பொன்னானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்னானி என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இது அறபிக்கடலை ஒட்டியுள்ள துறைமுக நகரமாகும். ”எரித்ரியன் கடலில் பெரிப்ளல்” என்று பொருள்படும் கிரேக்க நூலில், இவ்வூரை திண்டிஸ் எனக் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [1]. இந்த நகராட்சி ஐம்பது வார்டுகளைக் கொண்டது. இது 199.42 ச. கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

பெயர்க் காரணம்[தொகு]

  • பொன்னன் என்ற அரசர் வாழ்ந்ததால் பொன்னானி என்ற பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.
  • பொன் வாணி என்ற ஆறு பாய்ந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றது என்று வேறு சிலரும் கருதுகின்றனர்.
  • அரபு, பாரசீக நாடுகளுடன் வணிகத்தை மேற்கொண்ட பகுதி என்பதால் பொன் நாணயங்கள் நிரம்பிய இடம் என்ற பொருளில் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று வேறு சிலரும் கருதுகின்றனர்.
  • ஆழ்வாஞ்சேரி தம்பிரான்களின் ஆட்சிக் காலத்தில், பொன்னை ஏற்றிய யானைகளை கோயில்களுக்கு அளித்ததால் பொன் யானை என்ற பெயரே பொன்னானி என்று மருவியதாகவும் சிலர் கருதுகின்றனர். [2]

சான்றுகள்[தொகு]

  1. The maritime trade of ancient Tamils in plant products[தொடர்பிழந்த இணைப்பு]. Accessed on 31 ஆகஸ்ட் 2009.
  2. தம்பிராக்களுடெ தம்பிராக்கள்- சி. ராதாகிருஷ்ணன். மலையாள மனோரமா நாளேடு 2011 பிப்ரவரி 19

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பொன்னானி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னானி&oldid=3371371" இலிருந்து மீள்விக்கப்பட்டது