பொதுக்கயத்துக் கீரந்தை
பொதுக்கயத்துக் கீரந்தை சங்ககாலப் புலவர். இவரது பாடலாகக் குறுந்தொகை 337 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது.
கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர்.
பாடல் சொல்லும் செய்தி[தொகு]
இவள் பெருமுது செல்வர் பலருக்கு ஒரே ஒரு மகள். இவள் உலகம் அறியாத மடமைப் பண்பினள். இவளது முலை முகிழ்முகிழ்த்தது. கிளி போன்ற குரல் மாறிக் கிழக்கு வீழ்த்தது. அடித்தொண்டைக்கண்ணதாயிற்று பல் விழுந்து முளைத்து வரிசைப்பட்டுள்ளன. உடலைச் சில wikt:சுணங்குகள் அழகுபடுத்துகின்றன. இவற்றையெல்லாம் நான் அறிவேன். அவளுக்குத் தெரியாது. என்ன ஆவாளோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நீ வேறு அவளைத் தரும்படி கெஞ்சுகிறாய். நான் என்ன செய்வேன்? - குறை இரக்கும் தலைவனிடம் தோழி இவ்வாறு கூறுகிறாள்.