பாய்
பாய் இது எளிமையான படுக்கை விரிப்பாகும். மங்கல நிகழ்வுகளில் மதிக்கப்பட்டு, பந்திகளிலும் அமைதியான உறக்கத்திற்கும் உதவுவன.
பொருளடக்கம் |
வகைகள் [தொகு]
- பனைஓலை பாய்
- மூங்கில்நார் பாய்
- நாணல்கோரை பாய்
பயன்பாடு [தொகு]
- பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
- மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
- நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுதும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.
நாணல்கோரை பாய் தயாரிப்பு [தொகு]
ஆற்றோரம் நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து சூரிக்கத்தியின் (இருபுறமும் கூரான கத்தி) உதவியால் இரண்டாகக் கீறி பின் கட்டுகளாக கட்டி வெயிலில் உலர வைக்க வேண்டும். உலர்ந்த அக்கட்டுகளை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதை மீண்டும் இரண்டாக கீறி வெயிலில் உலர வைக்க வேண்டும். உலர்ந்த நாணல்கோரையினை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்ற வேண்டும். பக்குவப்படுத்தி அவைகளைப் பனை மற்றும் கற்றாழை நாரால் கோத்து பாயை உருவாக்குவார்கள்.
தேவையானகருவிகள் [தொகு]
பாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், சிறிய நீள்வச பலகைகள் தேவை.
மூலப்பொருட்கள் [தொகு]
இயற்கைத் தாவரங்களான நாணல்கோரைப்புல், மற்றும் கற்றாழை.