பெ. துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெ. துரைசாமி (பிறப்பு: மே 5, 1964) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இயற்பியலில் முதுநிலை அற்வியல் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றிருக்கிறார். வான் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் 120க்கும் அதிகமான இயற்பியல், வானியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பன்னாட்டு, தேசிய, மாநிலக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கும் இவர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்திலும், அறிவியல் தமிழ்த் துறையிலும், தற்போது தொல்லறிவியல் துறையிலும் ஆய்வு உதவியாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய "தமிழரின் வணிகவியல் கோட்பாடுகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._துரைசாமி&oldid=3614087" இலிருந்து மீள்விக்கப்பட்டது