பிளம்பாஙான் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளம்பாஙான் இராச்சியம்
Kerajaan Blambangan
1236–1580
தலைநகரம்பஞுவாஙி
பேசப்படும் மொழிகள்ஒசிங்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
? 
• 1540-1541 ¹
பிரபு தவாங் அலுன்
• 1541-1542
கீ குஸ்தி ஙுராஹ் பஞ்சி சக்தி
• 1542-1547
கென் டெடெஸ்
வரலாறு 
• தொடக்கம்
1236
• கென் டெடெஸின் இறப்பு
1580
முந்தையது
பின்னையது
மஜாபாகித்து அரசு
தெமாகு சுல்தானகம்
மத்தாராம் சுல்தானகம்
¹ (1475-1478 மத்தாராம் சுல்தானகத்தின் கீழ்)
இந்தோனேசிய வரலாறு
ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமநகரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுந்தா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கெடிரி அரசு (1045–1221)
சிங்காசாரி அரசு (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முசுலிம் அரசுகளின் எழுச்சி
இசுலாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தான் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)

பிளம்பாஙான் இராச்சியம் சாவகத் தீவின் கீழ்க் கோடியில் அமைந்திருந்தது. இது சாவகத்தில் காணப்பட்ட மஜாபாகித்து அரசு (1293–1527) போன்ற மிகப் பெரும் இந்துப் பேரரசுகள் காணப்பட்ட அதே வேளையிலேயே எழுச்சியுற்றது. பதினைந்தாம் நூற்றாண்டில் மஜாபாகித்து அரசு வீழ்ச்சியுறத் தொடங்கிய போது பிளம்பாஙான் இராச்சியம் சாவகத்தின் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரேயொரு இந்து இராச்சியமாகக் காணப்பட்டது.

அக்காலத்தில் வலிமை மிக்க இசுலாமியப் பேரரசாக இருந்த மத்தாராம் சுல்தானகம் மேற்குப் பகுதியிலும் பாலித் தீவில் காணப்பட்ட கெல்கெல், புலெலெங், மெங்வி போன்ற இந்து அரசுகள் கிழக்குப் பகுதியலுமிருந்த நிலையில் அவற்றினிடையே கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டு காலம் பிளம்பாஙான் இராச்சியம் நிலைத்திருந்தது. இதனருகிலிருந்த அரசுகள் அனைத்துமே தமது அரசியல், சமயக் குறிக்கோள்களை எட்டிக் கொள்வதற்காக பிளம்பாஙான் ஆட்புலத்தைப் பயன்படுத்திக் கொள்ள விழைந்தன.

ஆயினும் பாலித் தீவினர் பிளம்பாஙான் இராச்சியத்தை தமக்கு மேற்கிலிருந்து முஸ்லிம் மத்தாராம் பேரரசிடமிருந்து இஸ்லாம் பரவுவதிலிருந்து காத்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர். அவ்வாறே தமக்குள்ளே உட்பூசல் நிறைந்திருந்தமையால் பொருளாதார வளம் குன்றியிருந்த பாலித் தீவின் ஆட்சியாளர்கள் மேற்கிலிருந்து ஏற்படும் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் மூலம் தமது பொருளாதாரம் மேலும் சீர்குலையாமல் தடுத்துக் கொண்டனர். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில், உண்ணாட்டினரை மதம் மாற்றுவதற்காக மேற்கத்திய சமயப் போதகர்கள் சிலர் கிழக்குச் சாவகத்தில் வந்திறங்கினர். அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே ஒல்லாந்துக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இப்பகுதியில் தமது அரசியல், பொருளாதார நலன்களுக்காகப் போட்டியிட்டனர். பிளம்பாஙானின் ஆட்சியுரிமை தொடர்பில் ஏற்பட்ட தாயாதிச் சண்டைகள் இவ்வரசு வலுவிழந்து, வெளி நாட்டினர் இதன் மீது ஆதிக்கம் செலுத்தக் காரணமாயின.


உசாத்துணை[தொகு]

  1. Margana, Sri (2007). Java's last frontier : the struggle for hegemony of Blambangan, c. 1763-1813. CNWS/TANAP, Faculty of Arts, Leiden University. https://openaccess.leidenuniv.nl/handle/1887/12547. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளம்பாஙான்_அரசு&oldid=3905407" இலிருந்து மீள்விக்கப்பட்டது