குடகு மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொன்படு நெடுவரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் - புறநானூறு 166 ). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். இங்கு மழை பொழிந்தால் காவிரியாற்றில் வெள்ளம் வரும். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்னும் பெயரும் உண்டு.