பாய்மரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாய்மரம் என்பது பண்டையக் கால சிறிய கப்பல்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு வகை பாய் அல்லது துணி ஆகும். இதன் மூலம் தான் பண்டைக் கால கடல் வாணிபத்தில் பயன்படுத்திய கப்பல்கள் காற்றின் மூலம் பயணம் செய்தன.
காற்றின் போக்கிற்கு ஏற்ப கப்பலை செலுத்துவதில் பண்டைக் கால தமிழர்கள் பேர் பெற்றிருந்தனர். குறிப்பாக பாய்மரக் கப்பல்கள் காற்று எந்தத் திசையிலிருந்து அடிக்கிறது அதற்கு எதிர் திசையில் தான் செல்லும். ஆனால் பண்டைக் காலத் தமிழர்கள் காற்று அடிக்கும் திசையிலேயே பாய்மரக் கப்பல்களை செலுத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.