பி. பி. காந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. பி காந்தம் (பிறப்பு: சனவரி 2 1930) தமிழ்நாட்டில் பிறந்த இவர் தனது ஆறு வயதில் மலேயாவுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு லயோலா கல்வி நிலையம், எம்.பி.எஸ். பள்ளி ஆகியவற்றில் கற்றார்.

தொழில்[தொகு]

ஆங்கிலம், தமிழ், இந்தி. மலாய், ஜப்பான் ஆகிய மொழிகளில் நன்கு புலமைமிக்க இவர், ஆசாத் ராணுவப் பள்ளியில் இணைந்து ராணுவப் பயிற்சியைப் பெற்றார். சுமார் 30 ஆண்டுகள் சிங்கப்பூர் துறைமுக ஆணைக் கழகத்தில் காவல்துறைப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பதவிகள்[தொகு]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும், தமிழர் சீர்த்திருத்தச் சங்கத்தின் தலைவராகவும், தமிழர் பேரவையின் துணைத் தலைவராகவும், பூன் லே இந்திய கலாசாரக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் ஜனநாயகம் இதழின் கேள்வி - பதில் பகுதிக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், அலை ஓசை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

1946ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் படைப்பான 'எங்களின் இந்திய தேசிய இராணுவப் பயிற்சி' கோலாலம்பூரிலிருந்து வெளியாகும் ‘ஜனநாயகம்’ எனும் இதழில் வெளியானது. சிறுகதை, நாடகம், கட்டுரை முதலிய துறைகளில் இவருக்கு அதிக ஈடுபாடுண்டு.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • மரகதத் தெய்வம்
  • சீனக் கதைகள்
  • ஆறு
  • வயதான கிழவனும் வானம் போன்ற கடலும்

கட்டுரைத் தொகுப்பு[தொகு]

  • தூர தேசங்களின் சுகமான பயணங்கள்

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பி._காந்தம்&oldid=2713092" இலிருந்து மீள்விக்கப்பட்டது