பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (ஆங்கிலம்:Press Trust of India) பி.ட்டி.ஐ.என்பது இந்தியாவின் பெரிய செய்தி முகமை ஆகும்[1]. 1947 ஆம் ஆண்டு பதியப்பட்டு 1949 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 450 க்கும் மேற்பட்ட இந்திய செய்தித்தாள்களின் கூட்டுறவு அமைப்பு. டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் நாடு முழுவதும் 150 கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களைக் கொண்டு ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மாவட்டங்களின் நிகழ்வுகளையும் கவனித்து செய்திகளாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் எல்லா செய்தித்தாள்களும், செய்திகள் வழங்கும் தொலைக்காட்சிகளும் பி.ட்டி.ஐ., இடமிருந்து செய்திகள் மற்றும் செய்திக்கான புகைப்படங்களைப் பெற்று அவற்றை மறுபதிப்பு செய்கின்றன. இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 செய்திகளையும் 200 செய்தி புகைப்படங்களையும் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது [2]. இது தவிர இந்திய சுதந்திரம் பெற்றதிலிருந்து உலகின் முக்கிய செய்தி முகமைகளுள் ஒன்றான அஸ்ஸோஸியேட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் போன்ற நிறுவனங்களின் இந்திய செயல்பாடுகளை ஓரம்கட்டிவிட்டு இந்தியாவின் தனிப்பெரும் செய்தி முகமையக செயல்பட்டு வருகிறது. இந்திய தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளின் தலைநகரங்களிலும் மற்றும் உலகின் பிரபல நகரங்கள் பலவற்றிலும் தமது செய்தியாளர்களை பணியமர்த்தி தமது வாடிக்கையாளர்களுக்கு உலக செய்திகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக R.லக்ஷ்மிபதி என்பவர் உள்ளார்[2].

பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் வரலாறு[சான்று தேவை][தொகு]

Time Event
1910 அசோசியேட்டடு பிரஸ் ஆஃப் இந்தியா(Associated Press of India-API), பி.ட்டி.ஐ-இன் முன்னோடியாக கருதப்படும் இது K C ராய் அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் செய்தி முகமை என்றும் அறியப்படுகிறது.
1919 ராய்ட்டர்ஸ், அசோசியேட்டடு பிரஸ் ஆஃப் இந்தியா-வின் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
1945 அசோசியேட்டடு பிரஸ் ஆஃப் இந்தியா, ராய்ட்டர்ஸ்-ஆல் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட இந்தியத் தனியார் நிறுவனம் என பதிவுசெய்யப்படுகிறது.
1947, ஆகஸ்ட் 27 பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா சென்னையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
1949, பிப்ரவரி 1 பி.ட்டி.ஐ செய்தி சேவைகளை தொடங்குகிறது. ஆனால், ராய்ட்டர்சுடனான தொடர்புகளைத் தொடர்கிறது.
1953 பி.ட்டி.ஐ, ராய்ட்டர்சிடமிருந்து கட்டகன்று ஒரு சுதந்திரமான முகவாண்மையாக மாறுகிறது.
1976 பி.ட்டி.ஐ பொருளாதார சேவையை துவங்குகிறது.
1976, பிப்ரவரி PTI, UNI, Samachar Bharati and Hindusthan Samachar merge under pressure during emergency to become 'Samachar'
1978, ஏப்ரல் PTI and the other three news agencies go back to their original units to restrart independent news operations
1980, ஜூலை PTI Feature Service launched
1981, அக்டோபர் பி.ட்டி.ஐ அறிவியல் சேவை துவக்கம்.
1982, நவம்பர் PTI launches Scan, on-screen news display service
1984 PTI service launched for subscribers in அமெரிக்க ஐக்கிய நாடு
1985 Computerisation of news operations starts PTI service launched for subscribers in ஐக்கிய இராச்சியம்
1986, பிப்ரவரி PTI-TV launched
1986, ஏப்ரல் PTI-Bhasha launched, making it bi-lingual, a concept started by Samachar Bharati.
1986, ஆகஸ்ட் Experimental broadcast of news and pix via Insat-IB begins, Computer system made fully operational
1987, ஆகஸ்ட் Stockscan I launched
1987, அக்டோபர் பி.ட்டி.ஐ புகைப்பட சேவை துவக்கம்.
1992, ஆகஸ்ட் PTI Mag launched
1993, ஆகஸ்ட் பி.ட்டி.ஐ வரைகலை சேவை துவக்கம்.
1995, மார்ச் PTI launches StockScan II
1996, பிப்ரவரி PTI invests for the first time in a foreign registered Company, Asia Pulse, which provides an on-line data bank on economic opportunities in ஆசிய நாடுகளின் பட்டியல்
1997, டிசம்பர் PTI introduces photo-dial up facility
1999, மார்ச் PTI celebrates Golden Jubilee. PTI goes on இணையம்
2003, செப்டம்பர் பி.ட்டி.ஐ, இணையவழி செய்தி மற்றும் புகைப்பட சேவை துவக்கம்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "பி.ட்டி.ஐ". பார்க்கப்பட்ட நாள் 05 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 பி.ட்டி.ஐ-PTI