பாத்திமா கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்திமா கல்லூரி தென்னிந்தியாவில் மதுரை நகரில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும். 1953 ஆம் ஆண்டு கிருஸ்தவ மிஷனரியால் ஆரம்பிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது பெண்கள் கல்லூரி இது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தர நிர்ணயக் குழுவான 'தேசிய தர நிர்ணயக்குழுவின்' தரவரிசையில் 'A' பிரிவு பெற்று இயங்கும் இந்த பெண்கள் கல்லூரி மதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பெண்களின் கல்வித் தேவையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றி வருகிறது.