பி. எஸ். குமாரசுவாமிராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பி.எஸ்.குமாரசுவாமிராஜா


பதவியில்
ஏப்ரல் 6, 1949 – ஏப்ரல் 10, 1952
பிரதமர் ஜவகர்லால் நேரு
ஆளுநர் கிருஷ்ண குமாரசிங் பவசிங்
முன்னவர் ஓ. பி. ராமசாமி ரெட்டியார்
பின்வந்தவர் சி. இராஜகோபாலாச்சாரி

பதவியில்
1954 – 1956
முன்னவர் சையிது பாசில் அலி
பின்வந்தவர் பீம் சென் சச்சார்
அரசியல் கட்சி இந்திய தேசியக் காங்கிரஸ்

பிறப்பு 1898
இராஜபாளையம், சென்னை மாகாணம்
இறப்பு 1957
தேசியம் இந்தியர்
சமயம் இந்து

பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா (1898–1957) இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்பேற்றவர். [1]. அவர் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராசப்பாளையத்தில் பிறந்தவர்.

பொருளடக்கம்

[தொகு] இளமை வாழ்வு

பூசாபதி சஞ்சீவி ராஜாவிற்கு மகனாக இராசப்பாளையத்தில் பிறந்தார். அவரது அன்னையை எட்டு நாட்களிலேயே இழந்தார். தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார்.உடன்பிறப்புகள் யாருமில்லாத குமாரசாமியை அவரது பாட்டியார் வளர்த்து வந்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்த வீரர்கள் பரம்பரையைச் சேர்ந்த ராஜூக்களின் இனத்தைச் சேர்ந்தவர்.[2]தமது பள்ளிக்கல்வியை முடித்தவுடன் இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசில் இணைந்து பல்வேறு நிலைகளில் பங்காற்றி இருக்கிறார். கிராமத்தின் பஞ்சாயத்து அமைப்புகளில் நாட்டம் கொண்டு பஞ்சாயத்து மற்றும் நகரவை நிர்வாகங்களில் பங்கேற்றார்.

[தொகு] அரசியல் மற்றும் சமூக சேவை

அவரது இளம்வயதில் அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரது வாழ்வும் எழுத்துக்களும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருந்தன. 1919ஆம் ஆண்டு முதன்முதலாக மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார்.காந்தியின் தென்னாபிரிக்கா போராட்டங்களையும் அகமதாபாத்தில் அவர் நிறுவிய ஆசிரமும் அவரது எளிமையும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.

1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி,மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.

1949 முதல் 1952 வரை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முதலமைச்சராகவும் 1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார்.அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு,காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன.தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்தார்.

[தொகு] மேலும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

முன்னர்
ஓ. பி. ராமசாமி ரெட்டியார்
சென்னை மாகாண முதலமைச்சர்கள்
6 ஏப்ரல் 1949– 26 ஜனவரி 1950
பின்னர்
பி. எஸ். குமாரசுவாமிராஜா
முன்னர்
புதிய பதவி
சென்னை மாகாண முதலமைச்சர்கள்]
26 ஜனவரி 1950– 10 ஏப்ரல் 1952
பின்னர்
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்