பெருந்தோட் குறுஞ்சாத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருந்தோட் குறுஞ்சாத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 308 எண்ணுள்ள பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் தரும் செய்தி[தொகு]

இந்தப் பாடல் குறிஞ்சித்திணை பற்றியது.

திருமணம் காலம் தாழ்கிறது. தலைவி துடிக்கிறாள். தோழி பொறுத்திருக்குமாறு தலைவியை வற்புறுத்துகிறாள். மலைநாடன் கேண்மை காமம் தந்து தீர்க்கும் 'கை'யாகவும் ஒழுக்கமாகத் தாழ்ந்து கிடக்கும் ஒன்று அன்று - என்கிறாள். (ஆம் = நீர்; வாழை நுகும்பு = வாழை மட்டை.) அவன் மலையில் நீர் வழிந்தோடும். அப்பகுதியில் வளரந்துள்ள வாழைமரம் வருந்தும்படி களிறு தன் பிடியின் தலையைத் தடவிப் பிடியின் ஆவலைத் தணிக்கும். இப்படிப்பட்ட மலையின் தலைவன் அவன் என்கிறாள் தோழி.

மேற்கோள்கள்[தொகு]