சரிவாய் சாய்ந்தும் மிகவும் நல்ல மண் வளத்துடன் இருக்கும் தேசமாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் கிழக்குப்பாகத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாயும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் சித்ரகூட மலை என்னும் மலை மிகச்சிறந்தவை. இந்த மலைத்தொடருக்கு கமட்டாகிரிஎன்றும் பெயர் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த மகததேசத்தின் சித்ரகூட மலையின் அருகில் பல்குனீ நதியும், தேவிகாந்தி நதியும் கிரிகாணதீர்த்தம் ஒன்று சேர்ந்து மகத தேசத்தை செழிக்க வைக்கின்றது. அங்கதேசத்திற்கு மேற்கில் கங்கையுடன் சேர்ந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 223 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகததேசம்&oldid=2932098" இலிருந்து மீள்விக்கப்பட்டது