புலவர் திருமார்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலவர் திருமார்பன் அவர்கள் வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத விளம்பரம் விரும்பாத தமிழறிஞர்.'திருமார்பனின் மாதவிக்காப்பியம்' எனும் மரபுக்கவிதை நூலை இயற்றியவர்.

பிறப்பு[தொகு]

திருமார்பன் தமிழ் நாட்டில் திருச்செங்கோடு வட்டத்தில் இலுப்புலி எனும் கிராமத்தில் 1933ம் ஆண்டு மதலைமுத்து என்கிற மாரிமுத்து என்பவருக்கும் பழனியம்மாள் என்பவருக்கும் பத்தாவது மகவாக பிறந்தார். அவரின் இயற்பெயர் பாக்கியசாமி என்பதாகும்.

படிப்பு[தொகு]

பிறப்பால் கிருத்துவரான பாக்கியசாமி தன்னுடைய ஆரம்ப கல்வியை கிருத்துவ பள்ளியில் பயின்றார். எட்டாம் வகுப்பு வரை படித்த போது படிப்பை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.அவரின் தந்தையின் பொருளாதாரம் குறைந்த போது அவர் சொன்ன வார்த்தைகள் " நீ ஆண் பிள்ளை எப்படியாவது பிழைத்துக்கொள்ளுவாய், உன் அக்கா படிக்கட்டும் நீ படிப்பை நிறுத்திவிடு' அப்போது படிக்கும் வாய்ப்பை இழந்த பாக்கியசாமி தனித்தேர்வராக பள்ளி இறுதி தேர்வை எழுதித் தேறினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலவர்_திருமார்பன்&oldid=1659812" இலிருந்து மீள்விக்கப்பட்டது