பரணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரணன் (பிறப்பு: ஏப்ரல் 9 1944), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பொந்தியான் நகரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கோழிக்கோடு பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செம்பவாங்கிலும் பெற்றார்.

தொழில்[தொகு]

தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கறிந்த இவர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றினார்.

இலக்கியப் பணி[தொகு]

இவர் மரபுக் கவிதை எழுதுவதில் அதிக அக்கறை கொண்டிருந்தவர். புதுக்கவிதை, புதினம், கட்டுரை என பல்துறைகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவரது முதல் ஆக்கம் என்னை நான் கண்டேன் எனும் தலைப்பில் தமிழ் முரசில் வெளியானது.

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரணன்&oldid=2768527" இலிருந்து மீள்விக்கப்பட்டது