ப. சிதம்பரம்
| ப. சிதம்பரம் | |
தில்லி 2008 இல் நடந்த உலகப் பொருளாதார சந்தையின் குழுகூட்டத்தின் பொழுது, |
|
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 31 ஜூலை 2012 |
|
| பிரதமர் | மன்மோகன் சிங் |
|---|---|
| முன்னவர் | மன்மோகன் சிங் |
| பதவியில் 16 மே 1996 – 19 மார்ச் 1998 |
|
| பிரதமர் | எச். டி. தேவகவுடா இந்திர குமார் குஜரால் |
| முன்னவர் | மன்மோகன் சிங் |
| பின்வந்தவர் | யஷ்வந்த் சின்கா |
| பதவியில் 22 மே 2004 – 30 நவம்பர் 2008 |
|
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னவர் | ஜஸ்வந்த் சிங் |
| பின்வந்தவர் | மன்மோகன் சிங் |
|
|
|
| பதவியில் 30 நவம்பர் 2008 – 31 ஜூலை 2012 |
|
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| முன்னவர் | சிவ்ராஜ் பாட்டீல் |
| பின்வந்தவர் | சுசில்குமார் சிண்டே |
| அரசியல் கட்சி | ஐ.மு.கூ-இ.தே.கா |
|
|
|
| பிறப்பு | 16 செப்டம்பர் 1945 கந்தனூர், பிரித்தானிய இராச்சியம் |
| வாழ்க்கைத் துணை |
நளினி சிதம்பரம் |
| பிள்ளைகள் | கார்த்தி பழனியப்பன் சிதம்பரம் |
| இருப்பிடம் | சென்னை, இந்தியா |
| பழைய மாணவர் | மாநிலக் கல்லூரி, சென்னை சென்னை சட்டக்கல்லூரி ஆர்வர்டு வணிகப் பள்ளி |
| தொழில் | வழக்குரைஞர் |
| சமயம் | இந்து |
| இணையதளம் | ப. சிதம்பரம் தனி இணையம் |
ப. சிதம்பரம்- பழனியப்பன் சிதம்பரம் (ஆங்கிலம்:P. Chidambaram) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் தற்போதைய நிதி அமைச்சரும் ஆவார்.
இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16,1945ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது மனைவி பெயர் நளினி. இவருக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.
இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறைமத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறைமத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் மக்களவையின் உறுப்பினராகத் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்து சிலகாலம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்திவந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
ஜூலை 31, 2012 செவ்வாய் அன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர் ஆனதால் அப்பொறுப்பை மன்மோகன் சிங் கவனித்து வந்தார். இவர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியை சுசில் குமார் சிண்டே பெற்றார்; சுசில்குமார் சிண்டே வகித்து வந்த மின்துறை அமைச்சகத்தை வீரப்ப மொய்லி கூடுதலாக கவனிப்பார். [1][2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.rediff.com/news/report/chidambaram-new-finance-minister-shinde-made-home-minister/20120731.htm
- ↑ http://www.ndtv.com/article/india/cabinet-reshuffle-p-chidambaram-back-as-finance-minister-sushil-kumar-shinde-gets-home-249617?pfrom=home-lateststories