பாரத்துவாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரத்துவாசர்

பாரத்துவாசர் அல்லது பாரத்துவஜர் (Bharadwaja) சப்தரிஷிகளுள் ஒருவர். ஆங்கிரச குலத்தைச் சார்ந்தவர். ரிக்வேத கால முனிவர்களில் ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் புலமை பெற்றவர். பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார். துரோணாச்சாரியர் இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.[1].

இராமாயணத்தில்[தொகு]

இராமர், சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்கையில், முதன்முதலில் பரத்துவாஜ முனிவரின் குடிலில் சில நாட்கள் தங்கினர். பின் சித்திரகூடம் எனும் அடந்த காட்டிற்கு செல்வதற்கான வழியை பரத்துவாஜர் இராமருக்குக் கூறினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Inhabitants of the Worlds Mahānirvāṇ Tantra, translated by Arthur Avalon, (Sir John Woodroffe), 1913, Introduction and Preface
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்துவாசர்&oldid=3801689" இலிருந்து மீள்விக்கப்பட்டது