ப. இலக்குமணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. இலக்குமணசாமி (பிறப்பு: ஆகத்து 7 1930) மலேசியாவின் ஜோகூர் மாநிலம் மூவார் எனுமிடத்தில் பிறந்த இவர் சண்முகானந்தா பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்வான் பட்டத்தைப் பெற்றார்.

பதவிகள்[தொகு]

தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் தேர்ச்சியுள்ள இவர் செம்பவாங் தமிழர் சங்கத்தின் செயலாளராகவும், செம்பவாங் நலனபிவிருத்தி சபைப் பொருளாராகவும், ஸ்ரீருத்ர காளியம்மன் கோயில், அரசகேசரி சிவன் கோயில் மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

எழுதியுள்ள நூல்[தொகு]

  • தெய்வத் தமிழ் இசை

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._இலக்குமணசாமி&oldid=2713085" இலிருந்து மீள்விக்கப்பட்டது