பூரணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தானதருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.

பூர்ணிமா என்றும் பவுர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது.

பொருளடக்கம்

சந்திரக் கடவுளின் சாப விமோசனம் [தொகு]

சந்திரன் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்ததார்.

பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாக குறைந்து இறுதியில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் போது, சிவபெருமானை சந்தமடைந்தார் சந்திரன். சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார், எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார்.

சித்திரகுப்த விரதம் [தொகு]

மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன.

பௌத்தமும் பூரணையும் [தொகு]

இலங்கையில் பௌத்தர்களுக்கும் பூரணை புனிதநாளாக விளங்குகின்றது. பௌத்தர்கள் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த தினமாக ஒவ்வொரு பூரணையும் வழிபாடு, தான தர்மங்கள் செய்கின்றனர். இது அரச விடுமுறை தினமாக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

அமைவாதை

உசாத்துணை [தொகு]

இந்துக்கலைக்களஞ்சியம் - தொகுதி பத்து - இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணக்களம், இலங்கை. 2009. பக் 322


"http://ta.wikipedia.org/w/index.php?title=பூரணை&oldid=1420154" இருந்து மீள்விக்கப்பட்டது