பூநகரி மீதான எறிகணை வீச்சு, ஜனவரி 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய எறிகணை வீச்சில் இரு பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 6 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு, மாலை 6:40 மணியளவில் நடந்த இச்சம்மபவத்தில் மாட்டு வண்டியில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான துரைசாமி தெய்வேந்திரம் (வயது 37) மற்றும் மார்க்கண்டு பாலசிங்கம் (வயது 67) இருவரும் கொல்லப்பட்டனர், இவர்களை ஏற்றிச் சென்ற மாடும் இறந்து மக்கள் குடியிருப்புக்கள் பலவும் சேதத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.