பொய்யாமொழிப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொய்யாமொழிப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். இவர் தொண்டை மண்டல செங்குந்தர்[1] மரபை சேர்ந்த துறையூரைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்தகாலம் பற்றித் தெளிவு இல்லை எனினும், இவர் பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவர் வயிரபுரம் ஆசான் என்பவரிடம் கல்வி பயின்றார். பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரின் ஆசிரியராலேயே வழங்கப்பட்டது என்பர். இவர் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். எனினும் தஞ்சைவாணன் கோவை என்னும் கோவை நூல் சிறப்புப் பெற்ற ஒரு கோவை இலக்கியமாகும். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன்மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கியதாகக் கதை உண்டு. அரசன் இத் தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தானாம்.

வெளிப் பார்வை[தொகு]

பொய்யாமொழிப் புலவரும், முருகளேள் முட்டையும் உரையாடிய பாடல்கள்

  1. [Tamil̲mol̲iyakarāti https://archive.org/details/dli.rmrl.022537/page/1084/mode/2up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்யாமொழிப்_புலவர்&oldid=3479403" இலிருந்து மீள்விக்கப்பட்டது