பா. சுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. சுந்தர் (பிறப்பு: ஏப்ரல் 24 1959) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் திருச்சிராப்பள்ளியிலுள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அருள்நெறித் தந்தை அடிகளார், குன்றக்குடி அடிகளார் பணிகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தமிழாகரர் விருது, சைவ சித்தாந்தக் கலாநிதி விருது, சிவநெறிப் புலவர்மணி விருது போன்றவைகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._சுந்தர்&oldid=3614112" இலிருந்து மீள்விக்கப்பட்டது