பயனர்:Tamil sarva/பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

Translated from http://en.wikipedia.org/wiki/Major_depressive_disorder (revision: 395706750) using http://translate.google.com/toolkit with about 94% human translations.

பிறவகை மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகளுக்கு மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்னும் கட்டுரையைப் பார்க்கவும்.
Major Depressive Disorder
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Vincent Willem van Gogh 002.jpg
Vincent van Gogh's 1890 painting At Eternity's Gate
ICD-10 F32., F33.
ICD-9 296
OMIM 608516
DiseasesDB 3589
MedlinePlus 003213
eMedicine med/532 
பாடத் தலைப்பு D003865

வார்ப்புரு:Depression video

மீள் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு , மருத்துவ மனத் தளர்ச்சி , பெரும் மனச்சோர்வு , ஓர்முனை மனச்சோர்வு அல்லது ஓர்முனை மனச் சீர்குலைவு என்றும் அறியப்படும் பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு, மிகவும் தாழ் நிலையிலான சுய மதிப்பு, பொதுவாக மகிழ்ச்சி அளிக்கக் கூடியனவற்றில் ஆர்வமின்றி இருத்தல் அல்லது அவற்றில் மகிழ்ச்சி கொள்ளாது இருத்தல் போன்ற தாழ் மன நிலையைச் சுட்டிக் காட்டும் ஒரு மன நிலைச் சீர்குலைவாகும். பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்னும் சொற்றொடரினை அமெரிக்க உள நோயியல் கழகம் (American Psychiatric Association) உருவாக்கியது. 1980ஆம் ஆண்டு பதிப்பித்த மனநிலைக் கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளிவிபரக் கையேடு (Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM-III) என்னும் நூலில், இச்சொல் மன நிலைச் சீர்குலைவு என்பதன் அறிகுறித் தொகுதியாக அறிமுகமாகி, அதன் பின்னர் பெருமளவில் கையாளப்பட்டு வருகிறது. பொதுவாக உளச்சோர்வு என்னும் சொல்லே இந்தச் சீர்குலைவினைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆயினும், பிற மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகளைக் குறிக்கவும் இது பயன்படுகிறது. ஆகவே, மருத்துவ மற்றும் ஆராய்ச்சிக்கான பயன்பாடுகளுக்கு மேலும் துல்லியமான சொல் தேவை என்பதால் அத்தளங்களில் இதைக் கையாளுவதில்லை. ஒரு மனிதரின் குடும்பம், பணி அல்லது பள்ளி வாழ்க்கை, உறக்கம் மற்றும் உண்ணும் பழக்கம் மற்றும் பொதுவான உடல் நலம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு நிலையாக பெரும் மனத் தளர்ச்சி உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு கொண்டுள்ளோரில் சுமார் 3.4 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொள்கின்றனர்; மற்றும் தற்கொலை செய்து கொள்வோரில் 60 விழுக்காட்டிற்கும் மேலானோர் மனத் தளர்ச்சி அல்லது வேறு வகையான மனத் தளர்ச்சிச் சீர்குலைவு கொண்டுள்ளனர்.


பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு நோயினைக் கண்டறிதலானது, நோயாளி தமது அனுபவங்களாகக் கூறுபவை, அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அவரது நடத்தையாக உரைப்பவை மற்றும் மன நிலைப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. உடல் நலத்தை அறிவதற்கு மருத்துவர்கள் இயற்பியல் சார்பான சோதனைகளையும், அறிகுறிகளையும் பெருமளவில் சார்ந்திருப்பினும், பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவை அறிவதற்கு, ஆய்வகச் சோதனைகள் ஏதுமில்லை. பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில் அது பின்னர் குணமடைவதை மெதுவடையச் செய்து விடும் அல்லது அந்நபரின் உடல் நலத்தை மோசமடையச் செய்து விடும் என்று கெல்டர், மௌ மற்றும் கெட்டெஸ் (Gelder, Mayou and Geddes) (2005)[ஆதாரம் தேவை] ஆகியோர் கூறுகின்றனர். இந்நோய் பெரும்பாலும் 20 முதல் 30 வயதிற்குள்ளாகவே வருகிறது. 30 முதல் 40 வயது வரையிலும் இது உச்சத்தில் இருக்கிறது.


நோயாளிகள் குறிப்பாக மனத்தளர்ச்சி - எதிர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். பெரும்பாலான நிகழ்வுகளில், இவர்கள் உளப்பிணி சிகிச்சை அல்லது நோய் பற்றிய கலந்தாய்வு ஆகியவற்றையும் பெறுகின்றனர். சுய - உதாசீனம் அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபடும் நோயாளிகளுக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுதலும் அவசியமாகலாம். நோயாளிகளில் சிலருக்கு பொது உணர்வு நீக்கியின் கீழ் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையும் (electroconvulsive therapy) அளிக்கப்படுகிறது. இந்த மனச்சீர்குலைவு நீடிக்கும் காலகட்டம் நபருக்கு நபர் பெரிதும் வேறுபடுகிறது. சிலருக்கு இது வாரக் கணக்கிலாகவும், வேறு சிலருக்கு வாழ் நாள் முழுவதுமான மீள் பெரும் மனத் தளர்ச்சிக் கால கட்டம் என்பதாகவும் காணப்படுகிறது. மனத் தளர்ச்சி கொண்டுள்ள நோயாளிகளின் வாழ்நாள் எதிர்பார்ப்பு, என்பது அந்நோயற்றோரை விடக் குறைவானதே. மருத்துவ நோய்கள் மற்றும் தற்கொலைகள் போன்றவற்றிற்கு அதிக அளவில் அந்நோயாளிகள் ஏதுவாவதும் இதற்கான ஒரு காரணமாகும். தற்கொலைக்கான ஆபத்தை மருத்துவங்கள் அதிகரிக்கின்றனவா எனத் தெளிவாகவில்லை. தற்போது சிகிச்சை பெற்று வருவோரும், முன்னர் சிகிச்சை பெற்று வந்தவர்களும் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டு இழுக்கு அடையலாம்.


கடந்த பல நூற்றாண்டுகளாக, மனத் தளர்ச்சியைக் கண்டறிதல் மற்றும் அதன் காரணங்களைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை, இவை மனத் தளர்ச்சியின் பல கூறுகளை இன்னமும் ஆராய்ச்சி விவாதங்களின் மையக் கருத்தில் கொள்ளவில்லை எனினும், பரிணாமத்திற்கு உள்ளாகி வருகின்றன. உள ரீதியான, உள - சமூக ரீதியான, மரபு வழியான, பரிணாம வழியான மற்றும் உடல் ரீதியான காரணிகள் இந்நோய்க்குக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. சில வகை மருந்துகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வது மனத் தளர்ச்சியின் அறிகுறிகளுக்கு காரணமாகவும் இருக்கலாம்; அவற்றை மோசமடையவும் செய்யலாம். தனி நபர் குண நலன், ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளும் முறைமை மற்றும் கற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் உளவியல் சிகிச்சை முறைமைகள் அமைந்துள்ளன. உடல் ரீதியான பெரும்பான்மையான கருத்தாக்கங்கள் செரோட்டோனின், நோர்பைன்ஃபெரைன், டோபமைன் போன்ற மெனோமைன் வேதிப் பொருட்களைக் குவி மையப்படுத்துகின்றன. இவை இயற்கையாகவே மூளையில் இருப்பவை மற்றும் நரம்பணுக்களின் இடையிலான தொடர்பிற்குத் துணை புரிபவை.

பொருளடக்கம்

[தொகு] அறிகுறிகளும் குறிகளும்

பெரும் மனத் தளர்ச்சியானது ஒரு நபரின் குடும்ப வாழ்க்கை தனிப்பட்ட உறவுகள், பணி, அல்லது பள்ளி வாழ்க்கை, உறக்கம், உண்ணும் பழக்கம் மற்றும் பொதுவான உடல் நலம் ஆகியவற்றைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கிறது.[1] செயல்பாடு மற்றும் பொதுவான நலவாழ்வு ஆகியவற்றின் மீது இதன் பாதிப்பானது நாள்பட்ட நீரிழிவு போன்ற நோய் நிலைகளுடன் ஒப்பிடப்படுவதாக உள்ளது.[2]

பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வுக்கு உள்ளாகும் ஒரு நபர் மிகவும் தாழ்ந்த ஒரு மன நிலையை வெளிப்படுத்துகிறார். இது அவரது வாழ்வின் பல்வேறு கூறுகளையும் பாதித்து, முன்னர் அவருக்கு மகிழ்வூட்டிய நடவடிக்கைகளில் தற்போது மகிழ்வுறுவதில் முனைப்பின்மையை வெளிப்படுத்துகிறது. மனத் தளர்ச்சி கொண்டோர், சற்றேனும் மதிப்பற்ற விடயங்களை எண்ணி அசைபோடுதல், தேவையற்ற குற்றவுணர்வு அல்லது வருத்தம், தவிப்பு, நம்பிக்கை இழப்பு மற்றும் சுய வெறுப்பு ஆகியவற்றை முன்னீடுபாடாகக் கொண்டுள்ளனர்.[3] மிகத் தீவிரமான நிகழ்வுகளில், மனத் தளர்ச்சி கொண்டுள்ளோர் உளப்பிணியின் அறிகுறிகளையும் கொண்டிருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் பொதுவாக, விரும்பத்தகாதவையான, மருட்சி அல்லது, உளமாயம் போன்ற அறிகுறிகளை உட்கொண்டிருக்கும்.[4] பிற அறிகுறிகள், கவனம் செலுத்துவதில் மற்றும் நினைவாற்றலில் குறைவு (இது மனச்சோர்வு, உளப்பிணி ஆகிய பண்புக் கூறுகளைக்[5] கொண்டோரில் குறிப்பாகக் காணப்படுவதாகும்), சமூக நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்வதான தன்மை, பாலியல் ஈடுபாட்டுக் குறைவு மற்றும் மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் ஆகியவற்றை உட்கொள்ளும்.

மனத் தளர்ச்சி நோயாளிகளிடையே உறக்கமின்மை பொதுவானதாகும். இதற்கு உருமாதிரியான ஒரு உதாரணம் சொல்வதென்றால், ஒரு நபர் மிகவும் அதிகாலையில் உறக்கத்திலிருந்து விழிப்படைந்து பிறகு மீண்டும் உறங்க முடியாத நிலையைக் கூறலாம்.[6] இருப்பினும், உறக்கமின்மை என்பது உறங்குவதில் சிரமம் என்னும் நிலையையும் உள்ளடக்குகிறது.[7] மனத் தளர்ச்சி கொண்டோரில் குறைந்த பட்சமாக 80 விழுக்காட்டினரையாவது உறக்கமின்மை பாதிக்கிறது.[7] மிகு உறக்கம் அல்லது நீண்ட நேர உறக்கம் என்பதும் நிகழலாம்.[6] இது மனத் தளர்ச்சி கொண்டோரில் 15 விழுக்காட்டின்ரைப் பாதிக்கிறது.[7] சில மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவங்கள், அவற்றின் தூண்டுதல் விளைவினால், இவ்வாறான உறக்கமின்மையைத் தோற்றுவிக்கலாம்.[8]

மனத் தளர்ச்சியுடைய ஒரு நபர் ஒன்றிற்கும் மேற்பட்ட பல அறிகுறிகளைக் காட்டலாம். இவற்றில், சோர்வு, தலை வலி, செரிமானப் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும். உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) தகுதி நிலைக் கூற்றின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் இத்தகைய உடல் ரீதியான பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை.[9] பொதுவாக, பசியுணர்வு குறைகிறது. இதன் காரணமாக எடை குறைகிறது. ஆயினும், அதிகரித்த பசியுணர்வு மற்றும் எடை கூடுதல் ஆகியவையும் நிகழலாம்.[3] குடும்பத்தினரும் நண்பர்களும் பாதிப்புற்ற நபரின் நடத்தையில் கிளர்ச்சி அல்லது சோம்பல் ஆகியவற்றைக் கண்ணுறலாம்.[6]

குழந்தைகளைப் பொறுத்தவரையில், மனத் தளர்ச்சி என்னும் கருத்துரு மிகவும் சர்ச்சைக்குட்பட்டதாக உள்ளது. காரணம், சுய- பிம்ப உணர்வு என்பது எப்போது ஒரு குழந்தைக்கு உருவாகிறது, எப்போது அது முழுவதுமாக நிலை பெறுகிறது என்பதின் மீதான கருத்தின் அடிப்படையிலேயே இது அமையும். மனத் தளர்ச்சிக்கு ஆட்பட்ட குழந்தைகள் தளர்ச்சி என்னும் நிலையை விட சிடுசிடுவென்ற மன நிலையையே பெரும்பாலும் வெளிப்படுத்துவர்.[3] தமது வயது மற்றும் நிலையைப் பொறுத்து மாறுபட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.[10] பெரும்பாலானோர் பள்ளியில் ஆர்வமிழந்து, கல்வித் திறனில் வீழ்ச்சி அடைகின்றனர். இவர்களைத் தொட்டாற்சிணுங்கி, நச்சரித்தல், சார்புற்றிருத்தல் அல்லது பாதுகாப்பின்மை கொண்டிருத்தல் ஆகிய குண நலன்களால் விவரிக்கலாம்.[6] பொதுவான மன நிலை மாற்றம் என இத்தகைய அறிகுறிகளைத் தவறாகக் கண்டறிவதனால், நோய கண்டறிதல் தாமதமடைகிறது.[3] கவனக் குறைவு அதிநடவடிக்கைக் கோளாறு என்பதனுடனும் மனத் தளர்ச்சி தொடர்புற்று, அதன் விளைவாக நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகிய இரண்டையும் சிக்கலுக்கு உள்ளாக்கலாம்.[11]

மனத் தளர்ச்சி கொண்டோரில் வயது முதிர்ந்தவர்கள், மிக அண்மையில் விளைந்ததான புரிதிறன் குறைபாட்டினைக் கொண்டிருக்கலாம். இதை ஞாபகமறதி[5], மேலும் குறிப்பாக, மெதுவடைந்த இயக்கம்[12] ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். வயதானவர்களிடையே மனத் தளர்ச்சி பெரும்பாலும் வாதம், பிற இதய நோய்கள், பார்க்கின்ஸன் நோய் மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆகிய உடல் ரீதியான காரணங்களுடன் சேர்ந்து இருப்பதாகக் காணப்படுகிறது.[13]

[தொகு] காரணங்கள்

உயிரியல், உளவியல் மற்றும் சமூகவியல் சார்ந்த காரணிகள் அனைத்துமே மனத் தளர்ச்சியை உருவாக்குவதில் பங்களிக்கின்றன என்னும் கருத்தை உயிரிய-உளலிய-சமூகலிய மாதிரி முன்வைக்கிறது.[14] பழக்கம் காரணமாக இறுக்கத்திற்கு ஆளாதல் (diathesis–stress model) என்னும் உருமாதிரி, முன்னரே இருப்பதான ஊறுக்கு ஆளாகும் நிலை அல்லது பழக்கம், இறுக்கமான வாழ்க்கை நிகழ்வுகளால் தூண்டப்பட்டு மனத் தளர்ச்சியை விளைவிப்பதாகக் கூறுகிறது. முன்னரே இருப்பதான, இத்தகைய ஊறுக்கு ஆளாகும் நிலையானது மரபணுக்கள் வழியாகவோ[15][16] அல்லது திட்டமுறை காரணமாகவோ இருக்கலாம். முன்னது, பிறப்பு மற்றும் வளர்ப்பு ஆகியவற்றின் ஊடாடுதலைக் குறிப்பாகக் குறிப்பிடுகையில், இரண்டாவதானது, இளமைப் பருவத்தில் புகட்டிய உலக அறிவினின்றும் வெளிப்படுவதாக உள்ளது.[17]

இத்தகைய முன்மாதிரிகள் பட்டறிவு சார்ந்த ஆதரவைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, நியூசிலாந்து நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் மனத் தளர்ச்சி பற்றி ஆய்ந்தறிய முன்னோக்கிய அணுகுமுறை ஒன்றை மேற்கொண்டனர், அதாவது துவக்கத்தில் இயல்பான கூட்டுக் குடும்ப முறையில் இருந்தவர்களில் பின்னர் மனத் தளர்ச்சி எவ்வாறு உருவானது என்பதைக் காலப் போக்கில் ஆவணப்படுத்தினர். மிகவும் இறுக்கமான வாழ்க்கை நிகழ்வுகளை அனுபவித்தவர்கள் மனத் தளர்ச்சியை மேற்கொண்டும் அடைவதற்கான வாய்ப்புகளை செரட்டோனின் கடத்தி (5-ஹெச்டீடீ) மரபணுவில் உள்ள மாறுபாடுகள் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். குறிப்பாகச் சொல்வதென்றால், அத்தகைய நிகழ்வுகளை மனத் தளர்ச்சி தொடரக் கூடும்; இருப்பினும்,ஒன்று அல்லது இரண்டு எதிரெதிர் பண்புக் கூறுகளை கொண்டோரிடத்தில் அது தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.[15] மேலும், சுவீடன் நாட்டு ஆய்வு ஒன்று இவ்வாறு உரைத்தது: பாராம்பரியக் கூறு (தனி நபர்களில் மனத் தளர்ச்சி உண்டாவதற்கான சாத்தியக் கூறு எந்த அளவுப் பாகையில் மரபணு வேறுபாடுகளுடன் தொடர்புற்றுள்ளது என்பதை விவரிப்பதாகும்) பெண்களில் 40 விழுக்காடு மற்றும் ஆண்களில் 30 விழுக்காடு என்பதாக உள்ளது.[18] பரிணாம உளவியலாளர்கள் மனத் தளர்ச்சிக்கான மரபு அடிப்படை, இயற்கையாகவே தேர்ந்தெடுத்தல் என்பதன் தக அமைவு நிகழ்வின் வரலாற்றில் ஆழப் புதைந்திருப்பதாக உரைக்கிறது. பெரும் மனத் தளர்ச்சியுடன் தொடர்புடைய பொருள் தூண்டிய மனத் தளர்ச்சிச் சீர்குலைவு, மருந்துப் பயன்பாடு, தவறான மருந்துப் பயன்பாடு, அல்லது சில மயக்க மற்றும் வசிய மருந்துகளின் விளைவான விலகல் அறிகுறிகள் ஆகியவற்றுடன் அவ்வப்போது தொடர்புபடுத்தப்படுகிறது.[19][20]

[தொகு] உயிரியல் காரணங்கள்

[தொகு] ஒற்றை அமீன் கருதுகோள்

பெரும்பாலான மனத் தளர்ச்சி -எதிர் மருத்துவங்கள் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான செனாப்டிக் பிளவுகளில் உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றை அமீன்களின் (monoamines) - அதாவது செரட்டோனின், நோர்பைன்ஃபெரின் மற்றும் டோபமைன் போன்ற நரம்புக்கடத்திகளின் - அளவுகளை அதிகரிக்கின்றன. சில மருத்துவங்கள் நேரடியாகவே ஒற்றை அமீன் ஏற்பிகளைப் பாதிக்கின்றன.


ஒரு நரம்பின் வேரிழை மற்றும் மற்றொன்றின் சிறு நரம்பிழை ஆகியவற்றிற்கு இடையிலான இணைவளைவின் ஒரு வரைபடம்.இணைவளைவுகள் நரம்பிழைகளின் சிறப்பு இடைவெளிகளாகும்.வேரிழை முனைமையத்தை அடையும் மின் தூண்டுதல்கள், வேதிச் செய்தித் தொகுப்புக்களை (நரம்புக்கடத்திகள்) விடுவிக்கின்றன. இவை அடுத்துள்ள சிறு நரம்பிழையின் மீதுள்ள ஏற்பிகளின் இணைவளைவுகளின் பிளவுகளில் பரவி, இரண்டாவதாக உள்ள வேரிழையில் ஒரு மின் தூண்டுதல் உந்தப்படுவதை தற்காலிகமாகப் பாதிக்கின்றன. நரம்புக் கடத்திகளை விடுவித்ததும் அவை விரைவாக வளர்சிதை மாற்றம் அடைகின்றன அல்லது நரம்பு வேரிழையில் மீண்டும் உந்தப்படுகின்றன. மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள் இந்தச் செயல்முறைகளின் ஒட்டு மொத்த சமநிலையின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

செரட்டோனின் பிற நரம்புக்கடத்தி அமைப்புகளை ஒழுங்கமைப்பதில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது. குறைவான செரட்டோனின், இந்த அமைப்புகள் அசாதாரணமான மற்றும் ஒழுங்கற்ற முறைகளில் வேலை செய்ய அனுமதிக்கலாம்.[21] "இசைவுடமை கருதுகோள்" (permissive hypothesis), குறைவான செரட்டோனின் அளவுகள் மற்றொரு ஒற்றை அமீன் நரம்பணுக் கடத்தியான நோர்பைன்ஃபெரின் அளவுகள் குறைவதை ஊக்குவிப்பதாகக் கூறுகிறது.[22] சில மனத் தளர்ச்சி - எதிர் மருந்துகள் நோர்பைன்ஃபெரின் அளவுகளை நேரடியாகவே அதிகரிக்கின்றன. மற்றவை மூன்றாவது ஒற்றை அமீன் நரம்பணுக்கடத்தியான டோபமைனின் அளவை அதிகரிக்கின்றன. இவ்வாறான ஆய்வுக் கண்டறிதல்களின் காரணமாக, மனத் தளர்ச்சியின் ஒற்றை அமீன் கருதுகோள் உருவானது. தற்காலத்தியக் கருத்துரு, சில நரம்புக்கடத்திகளின் குறைபாடுகள் மனத் தளர்ச்சியில் அவற்றின் ஒத்த கூறுகளுக்குப் பொறுப்பானவை எனக் கூறுகிறது. "விழிப்பாக இருத்தல், ஆற்றல் ஆகியவற்றிற்கு நோர்பைன்ஃபெரின் தொடர்புடையதாக இருக்கலாம்; அதே நேரம் கவனம் செலுத்துதல், வாழ்வில் ஆர்வம் ஆகியவற்றுடனும் அது தொடர்பு கொண்டுள்ளது. செரட்டோனின் குறைவு, கவலை, மிகை விருப்பு, விரும்பா இணக்கம் ஆகியவற்றுடன் தொடர்புறுகிறது. கவனம் செலுத்துதல், ஊக்குவிக்கப்படுதல், இன்பம் அனுபவித்தல், வெகுமதி மற்றும் வாழ்வில் ஆர்வமுடமை ஆகியவற்றுடன் டோபமைன் தொடர்புற்றுள்ளது.[23] இந்தக் கருத்துருவை முன்வைப்பவர்கள் மிகவும் முதன்மையாக உள்ள அறிகுறிகளைப் பாதிப்பதான, இயக்கவியல் கொண்ட மனத் தளர்ச்சி - எதிர் மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கின்றனர். கவலை மற்றும் எரிச்சல் உணர்வு அதிகம் கொண்ட நோயாளிகளுக்கு எஸ்எஸ்ஆர்ஐ அல்லது நோர்பைன்ஃபெரின் ரெபுடேக் தணிப்பி கொண்டு சிகிச்சை அளித்தல் வேண்டும்; ஆற்றல் மற்றும் வாழ்வில் ஆர்வம் இழந்தவர்களுக்கு நோர்பைன்ஃபெரின் மற்றும் டோபமைன் ஆகியவற்றை அதிகரிக்கும் மருத்துவத்தை அளிக்க வேண்டும்.[23]

ஆற்றல் வாய்ந்த மனத் தளர்ச்சி எதிர் மருத்துவங்கள், ஒற்றை அமீன் அளவுகளை அதிகரிப்பதில் வகிக்கும் பங்கு பற்றிய மருந்தகக் கணிப்புகள் மட்டும் அல்லாது, உளவியல் மரபணு தொடர்பான அண்மைய ஆய்வுகள், முதன்மையான ஒற்றை அமீன் பணியில் தோற்ற மாறுபாடுகள் (phenotypic variation) ஓரளவேனும் மனத் தளர்ச்சியுடன் தொடர் கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றன. இவ்வாறான கண்டுபிடிப்புகள் ஒரு புறம் இருப்பினும், மனத் தளர்ச்சிக்குக் காரணம் ஒற்றை அமீன் குறைபாடு மட்டுமே அல்ல.[24] கடந்த இருபது ஆண்டுகளில், இவ்வாறான ஒற்றை அமீன் கருதுகோளின் வரம்புகளை ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. இக்கருதுகோள் மனத் தளர்ச்சிக் காரணியை போதுமான அளவு விளக்கவில்லை என உளவியலாளர் சமூகம் அழுந்தக் கூறியுள்ளது.[25] இதற்கு எதிர் வாதமாக எம்ஏஓ தணிப்பிகள் மற்றும் எஸ்எஸ்ஆர்ஐ ஆகியவற்றின் மூலம் மன நிலை ஊக்க விளைவு உருவாவதற்குப் பல வாரங்கள் ஆகும் என்றும், ஆனால் ஒற்றை அமீன் வழியான ஊக்கம் சில மணி நேரங்களிலேயே கிடைக்கப் பெறுமென்றும் கூறப்படுகிறது. இது குறித்த மற்றொரு எதிர் வாதம், ஒற்றை அமீன் இழப்பை உருவாக்கும் மருந்தியல் செயலிகளின் மீதான சோதனைகளின் அடிப்படையில் உள்ளது. மையமாகக் கிடைக்கப் பெறும் ஒற்றை அமீனின் அளவை ஆய்ந்து குறைக்கும் செயலால், மருத்துவம் பெறாத மனத் தளர்ச்சி நோயாளிகளின் மன நிலை சற்றே தாழ் நிலை அடையலாம் என இது உரைக்கிறது. இவ்வாறான குறைவு ஆரோக்கியமான மக்களின் மன நிலையைத் தாழ்நிலைக்கு உள்ளாக்காது.[24] ஆற்றலுள்ள சிகிச்சையாக இருப்பதற்கு, இவ்வாறான மனத் தளர்ச்சி எதிர் மருந்துகளுக்கு முழுமையான[clarification needed] ஒரு ஒற்றை அமீன் அமைப்பு[26] தேவை. டியாப்டைன் மருந்து ஒரு செரட்டோனின் ரெபுடேக் அதிகரிப்பியாகும் மற்றும் ஓபிபிரமால் மருந்து ஒற்றை அமீன் அமைப்பின் மீது எந்தவொரு பாதிப்பும் கொண்டிருப்பதில்லை. இருப்பினும், இவற்றைப் போன்ற சில மருந்துகள் மனத் தளர்ச்சி எதிர் மருத்துவத்தின் பண்புக் கூறுகளைக் கொண்டுள்ளன.[மேற்கோள் தேவை] ஒற்றை அமீன் கருதுகோள் ஏற்கனவே வரம்புகளுக்கு உடபட்டதாக உள்ளது. அதனைப் பலருக்கும் பொருந்துவதான ஒரு கருத்துருவாக சந்தைப்படுத்துகையில், அது, "சமநிலை இழந்த வேதிப் பொருட்கள்" என்பதாக, மிகவும் எளிமைப்படுத்திய ஒரு கருத்துருவாக அமைந்து விடுகிறது.[27]

வாழ்வில் இறுக்கமான சூழல் அனைவரிலும் அல்லாது சில நபர்களில் மட்டும் ஏன் மனத் தளர்ச்சி நிகழ்வுகளுடன் தொடர்புற்றுள்ளது என்பதை, 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த மரபணு - சூழல் ஊடாடுதல் (gene-environment interaction (GxE)) என்பதன் மீதான ஆய்வு விளக்க முற்பட்டது. செரட்டோனின் கடத்தியுடன் தொடர்புடைய பகுதியின் (5-ஹெச்டீடீஎல்பிஆர்) எதிரெதிர் பண்புக்கூறு மாறுபாடுகளை சார்ந்திருப்பதாக இது கூறியது.[28] 2009ஆம் ஆண்டிலான ஒரு பெரும் ஆய்வு வாழ்வின் இறுக்கமான நிகழ்வுகளுடன் மனத் தளர்ச்சி தொடர்புற்றுள்ளது; ஆயினும், 5-ஹெச்டீடீஎல்பிஆர் உடன் உள்ள தொடர்புக்கான ஆதாரம் இல்லை என கண்டறிந்தது.[29] 2009ஆம் ஆண்டின் மற்றொரு பெரும் ஆய்வு, இக்கருத்துடன் உடன்பட்டது.[30] இதன் மீதான ஆய்வுகளின் ஒரு மறு ஆய்வு 2010ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இது, சூழல் காரணமான பாதகங்களை மதிப்பிடும் முறைமைகள் மற்றும் இவ்வாறான ஆய்வுகளின் முடிவுகள் ஆகியவற்றின் இடையில் சீரான ஒரு தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தது. 2009ஆம் ஆண்டைச் சார்ந்த இரண்டு பெரும் பகுப்பாய்வுகளும் எதிர் - மறைச் சார்புடைய ஆய்வுகளே எனவும் இவை பாதகங்கள் பற்றி சுயமாக அளிக்கப்பட்ட அறிக்கைகளையே சார்ந்திருந்தன என்றும் இது கண்டறிந்தது.[31]

[தொகு] பிற கோட்பாடுகள்

மனத் தளர்ச்சிக்கு ஆளான நோயாளிகளின் மீது செய்யப்பட்ட காந்த ஒத்திசைவு பிம்பமுறைமை (MRI) அவர்களது மூளையின் கட்டமைப்பு அவ்வாறு மனத் தளர்ச்சிக்கு ஆளாகாதோரிடமிருந்து பல்வேறு வகையிலும் மாறுபட்டிருப்பதாகக் காட்டியுள்ளது. இந்த முடிவுகளில் ஓரளவு முரண்பாடு இருப்பினும், பெரும் பகுப்பாவுகள் மனத் தளர்ச்சி கொண்டோரில், மூளைப் பின்மேட்டின் சிறிய கனபரிமாணங்கள்[32] மற்றும் அதிக எண்ணிக்கையிலான மிகைப்பதற்ற திசு மாற்றங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரம் இருப்பதாகக் காட்டியுள்ளன.[33] வாழ்வின் பிற்காலப் பகுதியில் மனத் தளர்ச்சி பெற்ற நோயாளிகளின் மிகை உணர்வு நிலை நாளவட்டம் சார் மனத் தளர்ச்சி (vascular depression) என்னும் ஒரு கோட்பாடு உருவாக வழிவகுத்தது.[34]

மன நிலை, நினைவாற்றல் ஆகிய இரண்டிற்கும் மையமான மூளைப் பின்மேடு[35] நரம்புகள் மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையில் இணைப்பு இருக்கக் கூடும். மூளைப் பின்மேட்டு நரம்பணுக்களின் இழப்பு சில மனத் தளர்ச்சி நோயாளிகளிடையே காணப்பட்டுள்ளது. இது பழுதடைந்த நினைவாற்றல் மற்றும் சிறு அளவிலான தளர்ச்சி கொண்ட மனநிலையுடன் தொடர்பு கொண்டுள்ளது. மூளையில் செரட்டோனின் அளவுகளை மருந்துகள் அதிகரிக்கலாம். இதன் காரணமாக திசு உருவாக்கத்தை ஊக்குவித்து, மூளைப் பின்மேட்டின் மொத்த அளவை அதிகரிக்கலாம். இந்த அதிகரிப்பானது மன நிலை மற்றும் நினைவாற்றலின் மீட்சிக்கு உதவலாம்.[36][37] இதைப் போன்ற தொடர்புகள் மனத் தளர்ச்சி மற்றும் பின்புற மூளை மேலுறை ஆகியவற்றின் இடையிலும் காணப்பட்டு உணர்வு பூர்வமான நடத்தையில் கட்டுப்பாட்டை ஈடுபடுத்துவதாக உள்ளன.[38] மூளையிலிருந்து - பெறப்பட்டும் ஊட்டச்சத்துக் காரணியானது brain-derived neurotrophic factor (BDNF), திசு உருவாக்கத்திற்குப் பொறுப்பான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இரததப் பிளாசுமாவில் இந்த பிடிஎன்எஃப் அளவானது சாதாரண மனிதர்களை விட, மனத் தளர்ச்சி நோயாளிகளில் மிகவும் (அதாவது மூன்று பங்கிற்கும் மேலாக) குறைந்து காணப்படுகிறது. இரத்தத்தில் பிடிஎன்எஃப் அளவுகளை மனத் தளர்ச்சி எதிர் சிகிச்சை அதிகரிக்கிறது. வேறு பல சீர்குலைவுகளிலும் குறைந்த அளவிலான இரத்த பிடிஎன்எஃப் அளவுகள் காணப்பட்டாலும், மனத் தளர்ச்சிக்கு இது காரணம் என்பதற்கும் மற்றும் மனத் தளர்ச்சி எதிர் மருந்துகளின் இயக்கமுறைமைக்கும் ஓரளவு ஆதாரம் உள்ளது.[39]

அடிமூளைப்பகுதி - அடிமூளைச் சுரப்பி - அண்ணீரக அச்சு ஆகியவற்றின் மிகு செயற்பாடு பெரும் மனத் தளர்ச்சி விளைவதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்பதற்கு ஓரளவு ஆதாரம் உள்ளது. இது இறுக்கமான சூழலுக்கு மூளையில் நாளமில்லா நரம்பு அளிக்கும் பதிலளிப்பை ஒத்ததாகும். கார்ட்டிசோல் என்னும் வளரூக்கி மற்றும் விரிவுபட்ட மூளையின் அடிப்பகுதி மற்றும் அண்ணீரகச் சுரப்பிகள் ஆகியவற்றின் அதிகரித்த அளவுகள் நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள் பெரும் மனத் தளர்ச்சி உள்ளிட்ட சில மனநலக் கோளாறுகளுக்கான காரணிகளாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. அடிமூளையில் கார்ட்டிகோடிராப்பின் விடுவிக்கும் இயக்குநீர் அதிக அளவில் சுரப்பதான செயற்பாடு இதை ஊக்குவிப்பதாகக் கருதப்படுகிறது. இது புரிதிறன் மற்றும் உணர்வெழுச்சி ஆகியவற்றுடன் ஈடுபடுவதாக உள்ளது.[40]

பருவம் அடைகையிலும், மகப்பேற்றிற்குப் பின்னரும் மற்றும் மாதவிடாய் நின்ற பருவத்தில் குறைவதுமான எஸ்ட்ரோஜன் என்னும் இயக்குநீர் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகளுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளது.[41] இதற்கு மறுபுறம், பருவமடைவதற்கு முன்னதான மற்றும் மகப்பேற்றிற்குப் பிந்தைய காலத்தில் எஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவது, மனத் தளர்ச்சிக்கான ஆபத்தின் அதிகரிப்புடன் தொடர்புற்றுள்ளது.[41] எஸ்ட்ரோஜன் அளவுகள் எதிர்பாராது குறைதல், அல்லது அவற்றில் ஏற்ற இறக்க நிலைகள் அல்லது தொடர்ந்து அவை குறைவான அளவிலேயே இருத்தல் ஆகியவை தாழ் மனநிலையுடன் தொடர்புறுகின்றன. மகப்பேற்றுக்குப் பிந்தைய காலம், மாதவிடாய் வற்றிய அல்லது நின்ற காலம் ஆகிய காலகட்டங்களில் எஸ்ட்ரோஜன் அளவுகளை நிலை நிறுத்துவதும், மீட்பதும் மனத் தளர்ச்சி்யிலிருந்து மருத்துவ ரீதியான மீட்சியைச் செயல்படுத்துவதாக காணப்பட்டுள்ளன.[21][23]

ஒட்டுமொத்தமான உயிரணு இயக்கத்திற்குத் தேவையான உயிரணு ஊனீருக்கு அவசியமான மூலக்கூறுகளின் சாத்தியமான பங்கினைப் பற்றியும் பிற ஆராய்ச்சிகள் ஆய்ந்துள்ளன. பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவின் அறிகுறிகள், ஏறத்தாழ உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் நோய்த்தொற்றுக்களுடன் போரிடுகையில் உடலின் பதிலளிப்பான சுகவீன நடத்தை என்பதை ஒத்ததாக உள்ளன. உயிரணு ஊனிர் சரியான முறையில் சுற்றிவராத காரணத்தினால், உடலின் ஒத்திசைவு பழுதுபடுவதன் ஒரு வெளிப்பாடாக மனத் தளர்ச்சி இருக்கலாம் என்ற ஒரு சாத்தியம் இதன் காரணமாக எழும்புகிறது.[42] இத்தகைய நோய்ப்பரவலுக்கு ஏதுவான உயிரணு ஊனீர் மனத் தளர்ச்சிக் கோளாறில் வகிக்கும் பங்கின் மீதான மருந்தகப் பெரும் ஆய்வு ஒன்று, மனத் தளர்ச்சி நோயாளிகளில் ஐஎல்-6 மற்றும் டிஎன்எஃப்-α ஆகியவை இரத்தத்தில் அதிகச் செறிவு கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.[43]

[தொகு] உளவியல் ரீதியானவை

மனத் தளர்ச்சி உண்டாவதற்கும் மற்றும் அது நீடித்திருப்பதற்கும்[44] தனி நபர் பண்புக்கூறுகளும் அவற்றின் மேம்பாடும் முக்கியப் பங்கு கொண்டிருக்கின்றன. மேலும், எதிர்மறையான உணர்ச்சிப் பெருக்கு ஒரு பொதுவான முன்னீடாக உள்ளது.[45] எதிரிடை நிகழ்வுகளுடன் மனத் தளர்ச்சி நிகழ்வுகள் தீவிரமாக தொடர்புற்றிருந்தாலும், அவற்றை ஒருவர் எவ்வாறு எதிர் கொள்கிறார் என்னும் அவரது பண்புக்கூறு இதில் முக்கியப் பங்காற்றுகிறது.[46] மேலும், குறைந்த அளவிலான சுய மதிப்பு மற்றும் சுய தோல்வியுணர்வு, சிதைவுக்குள்ளான சிந்தனை ஆகியவையும் மனத் தளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன. மதப்பற்று மிக்கவர்களிடையே மனத் தளர்ச்சி நேர்வதற்கான வாய்ப்பு குறைவு; அவ்வாறு நேர்ந்தாலும், அது விரைவாக நீங்கி விடுவதாக உள்ளது.[47][48][49] மனத் தளர்ச்சியின் காரணிகள் மற்றும் அவற்றின் விளைவுகளைப் பிரித்துக் காண இயல்வதில்லை. இருப்பினும், மனத் தளர்ச்சி கொண்டோர் தமது சிந்தனையோட்டத்தைத் தாமே அறிந்து கொண்டு அதைச் சரிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தால், அவர்களது சுய மதிப்பு மற்றும் மன நிலை மேம்படுவதைக் காண முடிகிறது.[50]

ஆரோன் டி. பெக் (Aaron T. Beck) என்னும் அமெரிக்க உளவியலாளர், ஜார்ஜ் கெல்லி (George Kelly) மற்றும் ஆல்பர்ட் எல்லிஸ் (Albert Ellis) ஆகிய முன்னோடிகள் உருவாக்கிய கருத்துருவைப் பின்பற்றி, தற்போது மனத் தளர்ச்சியின் புரிதிறன் மாதிரியாக அறியப்படும் ஒரு உருமாதிரியை 1960ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் உருவாக்கினார். மனத் தளர்ச்சியின் மூலக் கூறுகளாக அவர் மூன்று விடயங்களைக் கூறினார்: அவை, ஒருவரது சுய மதிப்பீடு, உலகம் மற்றும் அவரது எதிர்காலம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் பிழைகள் கொண்டதாக எதிர்மறையான எண்ண ஓட்டம், மனத் தளர்ச்சி சிந்தனையின் மீண்டும் மீண்டும் வருவதான பாங்கு மற்றும் தகவலைச் செய்முறைப்படுத்துவதில் சிதைவு ஆகிய மும்மைக் கூற்றுத் தொகுதியாகும்.[51] இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அவர் புரிதிறன் நடத்தை சிகிச்சைமுறை என்னும் ஒரு கட்டமைத்த நுட்பத்தை உருவாக்கினார்.[52] மார்ட்டின் செலிக்மான் (Martin Seligman) என்னும் அமெரிக்க உளவியலாளரின் கருத்துப்படி, மனிதர்களில் உண்டாகும் மனத் தளர்ச்சி, ஆய்வக விலங்குகளின் கற்றறிந்த இயலாமை (learned helplessness) என்பதை ஒத்ததாக உள்ளது. இவை தம்மால் தப்பிக்க இயலும் என்று அறிந்த பின்னரும் விரும்பத்தகாத சூழல்களில் தொடர்ந்து இருக்கின்றன. காரணம், அச்சூழலைத் தங்களால் கட்டுப்படுத்த இயலாது என்று துவக்கத்தில் அவை அறிந்தமையே ஆகும்.[53]

1960ஆம் ஆண்டுகளில், இங்கிலாந்து உளவியலாளர் ஜான் பௌல்பி John Bowlby, பற்றுடமைக் கோட்பாடு (Attachment theory) என்பதை உருவாக்கினார். இக்கோட்பாடு, ஒரு குழந்தைக்கும் அதனை கவனித்துக் கொண்ட வயது வந்தவருக்கும் அதன் குழந்தைப் பருவத்தில் இருந்த உறவு முறை மற்றும் அக்குழந்தைக்குப் பிற்காலத்தில் வரக்கூடிய மனத்தளர்ச்சி ஆகியவற்றிற்கு இடையில் தொடர்பு இருப்பதாக உரைத்தது.

குறிப்பாக, "மிகச் சிறு வயதில் பெற்றோர் அல்லது கவனிப்பாளரின் பிரிவு அல்லது நிராகரிப்பு (இது தான் அன்பு செலுத்தப்படத் தகுதியில்லை என்ற உணர்வை அக்குழந்தைக்கு அளிக்கக் கூடும்) ஆகியவை உள்ளார்ந்து ஒரு பாதுகாப்பின்மை உணர்வு உருவாவதற்குக் காரணமாகின்றன.... தம்மை அன்புக்கு அல்லது நம்பிக்கைக்கு அருகதையற்றவர் என்று உள்ளார்ந்து உணர்ந்து கொள்வதான புரிதிறன், பெக் முன்வைத்த புரிதிறன் மும்மைத்தொகுதி என்னும் கருத்துருவுக்கு இசைவு கொண்டுள்ளது.[54] பற்றுடமைக் கோட்பாட்டின் அடிப்படை நெறிகளை பல ஆய்வுகள் தூக்கி நிறுத்தியுள்ளன. இருப்பினும், துவக்க காலத்து பற்றுடமை பற்றிய சுய- அறிவிப்பு, பின்னாளில் நேரும் மனத் தளர்ச்சியுடன் வெளிப்படையான அளவு தொடர்பு கொண்டுள்ளதா என்பதைப் பொறுத்த ஆராய்ச்சி இன்னும் முடிவுறவில்லை.[54]

மனத் தளர்ச்சிக்கு ஆளான நபர்கள் பல நேரங்களில் எதிர்மறை நிகழ்வுகளுக்கு தம்மைத்தாமே பழி கூறிக் கொள்கின்றனர்.[55] 1993ஆம் ஆண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்தவர்களிடையே நிகழ்த்திய ஒரு ஆய்வு, எதிர்மறை நிகழ்வுகளுக்காக தம்மைத்தாமே பழி கூறிக் கொள்ளும் நபர்கள், நேர்மறை வெளிப்பாடுகளுக்காக தமக்குப் பாராட்டுக்களை வழங்கிக் கொள்வதில்லை என்று காட்டியது.[56] இந்தப் போக்கானது சோர்வுப் பண்பு அல்லது தோல்வி மனப்பான்மை வழி விளக்கமளிக்கும் போக்கு ஆகியவற்றிற்கு மூலப் பண்புக் கூறாகும்.[55] கனடா நாட்டு சமூகவியல் உளவியலாளரான ஆல்பர்ட் பண்டுரா (Albert Bandura) சமூகப் புரிதிறன் என்னும் கோட்பாட்டிற்காக அறியப்படுகிறார். மனத் தளர்ச்சி கொண்ட நபர்கள் தாங்கள் அடைந்த தோல்விகள் மற்றும் அவர்கள் வாழ்வில் வெல்ல முடியும் என்ற ஒரு தூண்டுதல் சமூகத்தின் தரப்பிலிருந்து கிடைக்கப் பெறாமை, ம்ன உளைச்சல் மற்றும் இறுக்கம் உள்ளிட்ட அவர்களது சொந்த உடல் மற்றும் உணர்வு நிலைக ஆகியவற்றின் அடிப்படையில் தங்களைப் பற்றி எதிர்மறையான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். இவை அவர்கள் தம்மைப் பற்றிக் கொண்டுள்ள கருத்தில் ஆதிக்கம் செலுத்தி சுய-திறத்தன்மை இன்மையை உருவாக்கலாம். அதாவது, தங்களது இலக்குகளை அடைவதற்குத் தேவையான முறையில் நிகழ்வுகளைத் தம்மால் கட்டுப்படுத்த இயலும் என அவர்கள் நம்புவதில்லை.[57]

மனத் தளர்ச்சிக்கு ஆளான பெண்களிடம் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனை, ஆரம்பகால வாழ்வில் தாயை இழந்தது, நம்பிக்கைக்கு உரித்தான ஒரு உறவு இன்மை, வீட்டில் பல குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு மற்றும் வேலையின்மை ஆகியவை வாழ்வின் இறுக்க உணர்வுகளோடு இணைந்து மனத் தளர்ச்சிக்கான அவர்களது ஆபத்தை அதிகரிப்பதாகச் சுட்டிக் காட்டுகிறது.[58] வயது முதிர்ந்தோரிடம் பெரும்பாலும் அவர்களது ஆரோக்கியப் பிரச்சினைகள், துணைவர்/ துணைவி அல்லது குழந்தைகள் ஆகியோரிடம் கொண்டுள்ள உறவுகளில் மாற்றங்கள், கவனிப்பு அளிப்பவர் என்ற நிலையிலிருந்து கவனிப்பு வேண்டுபவர் என்ற நிலைக்கு மாறுதல், மிகவும் வேண்டிய ஒருவரின் மரணம் அல்லது வயது முதிர்ந்த நண்பர்களிடமிருந்து (அவர்களுக்கே வயதாவதாலும், ஆரோக்கியப் பிரச்சினைகள் உருவாவதாலும்) சமூக உறவுகள் கிடைக்கப்பெறுதல் அல்லது அவற்றின் தரம் ஆகியவற்றிலான மாறுதல் ஆகியவை மனத் தளர்ச்சியின் காரணிகளாக உள்ளன.[59]

மனத் தளர்ச்சி பற்றிய புரிதலானது, உளவியலின் பிரிவுகளான உளவியல் பகுப்பாய்வு மற்றும் மனித நேயம் ஆகியவற்றிற்கும் பங்களித்துள்ளது. ஆஸ்திரிய நாட்டு உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் (Sigmund Freud) உளவியல் பகுப்பாய்விற்காக மிகவும் அறியப்பட்டவர். மனத் தளர்ச்சி அல்லது மனச் சோர்வு ஆகியவை ஒருவருடன் ஒருவருக்குள்ள உறவுகளின் இழப்பு[60][61] மற்றும் ஆரம்ப வாழ்க்கை அனுபவங்கள்[62] ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என இவர் கூறுகிறார். இருத்தலியல் (மனிதர்கள் உலகில் இருத்தலின் சாரம் என்ன என்ற தேடல்) சிகிச்சையாளர்கள் நிகழ்காலத்தின்[63] பொருள் மற்றும் எதிர்காலம் பற்றிய பார்வை ஆகிய இரண்டுடனும் மனத் தளர்ச்சியை இணைக்கின்றனர்.[64][65] மனிதநேயம் சார் உளவியல் என்பதன் நிறுவனரான அமெரிக்க உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ, (Abraham Maslow) மனிதர்கள் தங்களது தேவைகளைத் தாங்களே நிறைவேற்ற இயலாதபோது (அதாவது தங்களது முழுச் சக்தியையும் தாங்கள் உணராதபோது) மனத் தளர்ச்சி உருவாகலாம் என்று கருத்துரைக்கிறார்.[66][67]

[தொகு] சமூக ரீதியானவை

பொதுவாக, வறுமை மற்றும் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல் ஆகியவை மனநல நோய்கள் அதிகரிப்புடன் தொடர்புறுகின்றன.[44] குழந்தைளிடம் உடல்ரீதியான, உணர்வு முறையிலான மற்றும் பாலியல்தொடர்பான, தவறான நடத்தை அல்லது உதாசீனம் அவர்கள் தமது வாழ்வின் பிற்காலத்தில் மனத் தளர்ச்சி நோய்க்கு ஆளாவதற்கான ஆபத்தை அதிகரிப்பதுடன் தொடர்புற்றுள்ளன.[68] ஒரு குழந்தை தான் வளர்ச்சி அடையும் பருவத்தில்தான், சமூகத்தில் தான் எப்படி ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறது என்பதால் இந்தக் கருத்துக்குச் சிறந்த வரவேற்பு உள்ளது. ஒரு குழந்தையைக் கவனித்துக் கொள்பவர் அதைத் தவறாக நடத்தும்பொழுது, அது அக்குழந்தையின் தனிமனிதப் பண்பினைச் சிதைத்து மனத் தளர்ச்சி மட்டும் அல்லாது வேறு பல மனம் மற்றும் உணர்வுகளைப் பொறுத்த செயலிழப்புகளுக்கும் வழி வகுக்கும் என்பது திண்ணம். பெற்றோர் (குறிப்பாக தாய்) மனத் தளர்ச்சி கொண்டிருப்பது, அவர்களது மண வாழ்வில் கடுமையான மோதல்கள், பெற்றோரில் ஒருவரது மரணம் அல்லது குழந்தை வளர்ப்பில் இடையூறுகள் போன்ற குடும்பச் செயற்பாட்டில் இடையூறுகள் ஆகியவை மனத் தளர்ச்சி ஆபத்திற்கான கூடுதல் காரணிகள் ஆகும்.[44] இறுக்கமான வாழ்க்கை நிகழ்வுகள், பருவமடைந்த பின்னர் நிகழும் பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வுகளுடன் தீவிரமாகத் தொடர்புற்றுள்ளன.[69] இந்த முறையில் பார்க்கையில், சமூக நிராகரிப்புடன் தொடர்புடைய வாழ்க்கை நிகழ்வுகள் மனத் தளர்ச்சியுடன் குறிப்பாகத் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.[70][71] மீண்டும் மீண்டும் வருவதான மனத் தளர்ச்சி நிகழ்வுகளை விடவும், இதன் முதலாவது நிகழ்வையே இறுக்கமான வாழ்க்கை நிகழ்வுகளுடன் உடனடியாகத் தொடர்புறுத்த இயலும் என்னும் ஒரு கருத்து நிலவுகிறது. இது, காலப்போக்கில் மனத் தளர்ச்சி மீண்டும் மீண்டும் வருகிற காரணத்தால் நோயாளிகள் வாழ்க்கையின் இறுக்கத்திற்கு உணர்வேற்றம் கொண்டு விடக் கூடும் என்னும் கருத்துடன் இணக்கமுறுவதாக உள்ளது.[72][73]

இறுக்கமான வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் சமூக ஆதரவு ஆகியவற்றிற்கு இடையிலான உறவு என்பது வாதத்துக்குரிய பொருளாகவே இருந்து வருகிறது. சமூக ஆதரவின்மை என்பது இறுக்கமான வாழ்க்கைச் சூழல் மனத் தளர்ச்சிக்குக் கொண்டு செல்வதற்கான சாத்தியத்தை அதிகரிக்கக் கூடும்; அல்லது, சமூக ஆதரவின்மை என்பதே ஒரு இறுக்கமான வாழ்க்கை நிகழ்வாக மாறி, நேரடியாகவே மனத் தளர்ச்சியை விளைவிக்கக் கூடும்.[74] சுற்று வட்டாரத்தில் குற்றம், சட்டவிரோத மருந்துகள் ஆகியவற்றின் நடமாட்டம் போன்ற சமூகக் கோளாறுகள் மனத் தளர்ச்சிக்கான ஆபத்துக் காரணியாக இருக்கும் வாய்ப்புண்டு. இதற்கு மாறாக, மேம்பட்ட வசதிகள் ஒரு காக்கும் காரணியாக விளங்கலாம்.[75] பணியிடத்தில் பாதகமான சூழல், குறிப்பாக மிகவும் கடினமான மற்றும் முடிவெடுக்கும் அதிகாரமற்ற நிலை, மனத் தளர்ச்சியுடன் தொடர்புறுகின்றது. ஆயினும், இதற்கான காரணிகள் ஒத்திசையாமலும், குழப்பமாகவும் இருப்பதனால், இதை உறுதியாகக் கூற முடிவதில்லை.[76]

[தொகு] பரிணாம ரீதியானவை

பெரும் மனத் தளர்ச்சி, சில வேளைகளில், ஒரு தனிநபரின் இனப்பெருக்கத் தகுதியுடமையை அதிகரிப்பதாக பரிணாமக் கோட்பாடு கண்ணோட்டத்தில் ஒரு கருதுகோள் முன்வைக்கப்படுகிறது. மனத் தளர்ச்சியானது, பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட இயக்க முறைமைகளால் மனித இனப் பொது மரபணுவில் விதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்னும் கருத்தினை மனத் தளர்ச்சிக்கு பரிணாம அணுகுமுறை மற்றும் பரிணாம உளவியல், ஆகியவை தெரிவிக்கின்றன.[77] மரபு வழியிலான மனத் தளர்ச்சி அதிக அளவில் இருப்பது மற்றும் மனத் தளர்ச்சியின் சில கூறுகள் பற்றுடமை மற்றும் சமூகத் தரநிலை ஆகியவற்றுடன் தொடர்புடைய நடத்தை போன்றவறைக் கொண்டிருப்பது ஆகியவற்றை இது விளக்குவதாக இருக்கலாம்.[78] தற்போதைய நடத்தை முறைகளை, நவீனகாலச் சூழல்களில் அவை இணக்கமற்று காணப்படினும், உறவு முறைகள் அல்லது வளங்கள் ஆகியவற்றை நெறிப்படுத்துவதற்காக மேற்கொண்ட இணக்கம் என்று விளக்கலாம்.[79]

மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கையில், மனத் தளர்ச்சி குறித்து ஆலோசனை அளிக்கும் ஒரு மனநலவியலாளர், மனத் தளர்ச்சி என்பதை ஒரு உயிரிய-வேதியியல் சுகவீனம் அல்லது கோளாறு என்று காணாது இவ்வாறு காணலாம்: "ஒரு நபர், குற்றவுணர்வு, அவமானம் அல்லது நிராகரிப்பாகத் தாம் கருதுவது ஆகியவற்றால் உந்தப்பட்டு, பொதுவாக எதிர்மறையாகவே, தமது பயன் வீழ்ச்சியுற்றது என்ற எண்ணம் கொள்வது, பெரும்பாலும் ஒரு இனமெங்கும் பரிணமித்த உணர்வு நிரல்களின் தொகுதியாக விளங்கும் ஒரு கண்ணோட்டத்தினால் செயற்படுவதாக உள்ளது."[80] இத்தகைய எண்ணத் தொகுப்புக்கள் முற்காலத்தில், தங்களது திறன்கள் வீழ்ச்சி அடைந்தமையால் ஒதுக்கப்பட்ட வயதான வேட்டைக்காரர்களில் மேய்ச்சல் தடுக்கும் போக்காக இருந்தது. பிற்காலத்தில் இது, இன்றைய சமூகத்தில் ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே தொடர்ந்து காணப்படுகிறது. இத்தகைய ஒதுக்கப்படும் போக்கினால் தாம் பயனற்றவர் என்பதாக, ஏறத்தாழ ஒரு வசியம் போன்றே, உருவாகும் எண்ணமானது, நண்பர்கள் மற்றும் உறவினரின் ஆதரவைப் பெறக்கூடும். உடல் வலி, உடலுக்கு மேலும் ஊறு விளைவிக்கும் செயல்களைச் செய்ய விடாது தடுப்பதைப் போன்றே, மன ரீதியான ஒரு அவல உணர்வு, இடர்ப்பாடான நிலைகளில் அவசரமான அல்லது தவறான முறையில் இசைவுறுவதான பின்விளைவுகளைத் தடுப்பதாகப் பரிணமித்திருக்கலாம்.[81]

[தொகு] மருந்து மற்றும் மதுவின் பயன்பாடு

மேலும் பார்க்க: Mood disorder#Substance-induced mood disorders

டிஎஸ்எம்-IV கூற்றின்படி, மனத் தளர்ச்சியின் காரணம், "பொருளால் தூண்டப்படும் மனநிலை இடையூறு" என்று அறியப்படும், பொருளின் தவறான பயன்பாடு அல்லது அதற்குண்டான ஏதேனும் எதிரிடைப் பின்விளைவு ஆகியவற்றால் உருவாகும் ஒரு நோய்க்குறித் தொகுதியாக, அதாவது "ஒரு பொருளின் நேரடியான விளைவாக", இருக்கும் பட்சத்தில், மனத் தளர்ச்சிச் சீர்குலைவுக்கான நோய் கண்டறிதலை மேற்கொள்ள இயலாது. [சாராய மயக்கம்|குடிப்பழக்கம்]] அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் ஆகியவை பெரும் மனத் தளர்ச்சி உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.[82][83][84] மதுவைப் போலவே, பென்சோடியாசெப்பைன் என்னும் வேதிப் பொருளும் மைய நரம்பு மண்டல அடக்கியாகும். இந்த வகை மருந்துகள் உறக்கமின்மை, மனக் கலக்கம் மற்றும் தசைப் பிடிப்பு ஆகியவற்றிற்குப் பொதுவாகப் பயன்படுகின்றன. மதுவைப் போலவே இந்த வேதிப்பொருளும் பெரும் மனத் தளர்ச்சி விளையும் ஆபத்தை அதிகரிப்பதாகும். இவை, செரட்டோனின் மற்றும் நோர்பைன்ஃபெரின் ஆகியவற்றின் அளவுகளைக் குறைக்கும் நரம்பியவேதியியல் விளைவினால் இந்த அதிகரித்த ஆபத்து உண்டாவதாகக் கூறலாம்.[20][85] பென்சோடியாசெப்பைன் மருந்தின் நாள்பட்ட பயன்பாடு மனத் தளர்ச்சியை உருவாக்கலாம் அல்லது மோசமாக்கலாம்,[86][87] அல்லது, மனத் தளர்ச்சி நீட்டித்த விலகல் அறிகுறிகளின் ஒரு பகுதியாகவும் அது இருக்கலாம்.[20][88][89][90]

[தொகு] நோய் கண்டறிதல்

மேலதிக தகவல்கள்: depression (differential diagnoses)

[தொகு] மருத்துவ மதிப்பீடு

மேலதிக தகவல்கள்: Rating scales for depression

பயிற்சி பெற்ற ஒரு பொது மருத்துவர் அல்லது ஒரு உளப்பிணி மருத்துவர் அல்லது ஒரு மனவியலாளர்[1] போன்றோர் நோய் கண்டறிதலை மேற்கொள்ளலாம். இவர், நோயாளியின் தற்போதைய சூழல், வாழ்க்கை வரலாறு, தற்போதைய அறிகுறிகள் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றைப் பதிவு செய்வார். ஒரு தனிநபரைப் பாதித்திருக்கக் கூடிய உயிரிய, உளலிய மற்றும் சமூகவியக் காரணியகளைக் கண்டறிந்து தொகுப்பதே மருத்துவ ரீதியான நோக்கமாகும். மருந்து மற்றும் மதுப் பயன்பாடு போன்று, இவர்கள் தமது தற்போதைய (ஆரோக்கியமான அல்லது அவ்வாறு அல்லாத) மன நிலையை எவ்வாறு ஒழுங்குபடுத்திக் கொள்கின்றனர் என்பதைப் பற்றியும் மதிப்பீடு செய்பவர் அவர்களுடன் கலந்தாராயலாம். இத்தகைய மதிப்பீடு ஒரு மனநிலைப் பரிசோதனையையும் உள்ளிடும். இது, குறிப்பாக நம்பிக்கையின்மை அல்லது தோல்வி மனப்பான்மை ஆகியவற்றின் பின்னணியில், அந்த நபரின் தற்போதைய மனநிலை, எண்ணவோட்டம், சுய -தீங்கு விளைவித்துக் கொள்வது, அல்லது தற்கொலை எண்ணங்கள் அல்லது முயற்சிகள் கொண்டிருப்பது மற்றும் நேர்மறையான எண்ணங்களோ அல்லது திட்டங்களோ இல்லாமலிருத்தல் ஆகியவற்றின் ஒரு மதிப்பீடாக விளங்கும்.[1] கிராமப் பகுதிகளில் சிறப்பு மன நல சேவைகள் மிகவும் அரிதானவை. ஆகவே, இந்த நோய் கண்டறிதலும் அதன் மேலாண்மையும் பெரும்பாலும், ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்களிடமே உள்ளது.[91] வளரும் நாடுகளில் இந்தப் பிரச்சினையானது மேலும் குறிப்பானதாக உள்ளது.[92] மனத் தளர்ச்சியை நோய் கண்டறிவதற்கு, தரநிலையிடும் அளவுகோலில் மதிப்பெண் இடுவது மட்டுமே போதுமானது அல்ல.வார்ப்புரு:Says who ஆனால், அது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அறிகுறிகளின் தீவிரத்தன்மையை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கும். எனவே, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலாக மதிப்பெண்கள் பெறும் ஒரு நபர் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுக்காக முழுமையாக மதிப்பிடப்படுவதை இது சாத்தியமாக்கும்.[93] இந்த நோக்கத்திற்காகப் பல்வேறு அளவீட்டுக் கருவிகள் பயன்படுகின்றன.[93] தகுதிநிலை காணும் நிரல்கள் மனத் தளர்ச்சியைத் தடமறியப் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், அவை நோய் கண்டறியும் விகிதம், சிகிச்சை அலலது அதன் வெளிப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில்லை என ஆதாரங்கள் உரைக்கின்றன.[94]

ஆரம்ப நிலை மருத்துவர்கள் மற்றும் உளப்பிணியியல் தொடர்பில்லாத மருத்துவர்கள் மனத் தளர்ச்சியை நோய் கண்டறிவதில் சிரமங்களை எதிர் கொள்ளலாம். இதற்கு அவர்கள் மனத் தளர்ச்சியின் உடல் ரீதியான அறிகுறிகளை அறிந்து அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயிற்சி பெறாமையும் மற்றும் மனத் தளர்ச்சியானது பெரும் அளவில் உடல்-மன ரீதியான அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் என்பதை அறிந்து கொள்ளாமையுமே காரணமாகும். உளப்பிணி மருத்துவர் அல்லாதோர் மூன்றில் ஒரு பங்கு நிகழ்வுகளை கண்டு கொள்ளாது விட்டு விட்டு, தேவையற்று, பிற நோய்களினால் அவதியுறுவோருக்கு இதற்கான சிகிச்சையை அளிக்கின்றனர்.[95][96]

பெரும் மனத் தளர்ச்சி நோயாளி ஒருவருக்கு அந்நோயைக் கண்டறிவதற்கு முன்னதாக, அவருக்கு வேறு நோய்களின் அறிகுறிகளைக் கண்டு விலக்குவதற்காக, ஒரு மருத்துவ பரிசோதனை மற்றும் தேர்ந்தெடுத்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றில் தைராய்டு சுரப்பியின் குறை செயல்பாடு என்பதை விலக்குவதற்கான டிஎஸ்ஹெச் மற்றும் தைராக்சின் ஆகியவற்றை அளவிடுதல், வளர்சிதைவு இடையூறு இல்லை என விலக்குவதற்காக அடிப்படை மின்பகுளி மற்றும் சீரம், கால்சிய பரிசோதனைகள் மற்றும் மண்டலியத் தொற்று அல்லது நாள்பட்ட நோய் ஆகியவற்றை விலக்குவதற்காக, ஈஎஸ்ஆர் உள்ளிட்ட முழு இரத்த அணு எண்ணிக்கை ஆகியவை உட்படும்.[97] மருந்துகள் அல்லது மது ஆகியவற்றின் தவறான பயன்பாடு காரணமான எதிரிடைப் பின்விளைவுகளும் இவ்வாறு விலக்கப்பட வேண்டும். ஆண்களில் மனத் தளர்ச்சி விளைவதற்கு ஒரு காரணமான இனப்பெருக்க இயக்கக் குறைவைக் கண்டறிவதற்கு டெஸ்ட்டாஸ்டரோன் அளவுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.[98]

வயது முதிர்ந்த மனத் தளர்ச்சி நோயாளிகளில், தற்சார்புடைய புரிதிறன் குறித்த புகார்கள் இருக்கக் கூடும். ஆனால், இவை அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் இழப்புக் கோளாறு என்பதன் துவக்கமாக இருக்கக் கூடும்.[99][100] புரிதிறன் சோதனை மற்றும் மூளையைப் பிம்பம் எடுத்தல் ஆகியவை அறிவாற்றல் இழப்பிலிருந்து மனத் தளர்ச்சியை வேறுபடுத்திக் காட்ட உதவும்.[101] கணினி வழிக் கதிர்வீச்சு வரைவி பரிசோதனை உளப்பிணி நோயுற்றோருக்கு விரைவாக உருவாகும் அல்லது பிற அசாதாரணமான அறிகுறிகளைக் காட்டுவதான மூளை நோய்க்குறியியலை விலக்க உதவலாம்.[102] உயிரியல் சார்ந்த எந்தவொரு சோதனையாலும் பெரும் மனத் தளர்ச்சியை உறுதிப்படுத்த இயலாது.[103] மருத்துவ ரீதியான சுட்டிக்காட்டுதல் இலலாதவரையிலும், பொதுவாக, அடுத்து வருவதான ஒரு நிகழ்வுக்கு புலனாய்வுகளை மீண்டும் நிகழ்த்துவதில்லை.

[தொகு] டிஎஸ்எம்-IV-டிஆர் மற்றும் ஐசிடி-10 தகுதி நிலைகள்

மனத் தளர்ச்சி நிலைகளைக் கண்டறிவதற்காக மிகவும் பொதுவாகப் பயன்படும் தகுதிநிலை அமெரிக்க மனவியல் கழகம் வெளியிட்ட மனநிலைக் கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளிவிபரக் கையேடு (Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM-IV-TR))என்னும் நூலின் நான்காவது பதிப்பிலும் மற்றும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட "நோய்கள் மற்றும் அவற்றின் தொடர்புடைய ஆரோக்கியப் பிரச்சினைகளின் வகைப்படுத்துதலின் சர்வதேச புள்ளிவிபரம் International Statistical Classification of Diseases and Related Health Problems (ICD-10)) என்னும் நூலிலும் காணப்படுகிறது. மீள் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு {recurrent depressive disorder) என்னும் சொற்றொடரை இந்த நூல் கையாளுகிறது.{5/}

இரண்டாவதாக கூறப்பட்ட செய்முறை ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையாகவும், முதலாவது செய்முறை அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பியா - அல்லாத பல நாடுகளிலும்[104] பயன்படுகிறது. இரண்டு நூல்களின் ஆசிரியர்களும் ஒருவரது கருத்தை மற்றவர் உறுதி செய்து கொள்ளும் வகையில் பணி புரிந்துள்ளனர்.[105]

டிஎஸ்எம்-IV-டிஆர், பெரும் மனத் தளர்ச்சி சீர்குலைவை மனநிலைச் சீர்குலைவு என்று வகைப்படுத்துகிறது.[106] இதற்கான நோய் கண்டறிதல் ஒரு தனிப்பட்ட பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வு அல்லது அதன் மீள் நிகழ்வுகள் ஆகியவற்றின் பேரில் அமைந்துள்ளது.[3] இதர தகுதிநிலைகள் இத்தகைய நிகழ்வு மற்றும் அச்சீர்குலைவின் செயல்பாடு ஆகியவற்றை வகையறுக்கப் பயன்படுகின்றன. மனத் தளர்ச்சி நிகழ்வின் வெளிப்பாடானது, பெரும் மனத் தளர்ச்சி நிகழ்விற்கான தகுதி நிலையை சந்திக்காவிட்டால் அது வேறு வகையாகக் குறிப்பிடப்படாத உளச்சோர்வுக் கோளாறு என்பதாக வகைப்படுத்தப்படுகிறது. ஐசிடி-10, பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், (இலேசான, மிதமான அல்லது தீவிரமான்) மனத் தளர்ச்சி நிகழ்வைக் கண்டறிவதற்கான தகுதிநிலைகளை அதையொத்த முறையில் விவரிக்கிறது. இத்தகைய பல நிகழ்வுகளில் கிளர்ச்சி அல்லது ஆவேசப் பண்புக் கூறு இல்லை எனில், அவற்றை விவரிக்க மீள்வருகை என்னும் சொற்றொடர்[107] பயன்படலாம்.

[தொகு] பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வு

குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காவது தொடர்ந்து நீடித்திருக்கும் தீவிரமாகச் சோர்வுற்ற மன நிலையால் ஒரு பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வு பண்புறுத்தப்படுகிறது.[3] இத்தகைய நிகழ்வுகள் அங்கொன்று, இங்கொன்றுமாகவோ அல்லது மீண்டும் மீண்டும் வருவதாகவோ இருக்கலாம். இவை இலேசானதாகவோ (சில அறிகுறிகள் குறைந்த பட்ச தகுதிநிலையை விடச் சற்றே அதிக அளவிலேயே இருக்கலாம்) அல்லது தீவிரமானதாகவோ (சமூக மற்றும் பணியிட செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பு) இருக்கலாம். உளப்பிணிக் கூறுகளுடனான ஒரு நிகழ்வு தீவிரமான ஒரு நிகழ்வு என்றே மதிப்பீடு செய்யப்படும். இதனைப் பொதுவாக உளப்பிணி மனத் தளர்ச்சி என்று குறிப்பிடுவர். நோயாளி கிளர்ச்சி உடனான ஒரு நிகழ்வினைக் கொண்டிருந்தால் அல்லது குறிப்பிடத்தக்க அளவில் உற்சாகம் மிகுந்த மனநிலை கொண்டிருந்தால், இருமுனைச் சீர்குலைவு என்னும் மன நோய்க்கான நோய்கண்டறியும் சோதனை நிகழ்த்தப்படும்.[108] கிளர்ச்சியற்ற மனத் தளர்ச்சியை சில சமயம் ஓர்முனைச் சீர்குலைவு என்று குறிப்பிடுவர். காரணம், மன நிலையானது ஒரே உணர்ச்சிக் கட்டத்தில், அதாவது ஒரு முனையிலேயே, நிலைத்திருக்கும்.[109]

உற்றாரின் உயிரிழப்பு காரணமாக விளையும் இயல்பான துயரம் மனத் தளர்ச்சி நிகழ்வாக மாறும் சாத்தியமும், அத்தகைய மன நிலை நீடித்து பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வாக மாறும் சாத்தியமும் உண்டு. இருப்பினும், டிஎஸ்எம்-IV-டிஆர், இவ்வாறான கையறுநிலையின் விளைவாக நிகழ்வனவற்றை மனத் தளர்ச்சி நிகழ்வுகளாகக் கொள்வதில்லை.[110] மனத் தளர்ச்சியை உருவாக்கக் கூடிய பிற தனிப்பட்ட மற்றும் சமூகச் சூழல்களைக் கருத்தில் கொள்வதில்லை என்பதால் இத்தகுதிநிலை விமர்சனத்திற்கு ஆளகியுள்ளது.[111] மேலும், டிஎஸ்எம்-IV தகுதி நிலைக்கு பட்டறிவு சார் ஆய்வுகள் மிகக் குறைந்த ஆதாரங்களையே கண்டு கொண்டுள்ளன. காரணம், இது ஒரு மரபு வழி நோய் கண்டறிதலாக, வேறுபட்ட தீவிரத்தன்மை மற்றும் கால அளவு கொண்ட மனத் தளர்ச்சிக் குறிகளைக் கருத்தில் கொண்டுள்ளது. மேலும், இதனுடன் தொடர்புடையதான டிஸ்தீமியா போன்ற நாள்பட்ட ஆயினும் இலேசான மனநிலை இடையூறு[112], குறுகிய கால அளவுகளைக் கொண்ட நிகழ்வுகள்,[113] மனத் தளர்ச்சியின் சில அறிகுறிகளையே கொண்ட சிறு அளவிலான மனத் தளர்ச்சிச் சீர்குலைவு,[114] அடையாளம் காணத்தக்க ஒரு நிகழ்வு அல்லது இறுக்கமான சூழல் ஆகியவற்றின் விளைவான தாழ் மனநிலையின் காரணமாக மனத் தளர்ச்சியுடன் இணைந்து வருவதான ஒத்திசையா மனநிலைக் கோளாறு[115] போன்றவற்றை இது கருத்தில் கொள்வதில்லை.[116]

[தொகு] துணை வகைகள்

எம்டிடி என சுருக்கமாக அழைக்கப்படும் பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவின் ஐந்து துணை வகைகளை டிஎஸ்எம்-IV-டிஆர் இனம் காண்கிறது. இவை சுட்டிக் காட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றிற்குக் கூடுதலாக, கால அளவு, தீவிரம் மற்றும் உளப்பிணியின் கூறுகள் இருத்தல் ஆகியவையும் குறித்துக் கொள்ளப்படுகின்றன.

  • சோர்வுடனான மனத் தளர்ச்சி : இது அநேகமாக எந்தவொரு நடவடிக்கையிலும் மகிழ்ச்சியின்மையை - அதாவது, மகிழ்ச்சியைப் பெறுவதற்கான ஒரு அகத்தூண்டுதலின் இழப்பை - ஈடுபடுத்துகிறது. இது, துயரம் என்பதை விடக் குறிப்பாகவும் மேலும் சோர்வு என்பதாகவும் உள்ள ஒரு மன நிலையாகும். காலை நேரம் மற்றும் அதிகாலையில் விழித்துக் கொள்ளும் நேரம், மந்தமான உளவியக்கம், அளவுக்கு அதிகமான எடையிழப்பு (இதை அனொரெக்ஸியா நர்வொசா என்னும் பசியின்மை காரணமாக விளையும் எடையிழப்புடன் குழப்பிக் கொள்ளக் கூடாது) அல்லது குற்றவுணர்வு ஆகியவற்றின்போது இந்த அறிகுறி மேலும் மோசமாக இருக்கும்.[117]
  • வகையற்ற மனத் தளர்ச்சி : இது எதிர் மனநிலையால் வகைப்படுகிறது. அதாவது இன்ப துனபங்களைப் பிரித்தறிய இயலாத ஒரு முரணான மனநிலை (paradoxical anhedonia). குறிப்பிடத்தக்க அளவு எடை கூடுதல் அல்லது அதிகரித்த பசி (வசதிக்காக உண்ணுதல்), அளவுக்கு அதிகமான தூக்கம் அல்லது தூக்கக் கலக்கம் (hypersomnia), கை கால்களில் பாரமாக உணர்தல் (leaden paralysis), பிறரை நிராகரித்து தாமும் நிராகரிக்கப்படும் குண நலன் காரணமாக சமூகச் செயற்பாடுகளை இழத்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.[118]
  • ஒழுங்கற்ற மனத் தளர்ச்சி (Catatonic depression): இது மிகவும் அரிய மற்றும் தீவிரமான ஒரு மனத் தளர்ச்சி வகையாகும். உள மற்றும் உடல் இயக்கமுறைமையில் இடையூறுகள் மற்றும் பிற அறிகுறிகளுடன் இது காணப்படும். இந்த நோய்க்கு ஆட்பட்டவர் பேச்சின்றி, ஏறத்தாழ ஒரு மதி மயக்க நிலையில் இருப்பார். நடமாட்டமே இன்றி இருப்பார் அல்லது குறிக்கோளற்ற அல்லது வினோதமான நடவடிக்கைகளைக் கொண்டிருப்பார். மனப்பித்து என்னும் நோயிலும் இத்தகைய ஒழுங்கற்ற மனத் தளர்ச்சி அறிகுறிகள் மற்றும் வெறி மிகுந்த நிகழ்வுகள் ஏற்படலாம் அல்லது இவை கொடிய நரம்பியல் நோய்க்குறித்தொகுதி neuroleptic malignant syndrome என்னும் நோயினாலும் உருவாகலாம்.[119]
  • மகப்பேற்றுக்குப் பின்னரான மனத் தளர்ச்சி அல்லது வேறு எந்த நோயுடனும் தொடர்புறாத பேற்றமைக்காலத்தின் உடன் தொடர்புடைய மனம் மற்றும் நடத்தைக் கோளாறுகள் : இது தீவிரமான, நீடித்திருப்பதான, சில சமயங்களில் செயலிழப்பை ஏற்படுத்துவதான ஒரு வகை மனத் தளர்ச்சியாகும். ஒரு சில பெண்கள், மகப்பேறுக்குப் பின்னர் இதை அனுப்விக்கின்றனர்.[120] இந்த வகையான மனத் தளர்ச்சி மகப்பேறு கண்ட அன்னையரிடம் 10 முதல் 15 விழுக்காடு வரை காணப்படுகிறது. மகப்பேறுக்கு ஒரு மாத காலத்திற்குள்ளாக இது நிகழ்ந்தால் மட்டுமே இதை இவ்வாறு வகைப்படுத்த வேண்டும் என டிஎஸ்எம்-IV திட்டவட்டமாக உரைக்கிறது. இந்த வகையான மனத் தளர்ச்சி மூன்று மாதங்கள் வரையிலும் கூட நீடிக்கலாம்.[121]
  • பருவ நிலை மாறுபாட்டுக் கோளாறு : இந்த வகையான மனத் தளர்ச்சி நிகழ்வுகள் இலையுதிர் காலம் அல்லது குளிர் காலத்தில் தோன்றி, இளவேனிற் காலத்தில் மறைந்து விடுகின்றன. இத்தகைய மனத்தளர்ச்சியாக கண்டறியப்பட, இந்நிகழ்வு

குறைந்த பட்சம் ஒரு இரண்டு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட கால கட்டத்தில், குளிர்கால மாதங்களில் இரண்டு முறைகளாவது நிகழ்ந்திருக்க வேண்டும்; அல்லது வேறு பருவ காலங்களில் நிகழாதிருக்க வேண்டும்.[122]

[தொகு] மாறுபாடுள்ள நோய்கண்டறிதல்கள்

ஒரு நோயை அது பெரும் மனத் தளர்ச்சி நோய்தான் என கண்டறிவதற்கு, அவை டிஸ்தீமியா, சோர்வுடன் கூடிய இருமுனைச் சீர்குலைவு அல்லது அனுசரிப்புக் கோளாறு ஆகிய சாத்தியமான பிற நோய்கள் அல்ல எனப் பிரித்தறிதல் தேவை. டிஸ்தீமியா என்பது நாள்பட்ட, இலேசான மன நிலை இடையூறாகும். இதில், நோயாளி ஏறத்தாழ ஒரு இரண்டு வருட காலத்திற்குக் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளிலுமே ஒரு தாழ் மனநிலையைத் தெரிவித்து வரலாம். பெரும் மனத் தளர்ச்சியைப் போல இதற்கான அறிகுறிகள் தீவிரமானவை அல்ல. ஆயினும், டிஸ்தீமியா, இரண்டாம் நிலை பெரும் மனத் தளர்ச்சியின் நிகழ்வுகளை நோயாளிகள் அனுபவிப்பதற்கு ஏதுவான இருக்கலாம். சில வேளைகளில் இது இரட்டை மனத் தளர்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது.[113] தாழ் மனநிலையுடன் கூடிய அனுசரிப்புக் கோளாறு: இது அடையாளம் காணக் கூடிய ஒரு நிகழ்வு அல்லது இறுக்கம் விளைவிக்கும் நிகழ்வு ஆகியவற்றிற்கு உளவியல் ரீதியான ஒரு பதிலளிப்பாக விளைகிறது. இதன் விளைவான உணர்ச்சி மற்றும் நடத்தை அறிகுறிகள் முக்கியமானவையாக இருப்பினும், பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்பதற்கான தகுதி நிலையை இது அடைவதில்லை.[123] இருமுனைச் சீர்குலைவு: இது வெறி கொண்ட மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்றும் அறியப்படுகிறது. இந்த நிலையில் மிகுவெறி மற்றும் மந்த வெறி ஆகிய இரு முனைகளுக்கு இடையில் மனத் தளர்ச்சி நிகழ்வுகள் ஊசலாடுவதாக இருக்கும். தற்போது மனத் தளர்ச்சியை என்பது ஒரு தனிப்பட்ட சீர்குலைவு என வகைப்படுத்தினாலும், பெரும் மனத் தளர்ச்சி கொண்டவராக நோயறியப்பட்ட நபர்கள் மந்த நிலைக்கான அறிகுறிகளையும் கொண்டு மன நிலைச் சீர்குலைவின் தொடர்வினையையும் அனுபவிக்கின்றனர்.[124]

பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என கண்டறிவதற்கு முன்னர் அது பிற சீர்குலைவுகளாக இருக்கக் கூடிய சாத்தியத்தை விலக்க வேண்டும். இவை உடல் ரீதியான சுகவீனம். மருத்துவங்கள் மற்றும் பொருட்களின் தவறான பயன்பாடு/1} ஆகியவற்றால் விளையும் மனத் தளர்ச்சிகளை உட்கொள்ளும். சுகவீனத்தின் காரணமாக விளையும் மனத் தளர்ச்சி், ஒரு பொதுவான மருத்துவ நிலையாக மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என நோயறியப்படும். இந்த நிலை மருத்துவ வரலாறு, ஆய்வகக் கண்டுபிடிப்புகள் மற்றும் உடற்பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். மருந்துகள் அல்லது நச்சுப் பொருட்களை உள்ளிட்டவற்றின் பயன்பாட்டினால் விளையும் மனத் தளர்ச்சியே பொருள் தூண்டிய மனத் தளர்ச்சி எனப்படுகிறது.[125] இது போன்றவற்றில், அப்பொருளே மனத் தளர்ச்சிச் சீர்குலைவுக்கு முதற்காரணமாக அறியப்படுகிறது.

மனப்பித்து என்பது உளவியல் கூறுகளுடன் கூடிய பெரும் மனத் தளர்ச்சியிலிருந்து வேறுபட்டதாகும். குறைந்த பட்சமாக இரண்டு வாரங்களுக்காவது, முதன்மையான மன நிலை அறிகுறிகள் இல்லாது, மருட்சி அல்லது உள மாய நிகழ்வுகளுடன் விளைவதாக இருப்பின் மனப்பித்துக் கோளாறு என அது நோய் கண்டறியப்படும்.

மனப்பித்து, மருட்சிக் கோளாறு மற்றும் உளவியற் கோளாறு ஆகியவற்றில் மனத் தளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படலாம். ஆயினும், இவற்றில் இத்தகைய அறிகுறிகள் நோயின் முதன்மையான அறிகுறிகளுடன் இணைந்தவை என்றே அறியப்படுகின்றன. இதனால், பெரும் மனத் தளர்ச்சி நிகழ்விற்கான தகுதி நிலையை முழுவதுமாக சந்திக்கும் வரையிலும் ஒரு தனிப்பட்ட நோயறிதல் இவற்றிற்குத் தேவைப்படாது. அவ்வாறு நோய் கண்டறியும் நடைமுறை செய்யப்பட்டால், மனப்பித்து நோய்க்கான நோயறிதலையும் மேற்கொள்ள வேண்டும்.

இலக்கின்மை, ஈடுபாடின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் இழப்பு ஆகிய முதுமை மறதியின் சில புரிதிறன் தொடர்பான அறிகுறிகள் பெரும் மனத் தளர்ச்சி நோயின் அறிகுறிகளுடன் குழப்பிக் கொள்ளப்படலாம். குறிப்பாக, வயது முதிர்ந்த நோயாளிகளில் இவற்றை அறுதியிட்டுக் கூறுவது கடினமாகும். இவ்விரண்டு நோய்க்கோளாறுகளையும் பிரித்தறிய, நோயாளியின் நோய்க்கு- முந்தைய நிலை உதவக்கூடும். முதுமை மறதியின் சில நிகழ்வுகளில், புரிதிறன் செயற்பாடு குறைவதான நோய்க்கு-முந்தைய வரலாறு காணப்படுவதுண்டு. பெரும் மனத் தளர்ச்சி நோயில், நோயாளிகள், ஒப்புமையில், ஒரு இயல்பான நோய்க்கு முந்தைய வரலாறு மற்றும் மனத் தளர்ச்சியுடன் தொடர்புடைய, திடீரென நிகழ்வதான, ஒரு புரிதிறன் குறைதலைக் கொண்டிருப்பர்.


[தொகு] நோய்த் தடுப்பு

2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு பெரும் ஆய்வு, ஒருவரோடு ஒருவர் கலந்து பழகும் சிகிச்சை முறைகள் புதிதாக மனத் தளர்ச்சி உருவாவதைத் தடுப்பதில் திறத்தன்மை கொண்டிருப்பதாகக் கண்டறிந்தது.[126] இத்தகைய இடையூடுகளை தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது சிறிய குழுக்களுக்கோ அளிக்கையில், அவை மிகவும் திறனுள்ளவையாகக் காணப்படுகின்றன. எனவே, இவை பெருமளவு மக்களையும், இதற்கு இலக்காக அறியப்படும் நோயாளிகளையும் இணையத்தின் வழி சென்றடைய இயலும்.[127] இருப்பினும், இதற்கு முன்பாக நிகழ்ந்த ஒரு பெரும் ஆய்வு, திறன்-ஊக்குவித்தல் உடனான தடுப்பு நிரல்கள், நடத்தையில் மேம்பாட்டினைக் குறி வைத்து நிகழ்த்தப்படும் நிரல்களை விட உயர்ந்தன என்று கண்டறிந்தது. குறிப்பாக சமூக ஆதரவற்ற, வயதான நோயாளிகளுக்கான ஆதரவு நிரல்கள் மிகவும் பயன்படுவதாக விளங்கின. இவர்களுக்கு நடத்தை சார் நிரல்கள் பயனளிப்பதாகக் காணப்பட்டன. மேலும், மிகவும் பயன் தருவதாக அமைந்த நிரல்கள் குறைந்த பட்சமாக எட்டு அமர்வுகளை ஈடுப்டுத்தின. இவை 60 முதல் 90 நிமிடங்கள் வரை நீடித்தன. இவற்றில், தொழில்முறையாளர்களும், சராசரியான மக்களும் இணைந்து சேவையளித்தனர். இவை மிகவும் உயர்ந்த வடிவமைப்பு கொண்டிருந்தன. இவற்றில் பங்கேற்பாளர் விகிதம் மிக உயர்வாக இருந்தது. மேலும், இவை நன்கு வரையறுத்த ஊடாடல்களைக் கொண்டிருந்தன.[128] மனத் தளர்ச்சியைச் சமாளிக்கும் பயிற்சியைப் பல்வேறுபட்ட மக்கள் தொகையில் நிரலாக்க முடிகிறது. மேலும், இது பயன் தரும் பல விளைவுகளைக் கொண்டுள்ளது. இதனால், இது மிகவும் வெற்றிகரமான உளவியற்கல்வி ஊடாடுதலாக விளங்குகிறது. இது, பெரும் மனத் தளர்ச்சியின் நிகழ்வை சுமார் 38 விழுக்காடு வரை குறைக்கிறது. பிற உளவியற் சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடுகையில், இது சிறந்த முறையில் பயனளிப்பதாகத் தெரிகிறது.[129]

[தொகு] மேலாண்மை

மனத் தளர்ச்சிக்கான மிகவும் பொதுவான மூன்று சிகிச்சைகள் உளப்பிணி சிகிச்சை, மருத்துவ சிகிச்சை மற்றும் மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை (electroconvulsive therapy) ஆகியவையாகும். உளப்பிணி சிகிச்சை 18 வயதிற்குக் கீழானவர்களில் பயன்படுகிறது. மின்தூண்டல் வலிப்பு சிகிச்சை என்பது ஒரு இறுதி முயற்சியாகும். சாதாரணமாக புற நோயாளி என்ற முறையிலேயே கவனிப்பு அளிக்கப்படுகிறது. நோயாளிக்கு தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைக்கும் ஆபத்து குறிப்பிடத்தக்க அளவில் இருந்தால், அவர் உள்நோயாளியாகவும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பெறலாம்.

வளரும் நாடுகளில் சிகிச்சைக்கான விருப்பத் தேர்வுகள் மிகவும் குறைவே. இந்நாடுகளில் மனநலப் பணியாளர், மருத்துவங்கள் மற்றும் உளப்பிணி சிகிச்சை ஆகியவற்றிற்கான அணுக்கம் மிகவும் குறுகியதாகும். பல நாடுகளிலும், மனநலச் சேவைகளை மேம்படுத்துதல் என்பதானது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மனத் தளர்ச்சி என்பது வளர்ந்த நாடுகளிலேயே நிகழ்வதான ஒன்று என்ற கண்ணோட்டமே பரவலாக உள்ளது. இதற்கு மாறாக, இந்நிலையானது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு நிலை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பினும், என்னும் இது குறித்த விழிப்புணர்வு வளரும் நாடுகளில் அதிகம் இல்லை.[130]

[தொகு] உளப்பிணி சிகிச்சை

உளப்பிணி சிகிச்சையாளர்கள், உளப்பிணி மருத்துவர்கள், மருந்தக, சமூக சேவையாளர்கள், ஆலோசனையாளர்கள், தகுந்த பயிற்சி பெற்ற உளப்பிணி செவிலியர் ஆகியோரை உள்ளிட்ட ஆரோக்கியத் தொழில்முறையாளர்கள், தனி நபர்கள் அல்லது குழுக்களுக்கு உளப்பிணி சிகிச்சையை அளிக்கலாம். மனத் தளர்ச்சியின் சிக்கலான மற்றும் நீண்ட நாள்பட்ட வகைகளுக்கு மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சை ஆகிய இரண்டுமே பயன்படுகிறது.[131] ஆரோக்கியம் மற்றும் மருத்துவச் சிறப்பிற்கான தேசிய நிறுவனத்தின் National Institute for Health and Clinical Excellence வழிகாட்டுதலின்படி, 18 வயதிற்குக் கீழானவர்களுக்கு உளப்பிணி சிகிச்சை முறையுடன் மட்டுமே மருந்தளிக்கப்பட வேண்டும். இது, புரிதிறன் நடத்தை சிகிச்சை முறை, பிறருடன் பழகுவதற்கான சிகிச்சை மற்றும் குடும்ப சிகிச்சை எனப் பல்வேறு வகைப்படலாம்.[132] உளப்பிணி சிகிச்சை வயதானவர்களிடம் திறன் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது.[133][134] உளப்பிணி சிகிச்சையானது அவ்வப்போது ஊக்கம் அளிப்பதான பயிற்சிகள் மூலமாக, ஒரு முறை குண்மாகி விட்ட மனத் தளர்ச்சி மீண்டும் மீண்டும் வருவதைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

புரிதிறன் நடத்தை சிகிச்சை முறையே மிகவும் நன்கு ஆயப்பட்ட உளப்பிணி சிகிச்சை முறையாகும். இதில் நோயாளி தமது புரிதிறனைக் குழப்புகிற சுய தோல்வியுணர்வுடன் போராடுவதற்கும் தமது எதிர் -ஆக்க நடத்தைகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கும் கற்றுக் கொள்கிறார். மிதமானது முதல் தீவிரமானது வரையிலான மனத் தளர்ச்சி கொண்டுள்ள நோயாளிகளில், மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவத்தைப் பயன்படுத்துவதை விட இத்தகைய சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவது அதிகப் பலனளிக்கும் என 1990ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் நடந்த ஒரு ஆராய்ச்சி அறிவித்துள்ளது.[135][136] மிகவும் தீவிரமான மனத் தளர்ச்சி நிகழ்வுகளின் மீதான விளைவுகளை முழுவதுமாக அறிய இயலவில்லை எனினும், இளம் பருவத்தினரிடையே[137] இச்சிகிச்சை முறை திறனுற்றதாக உள்ளது.[138]

புரிதிறன் நடத்தை சிகிச்சைமுறையுடன் ஃப்ளூவாக்ஸ்டைன் மருந்தை அளிப்பது கூடுதலான பயன் தருவதில்லை.[139][140] அவ்வாறு இருப்பினும், அப்பயன் மிகக் குறைந்த அளவினதாகவே உள்ளது.[141] இளம்பருவத்தினரிடையே இச்சிகிச்சை முறை வெற்றிகரமாக இருப்பதற்குப் பல காரணிகள் உள்ளன: பகுத்தறிதல் உயர் நிலைகளில் இருத்தல், நம்பிக்கையின்மை குறைவாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள் குறைவாக இருத்தல் மற்றும் புரிதிறன் திரிபுகள் குறைவாக இருத்தல் ஆகியவை அவற்றில் சிலவாகும்.[142] நோய் மீட்சியைத் தடுப்பதில் இவ்வகை சிகிச்சை சிறப்பாகத் பயன் அளிக்கிறது.[143][144] மனத் தளர்ச்சி நோயாளிகளில் பல வேறுபட்ட வகைகளில் புரிதிறன் நடத்தை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பகுத்தறியும் உணர்வினைத் தூண்டுவதான சிகிச்சை[145] மற்றும், மிக அண்மையிலான, கவனம் சார் புரிதிறன் சிகிச்சை (mindfulness-based cognitive therapy) ஆகியவை அவற்றில் சில வகைகளாகும்.[146]

சிக்மண்ட் ஃபிராய்டு துவக்கிய உளப்பகுப்பாய்வு ஆழ்மனத்தின் பகுப்பாய்வின் மூலமாக மனச் சிக்கலைத் தீர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறது.[147] பெரும் மனத் தளர்ச்சி கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இத்தகைய உளப்பகுப்பாய்வு உத்திகளை சில மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.[148] உளவியக்க ஆற்றல் சிகிச்சை (psychodynamic psychotherapy) எனப்படும் சிகிச்சை முறை, பல தோற்றுவாய்களிலிருந்தும் திரட்டிய உத்திகளைக் கொண்டதாக மற்றும் அடிப்படையாக உளப்பகுப்பாய்வினை ஒற்றியதாக விளங்குகிறது. இது, சமூகம் மற்றும் பிறருடன் பழகும் முறைமை ஆகியவற்றைச் சிறப்பாகக் குவிமையப்படுத்துகிறது.[149] ஒரு சிறு கால கட்டத்திற்கு உளவியக்கவாற்றல் ஆதரவு கொண்ட சிகிச்சை முறையிலான கட்டுப்படுத்தப்பட்ட மூன்று சோதனைகளைக் கொண்டிருந்த ஒரு பெரும் பகுப்பாய்வு, இத்தகைய சிகிசசை, இலேசானது முதல் மிதமானது வரையிலான மனத் தளர்ச்சிக்குத் திறனுள்ள சிகிச்சையாக விளங்குகிறது என்று கண்டறிந்தது.[150]

பொருள் சார் சிகிச்சை முறை (Logotherapy) என்னும் இருத்தல்சார் உளப்பிணி சிகிச்சைமுறையை (existential psychotherapy) ஆஸ்திரிய நாட்டினைச் சேர்ந்த விக்டர் ஃபிராங்க் என்னும் உளப்பிணி மருத்துவர் உருவாக்கினார். இது ஒரு நோயாளியின் மனதில் இருப்பதான, தாம் தேவையற்றவர் மற்றும் தமது வாழ்வு பொருளற்றது என்னும் எண்ணங்களுடன் கூடியதான இருத்தல்சார் வெற்றிடத்தை (existential vacuum) நிரப்புவதை குறிக்கோளாகக் கொண்டது. சற்றே முதிர்ந்த இளம்பருவத்தினரிடையே இந்த சிகிச்சை முறை மிக்க பலனளிப்பதாக அறியப்படுகிறது.[151]

[தொகு] மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள்

மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள், உளப்பிணி சிகிச்சை முறையை விட அதிகமான அளவில் திறத்தன்மை, குறிப்பாக நாள்பட்ட பெரும் மனத் தளர்ச்சி நோய் சிகிச்சையில், கொண்டுள்ளன. இருப்பினும், இந்த மருத்துவத்தின் பாதகமான பக்க விளைவுகளின் காரணமாக, இதனைக் கொண்டு நிகழ்த்திய குறுகிய காலச் சோதனைகளில் நோயாளிகள், குறிப்பாக மனத் தளர்ச்சியின் தீவிரமான வடிவங்களைக் கொண்டவர்கள், உளப்பிணி சிகிச்சையை விடவும் விரைவில் இந்த மருத்துவத்துடனான சிகிச்சையை விட்டு விட்டனர். மருந்துகள் உடனான சிகிச்சையை விடவும் உளவியல் ரீதியான சிகிச்சையையே அவர்கள் அதிகம் விரும்பினர்.[152][153]

மிகக் குறைந்த பக்க விளைவுகளுடன் மிகத் திறன் கொண்ட மனத் தளர்ச்சி மருந்தினைக் கண்டுபிடிக்க, மருந்தளவு சரிசெய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; தேவையானால், வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த மனத் தளர்ச்சி எதிர் மருத்துவங்களையும் முயன்று பார்க்கலாம். முதலாவதாகச் செலுத்தப்படும் மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவத்திற்கான பதிலளிப்பு 50 முதல் 75 விழுக்காடு வரை காணப்படுகிறது. மேலும், நோயின் கொடுமை தணிந்து நோயாளி தனது இயல்புக்குத் திரும்புவதற்கு மருந்தளிப்பு துவங்கி ஆறு முதல் எட்டு வாரங்கள் வரையிலும் ஆகலாம்.[154] மனத் தளர்ச்சி எதிர் மருத்துவம் கொண்ட சிகிச்சை பொதுவாக 16 முதல் 20 வாரங்கள் வரை தொடர்கிறது. நோய் மீண்டும் வருவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.[154] சில நேரங்களில் ஒரு வருடம் வரையிலும் கூட தொடருமாறு பரிந்துரைக்கப்படுகிறது.[155] நாள்பட்ட மனத் தளர்ச்சி கொண்டோர் நோய் மீட்சியைத் தவிர்க்க கால வரையின்றி இந்த மருத்துவத்தைக் கைக்கொள்ள வேண்டியிருக்கலாம்.[1]

செர்ட்ராலைன், எஸ்சிட்டாபிராம், ஃப்ளூவாக்ஸ்டைன், பரோக்ஸ்டைன் மற்றும் சைட்டோபிராம் போன்ற தேர்ந்தெடுத்த செரோட்டினின் ரெபுடேக் தணிப்பிகள் Selective serotonin reuptake inhibitor (SSRIs) ஆகியவை இச்சிக்ச்சையில் பயன்படும் முதன்மை மருந்துகளாக விளங்குகின்றன. காரணம், அவற்றின் திறத்தன்மை, ஒப்புமையில் குறைந்த அளவு பக்க விளைவுகளைக் கொண்டுள்ளமை, மற்றும் பிற மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகளை விடவும் அதிக மருந்தளவிலும் குறைவான நச்சுத்தன்மை கொண்டுள்ளமை, ஆகியவையே ஆகும்.[156] இவ்வாறான எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளில் ஒரு மருந்திற்குப் பதிலளிக்காத நோயாளியை மற்றொரு மருந்திற்கு மாற்றிவிடலாம். இதன் காரணமாக ஏறத்தாழ 50 விழுக்காடு நிகழ்வுகளில் மேம்பாடு காணப்படுகிறது.[157] மற்றொரு வழி, வகையற்ற மனத் தளர்ச்சி-எதிர் மருந்தான புரோபியான் மருந்திற்கு மாறுவதாகும்.[158][159][160] வென்லாஃபாக்சைன் என்னும் மனத் தளர்ச்சி எதிர் மருந்து வேறு விதமாகச் செயல்பட்டு எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளை விட ஓரளவு அதிக திறன் கொண்டதாக உள்ளது.[161] இருப்பினும், வென்லாஃபாக்ஸைன் உடனான மருத்துவத்தை ஐக்கிய இராச்சியத்தில் முதல் நிலை சிகிச்சையாக மேற்கொள்வதில்லை. இதில் உள்ள ஆபத்துக்கள் இதன் பலன்களை விஞ்சுவதே காரணம்.[162] குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு இதை அளிப்பதை ஊக்குவிக்கப்பதில்லை.[163][164] இளம்பருவத்தினருக்கு வருகின்ற மனத் தளர்ச்சி நோய்க்கு ஃப்ளூவாக்ஸ்டைன்[163] மற்றும் எஸ்சிட்டாலோபிராம்[165] ஆகிய இரண்டுமே பொதுவாகப் பரிந்துரைக்கும் மருந்துகளாகும். குழந்தைகளில் மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள் பலன் உள்ளவையாகக் காணப்படவில்லை.[166] எந்தவொரு மனத் தளர்ச்சி எதிர்-மருந்தும் சீரம் சோடியம் அளவுகள் குறைதலை விளைக்கலாம். (இது ஹைப்போனேட்ரேமியா (hyponatremia), அதாவது இரத்தத்தில் குறைந்த அளவு சோடியம் என வழங்கப்படுகிறது.)[167] இருப்பினும், எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளில் இது அதிக அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.[156] எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகள் உறக்கமின்மையை உண்டாக்குவதும் அல்லது மோசமாக்குவதும் கூட அரிதான நிகழ்வுகள் அல்ல. அத்தகைய நிகழ்வுகளில் மிர்ட்டாசபைன் என்னும் மருந்தினைப் பயன்படுத்தலாம்.[168][169]

ஒற்றை அமீன் ஆக்சிடேசு தணிப்பிகள் (Monoamine oxidase inhibitors) என்பவை மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவத்தின் பழம் வகைகள். இவை உயிருக்கு ஆபத்து விளைக்கும் வண்ணம் உணவு மற்றும் மருந்துகளுடன் பெரும் அளவில் இடையூறு விளைக்க வல்லவை. தற்போதும் பயனில் இருப்பினும் அவை அரிதானவையே. இந்த வகை மருந்துகளில் பல புதிய, அதிக அளவில் சகிப்புத்தன்மை கொண்ட அடுத்த தலைமுறை மருந்துகள் உருவாகிவிட்டன.[170]

நோயாளி, குறைந்த பட்சம் இரண்டு மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள் உடனான தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகும், போதுமான அளவு பதிலளிக்காதவிடில், அந்நோய் "முறி மனத் தளர்ச்சி" (refractory depression) அல்லது "சிகிச்சை-எதிர் மனத் தளர்ச்சி" (treatment-resistant depression) எனப்படுகிறது.[171] பல பெரும் ஆய்வுகளிலும் சுமார் 35 விழுக்காடு நோயாளிகளே மருத்துவ சிகிச்சையின் மூலம் பலன் அடைகின்றனர். ஒரு நோயாளி சிகிச்சை-எதிர் மனத் தளர்ச்சி கொண்டுள்ளாரா அல்லது, பெரும் மனத் தளர்ச்சி நோயாளிகளில் மிகப் பொதுவாகக் காணப்படுவதான உடன் இருக்கும் வேறு கோளாறுகளின் காரணமாக மருத்துவம் அவருக்குப் பலன் தரவில்லையா எனத் தீர்மானிப்பது ஒரு மருத்துவருக்கு மிகவும் கடினமான பணி.[172]

பல்வேறு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலிருந்து பங்கேற்ற உளவியலாளர்களின் குழு, இலேசானது முதல் மிதமானது வரையிலான மனத் தளர்ச்சி நோயில் பெரும்பாலான மனத் தளர்ச்சி எதிர் மருந்துகள் பிளாசிபோவை விட பெரும் அளவில் அதிகப் பலன் கொண்டவை அல்ல என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு பராக்ஸ்டைன் மற்றும் இமிபிராமைன் ஆகிய மருந்துகளின் மீது குவிமையம் கொண்டிருந்தன.[173]

[தொகு] மருத்துவங்களின் சேர்க்கை

சிகிச்சை - எதிர் நிலைகளில், வேறு வகையிலான மருத்துவம் ஒன்றைச் சேர்த்து மனத் தளர்ச்சி-எதிர் மருந்தின் பலனை அதிகரிக்கச் செய்யலாம்.[174] மனத் தளர்ச்சி-எதிர் மருந்துடன் மட்டுமேயான சிகிச்சைக்குப் பதிலளிக்காத நோயாளிகளில் அதனுடன் லித்தியம் உப்புகளைச் சேர்ப்பது நடைமுறையில் உள்ளது.[175] மேலும், மீண்டும் மீண்டும் வருவதான மனத் தளர்ச்சி நிகழ்வுகளின் தற்கொலைக்கான ஆபத்தை லித்தியம் கணிசமாகக் குறைக்கிறது.[176] டிரையோடோதைரோனைன் என்னும் ஒரு தைராய்டு சுரப்பியின் இயக்கு நீரைச் சேர்ப்பது, இயல்பான தைராய்டு செயற்பாடு உள்ள நோயாளிகளிலும், லித்தியம் போன்றே செயல்படக் கூடும்.[177] நோயாளி மனத் தளர்ச்சி மருந்திற்குப் பதிலளிக்காதபோது, வகையற்ற உளப்பிணி-எதிர் மருந்தினைச் சேர்ப்பதானது, பக்க விளைவுகளை அதிகரிக்கக் கூடும். இருப்பினும், அது மனத் தளர்ச்சி-எதிர் மருந்தின் திறத்தன்மையை அதிகரிப்பதாக அறியப்பட்டுள்ளது.[178]

[தொகு] மருந்தளித்தல் மற்றும் உளப்பிணி சிகிச்சை ஆகியவற்றின் திறத்தன்மை மீதான ஒரு ஒப்புமை

புள்ளி விபரங்களின் அடிப்படையில் மனத் தளர்ச்சி மருந்துகள் பிளாசிபோவை விட உயர்வானவை எனினும் அவற்றின் ஒட்டு மொத்தமான பலன், மிகக் குறைவானது முதல் மிதமானது வரையிலேயே உள்ளது என அண்மையில் எஃப்டிஏவிற்கு அளிக்கப்பட்ட இரண்டு பெரும் பகுப்பாய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. அந்த வகையில், "மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த" ஒரு பலனுக்கான, ஆரோக்கியம் மற்றும் மருத்துவச் சிறப்பிற்கான தேசிய நிறுவனம் விதிக்கும் தகுதி நிலையை பெரும்பாலும் அவை அடைவதில்லை. குறிப்பாக, பலனின் அளவானது மிதமான மனத் தளர்ச்சியில் மிகச் சிறியதாக இருந்தது. ஆயினும், அது நோயின் தீவிரத்துடன் அதிகரிப்பதாக அமைந்து, மிகவும் தீவிரமான மனத் தளர்ச்சி நோயாளிகளில் "மருத்துவ முக்கியத்துவம்" பெறுவதாக உள்ளது.[179][180] தீவிர மனத் தளர்ச்சி கொண்ட நோயாளிகள் பிளாசிபோ உடனான சிகிச்சையை விட உளப்பிணி சிகிச்சை அல்லது இமிபிராமின் என்னும் மனத் தளர்ச்சி எதிர் மருந்துடனான சிகிச்சையிலிருந்து பலன் அடைந்தனர் என அறிவித்த முந்தைய மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளுடன் இந்த் முடிவுகள் ஒத்திசைவு கொண்டதாக உள்ளன.[181][182][183] இவ்வாறு ஒத்த முடிவுகளைப் பெறினும், இவற்றின் மேல் விளக்கம் குறித்து நூலாசிரியர்கள வாதிக்கலாயினர். "மாற்று சிகிச்சைகள் ஏதும் பலன் அளிக்காத நிலையில், மிகவும் தீவிரமான மனத் தளர்ச்சி நோயால் அவதியுறும் நோயாளிகளைத் தவிர வேறு எவருக்கும் மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவத்தைப் பரிந்துரைப்பதற்கு மிகக் குறைந்த ஆதரவே உள்ளது" என ஒரு நூலாசிரியர் உரைக்கிறார்.[179] மனத் தளர்ச்சி எதிர் மருத்துவம் என்னும் கோப்பை "முழுமையாக இருப்பதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது" என்று கூறும் மற்றொரு நூலாசிரியர் "அது முழுவதும் காலியானது" என்பதை மறுக்கிறார். மருத்துவத்திற்கு முதல் நிலை மாற்றாக உள்ள உளப்பிணி சிகிச்சை அதை விடவும் உயர்வான திறத்தன்மை கொண்டிருக்கவில்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.[184]

பெரும் மனத் தளர்ச்சியில், உளப்பிணி சிகிச்சையின் அளவிற்கு மனத் தளர்ச்சி எதிர் மருந்துகளும் திறத்தன்மை கொண்டுள்ளன என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இது, பெரும் மனத் தளர்ச்சியின் தீவிரமான மற்றும் இலேசான வகைகள் இரண்டிற்குமே பொருந்தும்.[185][186] இதற்கு மாறாக, டிஸ்தீமியா நோய்க்கு மருந்துகள் அதிகப் பலன் அளிக்கின்றன.[185][186] எஸ்எஸ்ஆர்ஐ துணைப்பிரிவு உளப்பிணி சிகிச்சையை விட சற்றே அதிக அளவில் திறத்தன்மை கொண்டிருக்கலாம். இதற்கு மாறாக, உளப்பிணி சிகிச்சையை விட மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள் கொண்ட செயற்திட்டங்களிலிருந்து அதிக அளவில் நோயாளிகள் நின்று விடுகின்றனர். அம்மருந்துகளின் பக்க விளைவுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.[185] உளப்பிணி சிகிச்சை, எப்போதாவது கொடுக்கப்படும் "ஊக்க" அமர்வுகளைத் தவிர்த்து ஏறக்குறைய நிறுத்தப்பட்ட பின்னரும், முழுவதுமாக குணமாகி விட்ட மனத் தளர்ச்சியின் மீட்சியை வெற்றிகரமான தடுப்பதாகத் தெரிகிறது. மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள் உடனான சிகிச்சையைத் தொடர்வதன் மூலமாக நோய்த்தடுப்பில் அதே அளவிலான வெற்றியை அடைய முடியும்.[186] இருப்பினும், மருத்துவமும், உளப்பிணி சிகிச்சை முறையும் வெவ்வேறானவை என்றும், அவற்றை ஒப்பிட இயலாதென்றும் வாதிடுகின்றனர். உணர்ச்சிகளின் பின்னால் உள்ள பொருளைப் புரிந்து கொள்ளுதல், அவற்றை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை உளப்பிணி சிகிச்சை முறை ஈடுபடுத்துகிறது. மருத்துவமோ உணர்ச்சிகளை உயிரிய வேதியியல் முறை கொண்டு ஒழுங்குபடுத்துகிறது. பெரும்பாலான நிகழ்வுகளில், இரண்டு அணுகுமுறைகளையுமே, ஒன்றாகவோ அல்லது ஒன்றன் பின் ஒன்றாகவோ மேற்கொள்வது அவசியமாக இருக்கலாம்.

[தொகு] மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகளும் தற்கொலை எண்ணங்களும்

எஸ்எஸ்ஆர்ஐ கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் 18-24 வயதான இளைஞர்கள் ஆகியோரின் மீதான சில ஆய்வுகளில் தற்கொலைக்கான உளக் கற்பனைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றிற்கான ஆபத்து மிகுந்திருப்பதாகத் தெரிய வந்தது.[187][188][189][190][191] எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகள் வயது வந்தோரில் தற்கொலைக்கான ஆபத்தை அதிகரிக்குமா, அல்லவா என்பது தெளிவாகவில்லை.[191] எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகள் மற்றும் தற்கொலைக்கான ஆபத்து ஆகியவற்றிற்கு இடயே எந்த விதத் தொடர்பும் இல்லை என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது.[192] பிளாசிபோவுடன் ஒப்பிடுகையில் எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளைப் பயன்படுத்துவோரில் தற்கொலை முயற்சிக்கான ஆபத்து அதிகரிப்பதாக பிற ஆய்வுகள் கூறுகின்றன.[193] இருப்பினும், மரபுவழியாக, மிக அதிக அளவில் தற்கொலை விகிதம் கொண்ட பல நாடுகளிலும் எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளின் பரவலான பயன்பாடு அவ்வித ஆபத்தைக் குறிப்பிடும் அளவு குறைத்திருப்பதாக வேறு பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[194]

24 வயதிற்கும் கீழான மனத் தளர்ச்சி நோயாளிகளில் தற்கொலைக்கான ஆபத்து அதிகரித்தபடியால், எஸ்எஸ்ஆர்ஐ மற்றும் இதர மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகளின் மீது கறுப்புப் பெட்டி எச்சரிக்கையை, அச்சிடும் முறை 2007ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில், அறிமுகமானது.[195] ஜப்பானிய சுகாதார அமைச்சகம்[196] இதை ஒத்த எச்சரிக்கை அறிக்கைகளை விடுத்துள்ளது.

[தொகு] மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சை

இரண்டு மின்முனைகளின் வழியாக மின்துடிப்புகள் மூளைக்கு அனுப்பப்படும் ஒரு நடைமுறையே மின்தூண்டல் வலிப்புச் சிகிச்சையாகும். இதில், பொதுவாக ஒவ்வொரு நெற்றிப் பொட்டின் மீதும் ஒரு மின்முனை, வலிப்பைத் தூண்டுவதற்காக வைக்கப்படுகிறது; பொதுவாக இந்த நடைமுறையின்போது, நோயாளி குறுகிய-கால பொது உணர்வு நீக்கியின் கீழ் இருப்பார். ஈசீடீ எனப்படும் இந்த சிகிச்சை முறையை, மனத் தளர்ச்சி எதிர் மருந்துகள் மற்றும், குறைந்த அளவில், உளப்பிணி சிகிச்சை முறை அல்லது பிற ஆதரவான ஊடுருவல்களுக்குப் பதிலளிக்காத தீவிரமான மனத் தளர்ச்சி நிகழ்வுகளுக்கு மருத்துவ மனை உளப்பிணி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.[197] மனத் தளர்ச்சி-எதிர் மருத்துவத்தை விட மிக விரைவாக ஈசீடீ செயலாற்றுவதால், இந்த சிகிச்சை முறை, ஆவேச உணர்வுடன் கூடிய மனத் தளர்ச்சி, உணவு அருந்துவதை நோயாளி முற்றிலுமாக நிறுத்தி விடுதல் அல்லது மிகத் தீவிரமான முறையில் நோயாளி தற்கொலை எண்ணம் அல்லது முயற்சிகளைக் கொண்டிருத்தல் போன்றவற்றிற்கான அவசர நிலை சிகிச்சைகளுக்கு முதல் தேர்வாக உள்ளது.[197] உடனடியான மிகக் குறுகிய காலகட்டத்திற்கு[198] மருந்தியல் சிகிச்சையை விடவும் ஈசீடீ சிகிச்சை அதிகப் பலன் கொண்டதே. ஆயினும், வழக்கமான நடைமுறையில் இதனால் நோய் குறைதல் என்பது மிகவும் குறைவே என இனம் சார்ந்த குறிப்பிடத்தக்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.[199] ஈசீடீ சிகிச்சையை மட்டும் பயன்படுத்துகையில் நோயின் மீட்சி முதல் ஆறு மாதங்களில் மிக அதிக விகிதத்தில் உள்ளது. இதை 50 விழுக்காடாக[200] முந்தைய ஆய்வுகள் உணர்த்தின. அண்மைய ஆய்வுகள் இன்னமும் அதிகமாக, பிளாசிபோவுடன் இணைந்தும், இது 84 விழுக்காடாக உள்ளது என உரைக்கின்றன.[201] இவ்வாறு ஆரம்பத்திலேய நோய் மீட்சி அடைவது உளப்பிணி சிகிச்சை மருத்துவத்தால் அல்லது மேற்கொண்டும் ஈசீடீ சிகிச்சையால் குறைக்கப்படலாம்.[202][203] சில ஒழுங்குமுறை அதிகாரிகள்[204] இவ்வாறு மேற்கொண்டும் ஈசீடீ சிகிச்சை அளிப்பதைப் பரிந்துரைக்கவில்லை எனினும், இத்தகைய நடைமுறை அதிக அளவிலேயே உள்ளது.[205] ஈசீடீ சிகிச்சையுடனான பொதுவான ஆரம்ப கட்ட எதிரிடை விளைவுகள் குறுகிய மற்றும் நீண்ட கால நினைவாற்றல் இழப்பு, இலக்கற்ற நிலை மற்றும் தலைவலி ஆகியவற்றை உள்ளிட்டவை.[206] ஈசீடீ சிகிச்சைக்குப் பிறகான நினைவாற்றலில் இடையூறு பொதுவாக சில மாதங்களில் சரியாகி விடுகிறதென்றாலும், இந்த சிகிச்சை இன்னமும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது; மற்றும் இதன் பாதுகாப்பு மற்றும் திறத்தன்மை குறித்த விவாதங்கள் தொடர்ந்தவாறே உள்ளன.[207][208]

[தொகு] ஆழ் மூளைத் தூண்டுதல்

பார்க்கின்சன் நோய் போன்ற சில அசைவுக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்தியேகமாகப் பயன்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆழ் மூளைத் தூண்டுதல் எனப்படும். இந்த நடைமுறையில், ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மண்டை ஓட்டில் ஒரு துளையை இட்டு, அதன் வழியே ஒரு மின்முனையை நோயாளியின் திசுவுக்குள் செலுத்துகிறார். பின்னர், மார்புப் பகுதியில் வைக்கப்படும் ஒரு கருவியானது, உள்வைக்கப்பட்ட மின்முனைக்கு சமிக்கைகளை, தலைத் தோலின் கீழ் பொருத்திய மின்கம்பிகள் மூலமாக அனுப்பும்.[209]

வலிப்பு மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவற்றிற்காக இந்த முறையைப் பயன்படுத்துவதிலேயே மருத்துவ சோதனைகள் குவிமையம் கொண்டுள்ளன. ஆயினும், இதனை உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம்ஒழுங்குமுறை ஆணையம் (எஃப்டிஏ) இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு மூளையில் அறுவை சிகிச்சை தேவையாக இருப்பதால், மனத் தளர்ச்சிக்கான சிகிச்சை முறைகளில் மிக அதிகமான ஊடுருவல் கொண்ட சிகிச்சைமுறை இதுவேயாகும்.[210]

[தொகு] உடற்பயிற்சி

இலேசான மனத் தளர்ச்சியின் மேலாண்மைக்கு[211] ஐக்கிய இராச்சிய சுகாதார ஆணையம் (U.K. health authorities) உடற்பயிற்சியைப் பரிந்துரைக்கிறது. ஆனால், புள்ளி விபரங்களின்படி இது பெரும் மனத் தளர்ச்சி நோயாளிகளில் மிகக் குறைந்த அளவு பலனே கொண்டுள்ளது.[212]

[தொகு] நேரடியாக வாங்கும் மருந்துகள்

உலகின் சில பகுதிகளில், மூலிகை நிவாரணமாக செயிண்ட் ஜான்ஸ் வார்ட் என்னும் மருந்து நேரடியாக கடைகளில் கிடைக்கப் பெறுகிறது.[156][213] இருப்பினும், பெரும் மனத் தளர்ச்சி நோயின் சிகிச்சையில் இதன் திறத்தன்மை முரண்பட்டதாகவும், குழப்பமூட்டுவதாகவும் உள்ளது. இதன் மருந்துத் தயாரிப்புத் தரம் மற்றும் இதிலுள்ள செயல்படும் பொருட்களின் அளவுகள் ஆகியவை ஒரே நிலையாக அன்றி மாறுபடுவதனால், இதன் பாதுகாப்பு கேள்விக்குறியானதே.[214] மேலும், மனத்தளர்ச்சி-எதிர் மருத்துவம் உட்பட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பல மருந்துகளுடனும் இது இடைவினை புரிகிறது. மேலும், நாளமிலாச் சுரப்பி இயக்குநீர் சார்ந்த கருத்தடையின் திறத்தன்மையை இது குறைத்து விடக் கூடும்.[215]

பெரும் மனத் தளர்ச்சி நோயின் சிகிச்சையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொள்ளும் திறத்தன்மையும் தெளிவற்றதாகவே உள்ளது.[216] இதன் மீதாக நிகழ்ந்த கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பெரும் ஆய்வுகள் நேர்மறை[217][218] மற்றும் எதிர்மறை[219][220] ஆகிய இருவகை முடிவுகளையும் அறிவித்துள்ளன.

எஸ்-அடினோசில்மெதியோனைன் S-adenosylmethionine (SAMe) மீதான குறுகிய கால மருத்துவ சோதனைகளின் மறு ஆய்வு அது வயது வந்தவர்களில் பெரும் மனத் தளர்ச்சி நோயின் சிகிச்சையில் திறன் பெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.[221] 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு மறு ஆய்வு, டிரைப்டோஃபான் மற்றும் 5-ஹைட்ரோடிரைப்டோஃபான் ஆகிய மருந்துகள் இரண்டும் பிளாசிபோவை விடத் திறன் வாய்ந்தவை என்று அறிவித்தன; ஆயினும், அவற்றின் சார்பாகக் கிடைக்கப்பெறும் ஆதாரங்களில் பெரும்பாலானவை குறைதரமாக, அறுதியிட்டுக் கூற இயலாத வண்ணம் உள்ளன.[222]

[தொகு] உடல் ரீதியான பிற சிகிச்சைகள்

மண்டையோட்டு வழியாக மீண்டும் மீண்டும் காந்தத் தூண்டல்கள் Repetitive transcranial magnetic stimulation (rTMS) என்பது மூளைக்குப் புறத்திலிருந்து சக்தி வாய்ந்த காந்தப் புலங்களை அனுப்புவதாகும். சிகிச்சை-எதிர்ப்பு கொண்ட மனத் தளர்ச்சியில் இந்த முறையைப் பயன்படுத்துவதை பல்வகை கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் ஆதரிக்கின்றன. ஐரோப்பா, கானடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இத்தகைய நிலைகளுக்காக இந்த சிகிச்சை அங்கீகாரம் பெற்றுள்ளது.[223][224][225] சிக்கலற்ற மனத் தளர்ச்சி மற்றும் சிகிச்சை-எதிர் மனத் தளர்ச்சி ஆகிய இரண்டிலுமே இது ஒரேயளவு திறத்தன்மை உடையதாக உள்ளது.[224] இருப்பினும், இரண்டையும் ஒரே நேரத்தில் அடக்கிய ஒரு ஆய்வில், இது ஈசீடீ சிகிச்சையை விடத் தாழ்வானதாக அறியப்பட்டது.[226]

2005ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாகஸ் நரம்புத் தூண்டுதல் (Vagus nerve stimulation) சிகிச்சை-எதிர் மனத் தளர்ச்சி நோய்க்கான சிகிச்சையாக அங்கீகாரம் பெற்றது. இதன் மீதாக நடைபெற்ற இரு புறம் மறை நிலை கொண்ட சோதனையில் சிகிச்சை-எதிர்ப்பு கொண்ட மனத் தளர்ச்சி[227] நோயாளிகளின்[228] மீது துணை சிகிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஒரே பெரும் ஆய்வில், குறுகிய காலப் பலன்கள் எதையும் காட்ட இது தவறிவிட்டது. 2008ஆம் ஆண்டில் ஒரு சீரான மறு ஆய்வு, மறைவில்லாத ஆய்வுகளில் வெளிப்பட்ட முடிவுகள் அவற்றின் திறத்தன்மை நிரூபணம் ஆவதற்காக மேலும் மருத்துவ சோதனைகளுக்கு உட்பட வேண்டும் என அறிவித்தது.[229]

[தொகு] நோய் குணமடைதலின் கணிப்பு

சிகிச்சை அளித்தாலும் அளிக்காவிட்டாலும், பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வுகள் காலப்போக்கில சரியாகி விடுகின்றன. வெளி நோயாளிகளின் காத்திருப்புப் பட்டியல் ஒரு சில மாதங்களிலேயே அறிகுறிகள் குறைதலை 10-15 விழுக்காடு வரை காட்டுகிறது. மேலும் 20 விழுக்காட்டினர் பெரும் மனத் தளர்ச்சி என்பதற்கான தகுதி நிலையை முழுமையாக எய்துவதில்லை.[230] ஒரு நிகழ்வின் காலகட்டத்தில் இடைநிலை என்பதானது 23 வாரங்கள் என்பதாக கணக்கிடப்படுகிறது. இதில், குணமடையும் விகிதம் அதிக பட்சமாக முதல் மூன்று வாரங்களுக்குள்ளாக உள்ளது.[231]

தங்களது மனத் தளர்ச்சி நோயின் முதல் நிகழ்வை அனுபவிப்பவர்களில் 80 விழுக்காட்டினர் குறைந்த பட்சம் தங்கள் வாழ்வில் மேலும் ஒரு முறையாவது இந்நோயினால் அவதியுறுவார் என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன.[232] ஒரு நோயாளியின் வாழ்நாளில் சராசரியாக நான்கு நிகழ்வுகள் இருக்கலாம்.[233] பொதுவான மக்கள் தொகையில் நடந்த ஆய்வுகளில், சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இல்லாவிடினும், பாதிப்பேர் நோய் நீங்கி நலமாக இருப்பதாகவே தெரிகிறது. எஞ்சிய பாதிப்பேர் குறைந்த பட்சம் மீண்டும் ஒரு முறையாவது இந்நோய்க்கு ஆளாகின்றனர் மற்றும் 15 விழுக்காட்டினர் நாள்பட்டதும் மீள்வதுமாக இந்நோயை அனுபவிக்கின்றனர்.[234] தேர்ந்தெடுத்த உள் நோயாளிகளின் மீதான ஆய்வுகளில் குணமடைதல் குறைவாகவும், நாள்பட்ட தன்மை அதிகமாகவும் காணப்பட்டது. புற நோயாளிகளின் மீதான ஆய்வுகளில் ஏறத்தாழ அனைவருமே குணமடைந்ததாகவும், நிகழ்வுகளின் இடைநிலைக் காலம் 11 மாதங்களாக இருப்பதாகவும் தெரிய வந்தது. தீவிரமான அல்லது உளப்பிணி சார் மனத் தளர்ச்சி கொண்டவர்கள் பிற மனத் தளர்ச்சி வகைகளுக்கான தகுதி நிலைகளையும் சந்திக்கின்றனர். இவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் நோய் மீட்சியை அனுபவிக்கின்றனர்.[235][236]

அறிகுறிகளை சிகிச்சையால் முழுதுமாக குணமாக்காவிடில், நோய் மீட்சி அடைவது சாத்தியமே. தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, குணமடைந்த பின்னர் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகளைத் தொடர்வது நோய் மீட்சியைத் தடுக்கலாம். தோராயமாக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பல சோதனைகளில் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, குணமடைந்த பின்னர் மனத் தளர்ச்சி மருந்துகளைத் தொடர்வது நோய் மீட்சியை 70 விழுக்காடு வரையில் குறைக்கலாம் (இது பிளாசிபோ எடுத்துக் கொண்டோரில் 41 விழுக்காடாகவும் மனத் தளர்ச்சி-எதிர் மருந்து எடுத்துக் கொண்டோரில் 18 விழுக்காடாகவும் இருந்தது). குறைந்த பட்சமாக பயன்பாட்டின் முதல் 36 மாதங்களுக்காவது இவற்றின் நோய்த்தடுப்பு விளைவு நீடிக்கின்றது.[237]

மனத் தளர்ச்சியின் மீள் நிகழ்வுகளை அனுபவிப்போருக்கு, மேலும் தீவிரமான, நீண்ட நாள் மனத் தளர்ச்சி நேராதிருப்பதற்கு, விரைவான மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும். சில நேரங்களில் மருந்துகளை நீண்ட காலத்திற்கோ அல்லது தமது வாழ்நாளின் மீதிப் பகுதி முழுவதற்குமாகவோ எடுத்துக் கொள்வது சிலருக்கு அவசியமாகி விடலாம்.[238]

நோய் குணமடைவதன் வெளிப்பாடு குறைவாக இருப்பதற்கான காரணங்கள், உகந்ததல்லாத சிகிச்சையை அளிப்பது, தீவிரமான ஆரம்பகட்ட அறிகுறிகள் உளப்பிணியை உள்ளிட்டிருப்பது, மிக இளம் வயதில் இந்நோய்க்கு ஆளாவது, அதிக அளவிலான முந்தைய நிகழ்வுகள், ஒரு வருடத்திற்குப் பிறகும் முழுமையாக குணமாகாது இருத்தல், முன்னரே இருப்பதான தீவிர மன மற்றும் மருத்துவக் கோளாறுகள் மற்றும் குடும்ப வாழ்வு செயல்பாடின்மை ஆகியவையாகும்.[239]

மனத் தளர்ச்சி கொண்ட நோயாளிகளின் வாழ்நாள் எதிர்பார்ப்பு அந்நோயற்றோரை விடக் குறைவானதே. இதற்கு இந்நோயாளிகள் தற்கொலைக்கான ஆபத்தில் இருப்பதும் ஓரளவு காரணமாக இருக்கலாம்.[240] இருப்பினும், பிற காரணங்களினாலும் இவர்களது மரண விகிதம் அதிகமாகவே உள்ளது.[241] இதய நோய் போன்ற பிற மருத்துவ நிலைகளுக்கு மேலும் ஏதுவான நிலையில் இவர்கள் இருப்பதும் இதற்குக் காரணமாகும்.[242] தற்கொலை செய்து கொள்வோரில் 60 விழுக்காட்டினர் வரை பெரும் மனத் தளர்ச்சி போன்ற மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகளைக் கொண்டுள்ளனர். ஒருவர் குறிப்பிடத்தக்க அளவில் நம்பிக்கையின்மை கொண்டிருந்தாலோ அல்லது மனத் தளர்ச்சி் மற்றும் எல்லைக்கோட்டிலான தனிமனிதப் பண்புக் கோளாறு borderline personality disorder ஆகிய இரண்டையும் கொண்டிருந்தாலோ, இதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.[243] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரும் மனத் தளர்ச்சி நோய் கண்டறிதலுடன் தொடர்புற்ற தற்கொலைக்கான ஆபத்து 3.4 விழுக்காடாக கணக்கிடப்படுகிறது. இது (பெண்களில் தற்கொலை முயற்சிகள் அடிக்கடி நிகழ்கின்றன எனினும்)[244] சராசரியாக ஆண்களில் ஏழு விழுக்காடாகவும் பெண்களில் 1 விழுக்காடாகவும் உள்ளது.[245] முன்னர் ஏற்கப்பட்டதை விட இக்கணிப்பு குறைவானதே. முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் மீது நடந்த ஆய்வுகளில் இது 15 விழுக்காடாக இருந்தது.[246]

[தொகு] நோய்ப்பரவு இயல்

[தொகு] நோய் பாதிப்புப் பரிமாணம்

2002ஆம் ஆண்டில், ஓர் முனை மனத் தளர்ச்சிச் சீர்குலைவு உடைய 100,000 நபர்களில் இயலாமை-சரிப்படுத்திய வாழ்வருட எண்ணிக்கை[247][551][552][553][554][555][556][557][558][559][560][561][562][563]

உலகெங்கும் நோயுற்ற விகிதம் அதிகரிப்பதற்குப் மனத் தளர்ச்சி முதன்மையான ஒரு காரணமாக விளங்குகிற்து.[248] இது வாழ்நாள் முழுதும் தொடர்வதான பாதிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. ஜப்பானில் 3 விழுக்காடு எனத் தொடங்கி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 17 விழுக்காடு வரையிலுமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் தம் வாழ்நாளில் மனத் தளர்ச்சியினால் அவதியுறுவோரின் விழுக்காடு எட்டு முதல் 12 வரையாக உள்ளது.[249][250] வட அமெரிக்காவில், ஒரு வருடத்திற்கும் நீண்டதான பெரும் மனத் தளர்ச்சி நோயைப் பெறுவதற்கான வாய்ப்பு ஆண்களுக்கு 3-5 விழுக்காடாகவும், பெண்களுக்கு 8-10 விழுக்காடாகவும் உள்ளது.[251][252] மக்கள் தொகை சார்ந்த ஆய்வுகள், ஏன் இவ்வாறு உள்ளது மற்றும் அறியாத காரணிகள் ஏதும் இதில் பங்களிக்கின்றனவா என்பது தெளிவாகா விட்டாலும், மனத் தளர்ச்சி நிகழ்வு ஆண்களைப் போல இரு மடங்கு பெண்களுக்கு உள்ளதாக தொடர்ந்து அறிவித்து வருகின்றன.[253] ஒப்புமையில் அதிக நிகழ்வுகள் இருப்பதற்குக் காரணம் வயது என்பதையும் விட பூப்பெய்தும்போது நிகழும் மாற்றங்களேயாகும். இவை, 15 முதல் 18 வயது வரையில் அதிகரிக்கும் விகிதங்களாக உள்ளன மற்றும் இவற்றிற்கு சுரப்பிகளின் இயக்குநீரை விட மனவியல் மற்றும் சமூகம் சார்ந்த காரணிகளே முதன்மையாக உள்ளன.[253]

30 துவங்கி 40 வயதிற்குள் பொதுவாக மக்கள் தமது முதல் மனத் தளர்ச்சி நிகழ்வை அனுபவிக்கத் தலைப்படுகின்றனர். 50 முதல் 60 வயதிற்குள்ளாக இதன் அடுத்த, சிறு உச்சம் என்ப்படும் நிகழ்வுகள் உண்டாகின்றன.[254] வாதம், பார்க்கின்சன் நோய் அல்லது தண்டுவட மரப்பு நோய் ஆகிய நரம்பியல் தொடர்பான நோய்கள் மற்றும் மகப்பேற்றுக்குப் பின்னரான முதல் வருடம் ஆகியவற்றில் மனத் தளர்ச்சியின் ஆபத்து அதிகரிப்பதாக உள்ளது.[255] இதய நோய்க்குப் பிறகு இது மேலும் பொதுவான நிகழ்வாக உள்ளது மற்றும் அத்தகைய நிகழ்வுகளில், குணமடைதலை விட மோசமடைவதே அதிக அளவில் உள்ளது.[242][256] வயது முதிர்ந்தோரில் மனத் தளர்ச்சி நோயின் பரிமாணம் பற்றி மாறுபட்ட ஆய்வுக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பெரும்பாலான தரவுகள் இந்த வயதினரில் நோய் நிகழ்வு குறைவதைக் காட்டுகின்றன.[257]

[தொகு] உடன் இருக்கும் நோய் நிலைகள்

பெரும் மனத் தளர்ச்சி, பெரும்பாலும் பிற உளப்பிணி பிரச்சினைகளுடன் இணைந்து ஏற்படுகிறது. 1990-92 வருடங்களில் வெளியான தேசிய உடனிருக்கும் நோய்கள் கருத்தாய்வு National Comorbidity Survey (US) பெரும் மனத் தளர்ச்சி நோயாளிகளில் 51 விழுக்காட்டினர் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் கலக்க மனநிலை நோயாலும் அவதியுறுவதாக அறிவித்தது.[258] கலக்க மன நிலை நோய்க்கான அறிகுறிகள் மனத் தளர்ச்சி நோயின் பாதையைப் பாதிப்பதாக, அதாவது அது குணமாவதைத் தாமதிப்பதாக, அதன் மீட்சிக்கான ஆபத்தை மற்றும் இயலாமையை அதிகரிப்பதாக மற்றும் தற்கொலைக்கான முயற்சிகளையும் அதிகரிப்பதாக, அமையக் கூடும்.[259] அமெரிக்க நரம்பியல் நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் ராபர்ட் சபோல்ஸ்கி (Robert Sapolsky), மன இறுக்கம், கலக்க மன நிலை மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவற்றிற்கான தொடர்பினை உயிரியல் முறைப்படி அளவிட்டு வெளிக்காட்ட இயலும் என்று வாதிடுகிறார்.[260] மது மற்றும் மருந்தின் தவறான பயன்பாடு, குறிப்பாக பற்றுடமை,[261] ஆகியவை அதிகரிதத விகிதத்தில் காணப்படுகின்றன. மேலும், கவனக் குறைவு மற்றும் மிகு செயற்பாடு கோளாறு (ADHD நோய் கண்டறியப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதனுடன் இணை நோயாக மனத் தளர்ச்சியையும் உருவாக்கிக் கொள்கின்றனர்.[262] உணர்வதிர்ச்சிக் கோளாறுக்குப் பிந்தைய மன இறுக்கம் மற்றும் மனத் தளர்ச்சி ஆகியவை பெரும்பாலும் ஒன்றாகவே ஏற்படுகின்றன.[1]

மனத் தளர்ச்சி மற்றும் வலி ஆகியவை பெரும்பாலும் ஒன்றாகவே ஏற்படுகின்றன. வலியுடன் இருப்பது மிகுந்த மனச்சோர்வை அளிக்கும் என்னும் எளிய காரணத்தினால் இது நிகழ்வதாக இருக்கலாம். குறிப்பாக, வலி நாள்பட்டதாகவும், கட்டுக்கடங்காததாகவும் இருக்கையில் இவ்வாறு நேரலாம்.[சான்று தேவை] செலிக்மன் முன்வைத்த கற்றறிந்த இயலாமை என்னும் கோட்பாடுடனும் இது பொருந்துவதாக உள்ளது. மனத் தளர்ச்சி நோயாளிகளில் 65 விழுக்காட்டினருக்கும் மேலாக, வலியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் உள்ளன. வலியினால் அவதியுறும் நோயாளிகளில் ஐந்திலிருந்து 85 விழுக்காடு வரையிலானவர்கள் மனத் தளர்ச்சியினாலும் அவதியுறுவார்கள். இது, பொதுவான வகையில் குறைவாகவும், சிறப்பு மருத்துவ மனைகளில் அதிக அளவிலும் காணப்படுகிறது. மனத் தளர்ச்சி நோயைக் கண்டறிதல் பெரும்பாலும் தாமதமாகிறது அல்லது விட்டு விடப்படுகிறது. இதன் காரணமாக, நோயின் வெளிப்பாடு மேலும் மோசமடைகிறது. மனத் தளர்ச்சி கண்டு கொள்ளப்பட்டு ஆனால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டால், நோயின் வெளிப்பாடு நிச்சயம் மோசமாகவே இருக்கக் கூடும்.[263]

இதய நோய்களுக்கான ஆபத்து 1.5 முதல் இரண்டு மடங்கு வரை அதிகரிப்பதுடனும் மனத் தளர்ச்சி தொடர்புறுகிறது. அறிந்த பிற ஆபத்துக் காரணிகளைத் தவிர்த்து, புகை பிடித்தல், பருமன் போன்ற ஆபத்துக் காரணிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இது தொடர்புறுகிறது. மனத் தளர்ச்சி கொண்டோர் இதயக் கோளாறுகளுக்கான மருத்துவப் பரிந்துரைகளைக் கடைப்பிடிப்பது என்பதற்கான வாய்ப்பு சற்று குறைவே. இது, அவர்களுக்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. கூடுதலாக, உள்ளார்ந்த மனத் தளர்ச்சி நோயை இதய நோய் நிபுணர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். இதனால், அவர்களின் கவனிப்பின் கீழ் உள்ள நோயாளிகளின் இதய நோய் பிரச்சினை சிக்கலடையலாம்.[264]

[தொகு] நோயின் ஆதிக்கம்

மனத் தளர்ச்சி பெரும்பாலும் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றுடன் தொடர்புறுகிறது.[265] பெரும் மனத் தளர்ச்சியானது, வட அமெரிக்காவிலும் மற்றும் பிற உயர்-ஊதிய நாடுகளிலும் நோய் பாரம் (disease burden) என்பதன் முதன்மையான காரணமாகவும் மற்றும் உலகெங்கிலும் நாலாவது பெரும் காரணமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம், 200ஆம் ஆண்டில், உலகெங்கிலும் இது ஹெச்ஐவி நோய்க்கு அடுத்த இடத்தில், நோய் பாரத்திற்கு இரண்டாவது காரணமாக இருக்கலாம் என கணித்துள்ளது.[266] நோய் மீட்சியில் சிகிச்சை பெறுவதில் தாமதம் அல்லது சிகிச்சை பெறாதிருத்தல் மற்றும் சிகிச்சை அளிப்பதில் மருத்துவங்களின் செயல்திறமையின்மை ஆகியவை இந்த ஆற்றலின்மைக்கு சிகிச்சை அளிப்பதில் இரு பெரும் தடைகளாக உள்ளன.[267]

[தொகு] வரலாறு

பண்டைய கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் (Hippocrates) உளச்சோர்வு நோயை குறிப்பிட்ட மன மற்றும் உடல் ரீதியான அறிகுறிகளுடன் கூடிய ஒரு குறிப்பிடத்தக்க நோயாக விவரித்தார். "அச்சங்களும், சோர்வுகளும் நீண்ட காலம் நீடித்திருப்பது" இந்த நோயின் அறிகுறி என அவர் கூறினார்.[268] இது, இந்த நோயைப் பற்றிய இன்றைய கருத்துருவை ஒத்த ஆனால் அகன்ற ஒரு விவரிப்பாகும். வருத்தம், சோகம், சோர்வு, பல நேரங்களில் அச்சம், வெகுள்தல், மருட்சி மற்றும் மிகை விருப்பு ஆகியவற்றை உள்ளிட்ட அறிகுறித் தொகுதி காணப்படுவதற்கு அதிக முதன்மையை வழங்கியது.[62]

மனத்தளர்ச்சியை மன அழுத்தம் என்ற சொல் கொண்டும் வழங்குகின்றனர். தளர்ச்சி, (டிப்ரஷன் ) என்னும் சொல்லுக்கு இலத்தீன் மொழியில் "கீழாக அழுத்துவது" என்னும் பொருள் கொண்ட டிப்ரெமிரா என்னும் வினைச்சொல்லே வேராகும்.[269] 14ஆம் நூற்றாண்டு துவங்கி "அழுத்துதல்" என்பதற்குப் பொருள் கிளர்ச்சியுறுவதை அடக்குதல் என்றானது. 1665ஆம் ஆண்டு ஆங்கில நூலாசிரியர் ரிச்சர்ட் பேக்கர் என்பவர் தமது கிரானிக்கிள்ஸ் என்னும் நூலில், "ஆர்வத்தை அடக்கி வைத்த" ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மற்றொரு ஆங்கில எழுத்தாளரான சாமுவேல் ஜான்சன் இதே போன்ற பொருளில் இச்சொல்லை 1753ஆம் ஆண்டு பயன்படுத்தினார்.[270] உடற்கூறு மற்றும் பொருளாதாரம் ஆகிய இயல்களிலும் இச்சொல் வழங்கலானது. 1856ஆம் வருடம், உளவியல் அறிகுறியாக இச்சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் ஃபிரெஞ்சு உளப்பிணி மருத்துவரான லூயி டெலாசிவூ (Louis Delasiauve) என்பவராவார். 1860ஆம் வருட வாக்கில் மருத்துவ அகராதிகளில் உணர்ச்சிகளைக் குறைக்கும் ஒரு உடற்கூறு தொடர்பான மற்றும் ஒரு உருவகச் சொல்லாகப் புழக்கத்திற்கு வந்து விட்டது.[271] அரிஸ்டாட்டில் காலம் துவங்கி, உளச்சோர்வு என்பது கற்றல், கூர்மதி,மிகுந்த சிந்தனை மற்றும் ஆக்கவுணர்வு ஆகியவை கொண்டோருடன் தொடர்புடைய ஒரு சொல்லாக அமைந்து விட்டது. இந்நோய் பற்றிய புதிய கருத்துரு இவற்றை ஒதுக்கித் தள்ளியது. 10ஆம் நூற்றாண்டில் இது பெண்களுடன் அதிக அளவில் தொடர்புறுத்தப்பட்டது.[62]


உளச்சோர்வு என்பதே மிகவும் பொதுவாகப் பயன்பட்ட மருத்துவச் சொல்லாக இருப்பினும், மனத் தளர்ச்சி என்னும் சொற்றொடர் மருத்துவக் கட்டுரைகளில் பயன்படலானது. இது அந்த நூற்றாண்டின் இறுதியில் உளச்சோர்வு என்னும் பொருள் கொண்ட மற்றொரு சொல் என்றே நிலவி வந்தது. பல்வேறு நிலைகள் கொண்ட உளச்சோர்வை மனத் தளர்ச்சி நிலைகள் எனக் குறிப்பிட்ட ஜெர்மானிய உளப்பிணி சிகிச்சை மருத்துவரான எமில் கிராப்லின் (Emil Kraepelin) இந்தச் சொல்லை அதன் முழுப் பொருளிலும் முதன் முறையாகப் பயன்படுத்தியவர் எனலாம்.[272]

1917ஆம் ஆண்டு, சிக்மண்ட் ஃபிராய்டு இரங்கல் மற்றும் உளச்சோர்வு என்னும் தமது கட்டுரை ஒன்றில், உளச்சோர்வு நிலையை துக்கம் கடைப்பிடிக்கும் நிலைக்கு ஒப்பிட்டார். ஒரு மரணம் அல்லது காதற்பிரிவு போன்று, மிகவும் உயர்வாக மதித்திருந்த ஒரு புற உறவை இழப்பதானது உள்ளார்ந்த ஒரு இழப்பினையும் விளைவிக்கும் என்ற அவர் கருத்துரு ஒன்றை அவர் தெரிவித்தார். இதனை அவர், மனத் தளர்ச்சியுற்ற நபர் தமது அன்புக்கு உகந்த பொருளைத் தமது ஆழ்மனத்தின் வழியாக அடையாளம் கண்டு, தம்மைத்தாமே நேசிப்பதைப் போன்ற (நார்சிஸிஸ்டிக் narcissistic) செயல்முறையாக, சுயம் என்பதன் பாலியல் ஆர்வமாக , ஆர்வ விடுப்பாக வெளிப்படுத்துவது என விவரித்தார். இத்தகைய இழப்புக்கள் தீவிர உளச்சோர்வு அறிகுறிகளில் முடிகின்றன. இவை, துக்கம் கடைப்பிடிப்பதை விடவும் ஆழமான உணர்வுகளைக் கொண்டுள்ளன. இதை வெளியுலகம் எதிர்மறையாகப் பார்ப்பது மட்டும் அன்றி, ஒருவரது சுயமே இத்துடன் சமரசம் செய்து கொள்வதில்லை.[60] ஒரு நோயாளி தன்னைத்தானே பழி கூறிக் கொள்ளுதல், அவரது தாழ்வு மனப்பான்மை மற்றும் அவர் தம்மைப் பயனற்றதாக எண்ணிக்கொள்ளுதல் ஆகியவை மூலம் அந்நோயாளிக்குத் தன்னைப் பற்றியே உள்ளதான கருத்து வெளிப்படுகிறது.[61] ஆரம்ப கால வாழ்க்கையும் இந்நிலைக்கு ஏதுவான ஒரு காரணி என அவர் வலியுறுத்தினார்.[62]

சமூக மற்றும் உயிரியக் காரணிகள் கலந்த ஒரு கட்டமைப்பில் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பின்னணியில அவன் இவற்றிற்கு எதிர் வினை யாற்றுவதான செயலை மெயர் முன்னிலைப்படுத்தினார். உளச்சோர்வு என்பதை விட மனத் தளர்ச்சி என்னும் சொற்றொடரையே கையாள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.[273]

டிஎஸ்எம் வழிகாட்டுதலின் முதற்பதிப்பு (டிஎஸ்எம்-I,1952) மனத் தளர்ச்சி எதிர் விளைவு என்னும் சொற்றொடரைக் கொண்டிருந்தது. டிஎஸ்எம்-II மனத் தளர்ச்சி நரம்பியல் கோளாறு என்பதை உள்ளார்ந்த ஒரு மோதல் அல்லது அடையாளம் காணக் கூடிய ஒரு மோதலுக்கு அளவுக்கதிகமான ஒரு பின்விளைவு என வரையறுத்தது. பெரும் அழுத்தக் கோளாறுகளுக்குள்ளாக, கிளர்ச்சிசார் அழுத்த உளப்பிணி என்பதையும் இது உட்கொண்டிருந்தது.[274]

20ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், மூளையின் நரம்புக் கடத்திகளில் வேதிப் பொருட்களின் அசம நிலையால் மனத் தளர்ச்சி விளைவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துரைத்தனர். இந்தக் கோட்பாடு, 1950ஆம் ஆண்டு ரெஸ்பெரைன் மற்றும் ஐசோனியாசிட் ஆகியவை ஒற்றை அமீன் நரம்புக்கடத்திகளின் அளவுகளை மாற்றி மனத் தளர்ச்சி அறிகுறிகளைப் பாதிப்பதாகக் கண்டறிந்ததன் அடிப்படையில் உருவானது.[275]

பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்னும் சொற்றொடரை அமெரிக்க ஐக்கிய நாட்டு மருத்துவக் குழு ஒன்று 1970ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் அறிமுகப்படுத்தியது. அறிகுறிகளின் வடிவமைப்பின் அடிப்படையில் நோய் கண்டறியும் தகுதி நிலையின் ஒரு பகுதியாக (முன்னரே இருந்த ஃபெயினர் தகுதிநிலை என்பதன் மீது கட்டமைத்ததாக இது "ஆராய்ச்சி நோய் கண்டறியும் தகுதி நிலை" என அழைக்கப்பட்டது)),[276] டிஎஸ்எம்-II நூலில் எடுத்தாளப்பட்டது.[277] இதே தகுதிநிலையில் பயன்படுத்திய ஐசிடி-10 என்பதன் நிலைமாறாத் தன்மையைப் பாதுகாக்க, ஒன்பதே மாற்றங்களுடன் டிஎஸ்எம் நோய் கண்டறியும் அளவுகோலைப் ப்யன்படுத்தி, இலேசான மனத் தளர்ச்சி நிகழ்வு என்பதைக் குறிக்க, மிதமான மற்றும் தீவிரமான மனத் தளர்ச்சி என மேலும் துவக்க நிலை வகைகளை அமைத்தனர்.[277][278] உளச்சோர்வு என்பதன் ஆதிகாலக் கருத்து இன்னமும் உளச்சோர்வு துணை வகை என்னும் நிலையில் வழக்கில் உள்ளது.

மனத் தளர்ச்சி என்பதன் புதிய வரையறையின் மீது எதிரெதிரான கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்துக்கள் இருந்தபோதிலும் அது பரவலான ஒப்புதலைப் பெற்றது. உளச்சோர்வு என்பதற்கான நோய்கண்டறியும் அமைப்புக்கே திரும்ப வேண்டும் என்று பட்டறிவின் அடிப்படையில் வாதங்கள் இன்னமும் தொடர்கின்றன.[279][280] நோய் கண்டறியும் தகுதிநிலையை விரிவாக்கியதற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1950ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகளின் வணிகம் மற்றும் இவற்றின் உயிரிய மாதிரி ஆகியவற்றுடன் இது தொடர்புபடுத்தப்படுகிறது.[281]

[தொகு] சமூக மற்றும் கலாசாரக் கூறுகள்

மேலும் பார்க்க: List of people with depression
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் தம் வாழ்நாளில் இரு முறையாவது பெரும் மனத் தளர்ச்சி நிகழ்வுகளைக் கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.[282]

மனத் தளர்ச்சி என்பதைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் கருத்து ஒரு கலாசாரத்தினுள்ளும், பல்வேறு கலாசாரங்களுக்கு இடையிலும் வேறுபடுகிறது. ஒரு விமர்சகர் இவ்வாறு கூறுகிறார்: "அறிவியற்பூர்வமாக அறுதியிட்ட நிலை இல்லாத காரணத்தால், மனத் தளர்ச்சியின் மீதான வாதங்கள் மொழி பற்றிய கேள்விகளை நோக்கித் திசை திரும்பி விடுகின்றன. நாம் அதை எப்படிச் சொல்கிறோம் -'நோய்', 'கோளாறு', 'மன நிலை' - மற்றும் அதை நாம் எப்படிப் பார்க்கிறோம், கண்டறிகிறோம் மற்றும் சிகிச்சை அளிக்கிறோம் ஆகிய அனைத்தையுமே அது பாதிக்கிறது."[283] தீவிரமான மனத் தளர்ச்சி குறித்து, அது தனிப்பட்ட ஒருவருக்குத் தொழில் முறையான சிகிச்சை தேவைப்படும் நோயா அல்லது அது சமூக அல்லது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவதா அல்லது உயிரிய அசம நிலையின் காரணமாக அது உருவாகிறதா அல்லது ஒரு நெருக்கடியை தனிநபர்கள் புரிந்து கொள்வதில் உள்ள வேறுபாடுகளை அது பிரதிபலிக்கிறதா, அவ்வாறு செய்வதன் மூலம் அவரது இயலாமை மற்றும் உணர்வுப் போராட்டம் ஆகியவற்றை அது உறுதி செய்கிறதா என்று கலாசார ரீதியாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.[284][285]

சீனா போன்ற சில நாடுகளில் இதற்கான நோய் கண்டறிதல் என்பது அவ்வளவாகப் பொதுவானதல்ல. சீனர்கள் உணர்வுத் தளர்ச்சியை மறுதளிக்கின்றனர் அல்லது அதை உடற்கூறுக்குத் தொடர்புடையதாகக் கருதுகின்றனர் என ஒரு கருத்து நிலவுகிறது (1980ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து சீனர்கள் மனத் தளர்ச்சியை இவ்வாறு மறுதளிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது)[286] இதற்கு மாறாக, மேற்கத்தியக் கலாசாரத்தில், மனித வாழ்வில் சில நெருக்கடியான நிலைகளின் வெளிப்பாட்டினை மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்ற நிலைக்கு உயர்த்தி விடுவதாகவும் கூறப்படுவதுண்டு. மனத் தளர்ச்சி பற்றிய மேற்கத்தியக் கருத்து, அது துயரம் அல்லது சோகம் என்பதை ஒரு மருத்துவக் கருத்துருவாக மாற்றி விட்டது என ஆஸ்திரேலியப் பேராசிரியர் கோர்டன் பார்க்கரும் (Gordon Parker) பிறரும் வாதிடுகின்றனர்.[287][288] இதைப் போன்றே, ஹங்கேரிய - அமெரிக்க உளப்பிணி மருத்துவரான தாமஸ் சயாஸ் (Thomas Szasz) மற்றும் பலரும், மனத் தளர்ச்சி என்பது ஒரு உருவகச் சுகவீனம் என்றும் அது உண்மையான நோய் போலத் தவறாகக் கருதப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.[289] டிஎஸ்எம் மற்றும் அந்த உத்தியைப் பயன்படுத்தும் விவரிப்பு உளப்பிணியியல் (descriptive psychiatry) ஆகியவை, மனத் தளர்ச்சி போன்ற அருவமான கருத்துருக்களை சமூகக் கட்டமைப்பின் காரணமாக விளையக் கூடிய மெய்யான நிகழ்வாகக் கருதுகின்றன எனவும் ஒரு கவலை நிலவுகிறது.[290] அமெரிக்க முன்மாதிரி உளவியலாளர் ஜேம்ஸ் ஹில்மேன் (James Hillman) இவ்வாறு எழுதுகிறார்: "மனத் தளர்ச்சியானது, அடைக்கலம், வரம்பு, குவிமையம், ஈர்ப்பு, அழுத்தம் மற்றும் தன்னடக்கம் கொண்ட இயலாமை ஆகியவற்றைக் கொண்டு வருவதால் அது ஆத்மாவுக்கு ஆரோக்கியமானதே"[291] மனத் தளர்ச்சியை சிகிச்சைகள் மூலம் குணமாக்குவது என்பது கிறித்துவக் கருத்தான உயிர்த்தெழுதல் என்பதை எதிரொலிப்பதாகவும், ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிலையை அது சைத்தானின் நிலையாக மாற்றி விடுவதாகவும் ஹில்மேன் வாதிடுகிறார்.

மனத் தளர்ச்சியை வெளிப்படுத்துவதுடன் சமூக இழுக்கு இணைந்திருப்பதன் காரணமாகவோ அல்லது இந்த நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை பற்றிய அறியாமையின் காரணமாகவோ, வரலாற்று நாயகர்கள் பலரும் இதைப் பற்றிப் பேசுவதையோ அல்லது இதற்குச் சிகிச்சை பெறுவதையோ தவிர்த்தே வந்துள்ளன்ர். இருப்பினும், இத்தகைய வரலாற்று நாயகர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோர் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் அல்லது அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்கையில், அவர்கள் மனத் தளர்ச்சியை ஏதாவது ஒரு வடிவில் கொண்டிருந்திருக்க வேண்டும் எனப் புலப்படுகிறது. இவ்வாறு மனத் தளர்ச்சியால் அவதியுற்றிருக்கக்கூடியவர்கள் பட்டியலில், ஆங்கிய எழுத்தாளர் மேரி ஷெல்லி[292] (Mary Shelley), அமெரிக்க - ஆங்கிலேய எழுத்தாளர் ஹென்றி ஜேம்ஸ்[293] (Henry James) மற்றும் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) ஆகியோர் அடங்குவர்.[294] சமகாலத்திய புகழ் வாய்ந்தோர் சிலரும் இத்தகைய மனத் தளர்ச்சி கொண்டிருந்திருக்கக் கூடியது சாத்தியமே. இவர்களில், கனடியப் பாடலாசிரியர் லியோனார்ட் கொஹென் (Leonard Cohen) மற்றும் அமெரிக்க நாடக ஆசிரியர் டென்னெஸ் வில்லியம்ஸ் (Tennessee Williams) ஆகியோரும் உண்டு.[295] வில்லியம் ஜேம்ஸ் (William James) மற்றும் ஜான்.பி.வாட்சன் (John B. Watson) போன்ற முன்னோடியான சில உளவியலாளர்கள் தங்களது மனத் தளர்ச்சி நிலைக்குத் தாமே சிகிச்சை அளித்துக் கொண்டதுண்டு.

ஆக்க உணர்விற்கு நரம்பியல் கோளாறுகளும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகளும் தொடர்பு கொண்டுள்ளனவா என்பதன் மீதான விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்த விவாதம் அரிஸ்ட்டாட்டிலின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.[296][297] மனத் தளர்ச்சியின் மீதான சில பிரதிபலிப்புகளை ஆங்கில இலக்கியம் அளிக்கிறது.[298] ஆங்கிலேயத் தத்துவ இயலாளர் ஜான் ஸ்டூவார்ட் மில் (John Stuart Mill) பல மாதங்களுக்கு நீடித்த, "நரம்புகளின் ஒரு மந்தமான நிலை"யினை அனுபவித்தார். ஒரு மனிதர் "மகிழ்வான கிளர்ச்சியை அனுபவிக்க ஏதுவற்று இருப்பது; பிற நேரங்களில் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒன்று சுவையற்றதாகவோ கருத்தற்றதாகவோ மாறி விடுவதான ஒரு மன நிலை" என இதை அவர் விவரிக்கிறார். சாமுவேல் டெய்லர் கோலரிட்ஜ் (Samuel Taylor Coleridge) ("Dejection") எழுதிய "மனச்சோர்வு" என்பதை இந்நிலையின் மிகக் கச்சிதமான விவரணையாக அவர் மேற்கோள் காட்டுகிறார். இதில் கோலரிட்ஜ் தம்முடைய நிலையையே விவரித்திருந்தார்: "வலியில்லாத துயரம், கருமையான, வறண்டதான வெற்றிடம்/ கலக்கமான, மூச்சுத் திணறுவதைப் போன்ற, உணர்வெழுச்சியற்ற துயரம்/ சொற்களிலோ, பெருமூச்சினிலோ அல்லது கண்ணீர்த் துளியிலோ இயற்கையான வடிகாலைக் கொள்ளாத, நிவாரணமே இல்லாத நிலை".[299][300]

1780ஆம் ஆண்டுகளில் ஆங்கில எழுத்தாளரான சாமுவேல் ஜான்சன், தமது மனத் தளர்ச்சியை விவரிக்க, 'கறுப்பு நாய்" என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தினார். [301]இதைத் தொடர்ந்து மனத் தளர்ச்சி நோயால் அவதியுற்ற முன்னாள் ஆங்கிலேய பிரதமர் சர்.வின்ஸ்டன் சர்ச்சில் (Sir Winston Churchill) இச்சொற்றொடரைப் பிரபலப்படுத்தினார்.[301]

மனத் தளர்ச்சியின் மீதான சமூகரீதியான இழுக்கு என்பது பரவலாக உள்ளது. மன ஆரோக்கிய சேவை மையங்களுடன் தொடர்பில் இருப்பது இதை ஓரளவிற்குக் குறைக்கிறது. இதைப் பற்றிய பொது மக்களின் கருத்து, ஆரோக்கியத் தொழில் முறையாளர்களின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. மருந்தியல் ரீதியான சிகிச்சைகளை விட மாற்று சிகிச்சைகளே உதவி புரிவதாக அவர்கள் கருதுகின்றனர். மருந்தியல் ரீதியான சிகிச்சைகளை அவர்கள் கீழ்த்தரமாகக் கருதுகின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் ராயல் காலேஜ் ஆஃப் சைக்கியாட்டிரிஸ்ட்ஸ் Royal College of Psychiatristsமற்றும் ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ் Royal College of General Practitioners ஆகிய அமைப்புகள், மனத் தளர்ச்சி மீதான சமூக இழுக்கைக் குறைப்பதற்கான விழிப்புணர்வுப் பிரசாரமாக, 'மனத் தளர்ச்சியை முறியடிப்போம்' என்ற இயக்கத்தை 1992 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நிகழ்த்தின. இதன் பின்னர் எம்ஓஆர்ஐ (MORI) நிகழ்த்திய ஒரு ஆய்வில், இந்த இயக்கம் மனத் தளர்ச்சி மற்றும் அதற்கான சிகிச்சை ஆகியவை குறித்த பொது மக்களின் கருத்தில் மிகக் குறைந்த அளவே நேர்மறையான மாற்றத்தை உருவாக்கியதாகக் கூறியது.[302]

[தொகு] குறிப்புகள்

[தொகு] குறிப்புதவிகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 வார்ப்புரு:Vcite book
  2. வார்ப்புரு:Vcite journal
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 American Psychiatric Association 2000a, p. 349
  4. American Psychiatric Association 2000a, p. 412
  5. 5.0 5.1 வார்ப்புரு:Vcite journal
  6. 6.0 6.1 6.2 6.3 American Psychiatric Association 2000a, p. 350
  7. 7.0 7.1 7.2 "Bedfellows:Insomnia and Depression". பார்த்த நாள் 2010-07-02.
  8. Insomnia: Assessment and Management in Primary Care,
  9. வார்ப்புரு:Vcite journal
  10. American Psychiatric Association 2000a, p. 354
  11. வார்ப்புரு:Vcite journal
  12. வார்ப்புரு:Vcite book
  13. வார்ப்புரு:Vcite journal
  14. வார்ப்புரு:Vcite web
  15. 15.0 15.1 வார்ப்புரு:Vcite journal
  16. வார்ப்புரு:Vcite web
  17. வார்ப்புரு:Vcite web
  18. வார்ப்புரு:Vcite journal
  19. வார்ப்புரு:Vcite journal
  20. 20.0 20.1 20.2 வார்ப்புரு:Vcite web
  21. Barlow 2005, p. 226
  22. வார்ப்புரு:Vcite web
  23. 23.0 23.1 வார்ப்புரு:Vcite journal
  24. 24.0 24.1 Krishnan V, Nestler EJ (October 2008). "The molecular neurobiology of depression". Nature 455 (7215): 894–902. doi:10.1038/nature07455. PMID 18923511. 
  25. வார்ப்புரு:Vcite journal
  26. வார்ப்புரு:Vcite journal
  27. வார்ப்புரு:Vcite journal
  28. வார்ப்புரு:Vcite journal
  29. வார்ப்புரு:Vcite journal
  30. வார்ப்புரு:Vcite journal
  31. வார்ப்புரு:Vcite journal
  32. வார்ப்புரு:Vcite journal
  33. வார்ப்புரு:Vcite journal
  34. வார்ப்புரு:Vcite journal
  35. வார்ப்புரு:Vcite journal
  36. வார்ப்புரு:Vcite journal
  37. வார்ப்புரு:Vcite journal
  38. வார்ப்புரு:Vcite journal
  39. வார்ப்புரு:Vcite journal
  40. வார்ப்புரு:Vcite journal
  41. 41.0 41.1 வார்ப்புரு:Vcite journal
  42. வார்ப்புரு:Vcite journal
  43. வார்ப்புரு:Vcite journal
  44. 44.0 44.1 44.2 வார்ப்புரு:Vcite book
  45. PMID
  46. Sadock 2002, p. 541
  47. McCullough, Michael; Larson, David (1 June 1999). "Religion and depression: a review of the literature". Twin Research (Australian Academic Press) 2 (2): 126–136. doi:10.1375/136905299320565997. PMID 10480747. http://www.ingentaconnect.com/content/aap/twr/1999/00000002/00000002/art00008 
  48. வார்ப்புரு:Vcite journal Archived அக்டோபர் 21, 2006 at the Wayback Machine.
  49. வார்ப்புரு:Vcite journal
  50. வார்ப்புரு:Vcite web
  51. Beck 1987, pp. 10–15
  52. Beck 1987, p. 3
  53. வார்ப்புரு:Vcite book
  54. 54.0 54.1 வார்ப்புரு:Vcite journal
  55. 55.0 55.1 Barlow 2005, pp. 230–32
  56. வார்ப்புரு:Vcite journal
  57. வார்ப்புரு:Vcite book
  58. வார்ப்புரு:Vcite book
  59. வார்ப்புரு:Vcite journal
  60. 60.0 60.1 வார்ப்புரு:Vcite journal
  61. 61.0 61.1 Freud, S (1984). "Mourning and Melancholia". in Richards A (ed.). 11.On Metapsychology: The Theory of Psycholoanalysis. Aylesbury, Bucks: Pelican. pp. 245–69. ISBN 0-14-021740-1. 
  62. 62.0 62.1 62.2 62.3 வார்ப்புரு:Vcite journal
  63. வார்ப்புரு:Vcite book
  64. வார்ப்புரு:Vcite web
  65. May 1994, p. 133
  66. Boeree, CG (1998). "Abraham Maslow: Personality Theories" (PDF). Psychology Department, Shippensburg University. பார்த்த நாள் 2008-10-27.
  67. வார்ப்புரு:Vcite book
  68. வார்ப்புரு:Vcite journal
  69. வார்ப்புரு:Vcite journal
  70. வார்ப்புரு:Vcite journal
  71. வார்ப்புரு:Vcite journal
  72. வார்ப்புரு:Vcite journal
  73. Sadock 2002, p. 540
  74. வார்ப்புரு:Vcite journal
  75. Kim D. (2008) Blues from the Neighborhood? Neighborhood Characteristics and Depression. Epidemiol Rev Aug 27 PMID 18753674
  76. வார்ப்புரு:Vcite journal
  77. வார்ப்புரு:Vcite journal
  78. வார்ப்புரு:Vcite journal
  79. வார்ப்புரு:Vcite book
  80. வார்ப்புரு:Vcite journal
  81. வார்ப்புரு:Vcite journal
  82. வார்ப்புரு:Vcite journal
  83. வார்ப்புரு:Vcite journal
  84. வார்ப்புரு:Vcite journal
  85. வார்ப்புரு:Vcite journal
  86. Riss, J.; Cloyd, J.; Gates, J.; Collins, S. (2008). "Benzodiazepines in epilepsy: pharmacology and pharmacokinetics". Acta Neurol Scand 118 (2): 69–86. doi:10.1111/j.1600-0404.2008.01004.x. PMID 18384456. 
  87. Semple, David; Roger Smyth, Jonathan Burns, Rajan Darjee, Andrew McIntosh (2007) [2005]. "13". Oxford Handbook of Psychiatry. United Kingdom: Oxford University Press. p. 540. ISBN 0198527837. 
  88. Collier, Judith; Longmore, Murray (2003). "4". in Scally, Peter. Oxford Handbook of Clinical Specialties (6 ed.). Oxford University Press. p. 366. ISBN 978-0198525189. 
  89. வார்ப்புரு:Vcite journal
  90. வார்ப்புரு:Vcite web
  91. வார்ப்புரு:Vcite journal
  92. வார்ப்புரு:Vcite web
  93. 93.0 93.1 வார்ப்புரு:Vcite journal
  94. வார்ப்புரு:Vcite journal
  95. வார்ப்புரு:Vcite journal
  96. வார்ப்புரு:Vcite journal
  97. வார்ப்புரு:Vcite journal
  98. வார்ப்புரு:Vcite journal
  99. வார்ப்புரு:Vcite journal
  100. வார்ப்புரு:Vcite journal
  101. வார்ப்புரு:Vcite journal
  102. Sadock 2002, p. 108
  103. Sadock 2002, p. 260
  104. Sadock 2002, p. 288
  105. American Psychiatric Association 2000a, p. xxix
  106. American Psychiatric Association 2000a, p. 345
  107. வார்ப்புரு:Vcite web
  108. American Psychiatric Association 2000a, p. 372
  109. Parker 1996, p. 173
  110. American Psychiatric Association 2000a, p. 352
  111. வார்ப்புரு:Vcite journal
  112. வார்ப்புரு:Vcite journal
  113. 113.0 113.1 Sadock 2002, p. 552
  114. American Psychiatric Association 2000a, p. 778
  115. வார்ப்புரு:Vcite journal
  116. வார்ப்புரு:Vcite journal
  117. American Psychiatric Association 2000a, pp. 419–20
  118. American Psychiatric Association 2000a, pp. 421–22
  119. American Psychiatric Association 2000a, pp. 417–18
  120. வார்ப்புரு:Vcite web
  121. வார்ப்புரு:Vcite web
  122. American Psychiatric Association 2000a, p. 425
  123. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named psychiatric355
  124. வார்ப்புரு:Vcite journal
  125. "Differential Diagnosis". பார்த்த நாள் 2010-07-16.
  126. வார்ப்புரு:Vcite journal
  127. வார்ப்புரு:Vcite web
  128. வார்ப்புரு:Vcite web
  129. வார்ப்புரு:Vcite journal
  130. வார்ப்புரு:Vcite journal
  131. வார்ப்புரு:Vcite journal
  132. வார்ப்புரு:Vcite book
  133. வார்ப்புரு:Vcite journal
  134. வார்ப்புரு:Vcite journal
  135. வார்ப்புரு:Vcite journal
  136. Roth, Anthony; Fonagy, Peter (2005) [1996]. What Works for Whom? Second Edition: A Critical Review of Psychotherapy Research. Guilford Press. pp. 78. ISBN 159385272X. 
  137. வார்ப்புரு:Vcite journal
  138. வார்ப்புரு:Vcite journal
  139. வார்ப்புரு:Vcite journal
  140. வார்ப்புரு:Vcite journal
  141. வார்ப்புரு:Vcite journal
  142. வார்ப்புரு:Vcite journal
  143. வார்ப்புரு:Vcite journal
  144. வார்ப்புரு:Vcite journal
  145. Beck 1987, p. 10
  146. வார்ப்புரு:Vcite journal
  147. வார்ப்புரு:Vcite book
  148. வார்ப்புரு:Vcite journal
  149. Barlow 2005, p. 20
  150. வார்ப்புரு:Vcite journal
  151. வார்ப்புரு:Vcite web
  152. வார்ப்புரு:Vcite journal
  153. வார்ப்புரு:Vcite journal
  154. 154.0 154.1 வார்ப்புரு:Vcite journal
  155. வார்ப்புரு:Vcite journal
  156. 156.0 156.1 156.2 Royal Pharmaceutical Society of Great Britain 2008, p. 204
  157. வார்ப்புரு:Vcite journal
  158. வார்ப்புரு:Vcite journal
  159. வார்ப்புரு:Vcite journal
  160. வார்ப்புரு:Vcite journal
  161. வார்ப்புரு:Vcite journal
  162. வார்ப்புரு:Vcite web
  163. 163.0 163.1 வார்ப்புரு:Vcite journal
  164. வார்ப்புரு:Vcite journal
  165. வார்ப்புரு:Vcite web
  166. வார்ப்புரு:Vcite journal
  167. வார்ப்புரு:Vcite journal
  168. வார்ப்புரு:Vcite journal
  169. வார்ப்புரு:Vcite journal
  170. வார்ப்புரு:Vcite journal
  171. வார்ப்புரு:Vcite journal
  172. வார்ப்புரு:Vcite journal
  173. "Study Undermines Case for Antidepressants". பார்த்த நாள் 2010-07-02.
  174. வார்ப்புரு:Vcite journal
  175. வார்ப்புரு:Vcite journal
  176. வார்ப்புரு:Vcite journal
  177. வார்ப்புரு:Vcite journal
  178. வார்ப்புரு:Vcite web
  179. 179.0 179.1 வார்ப்புரு:Vcite journal
  180. வார்ப்புரு:Vcite journal
  181. வார்ப்புரு:Vcite journal
  182. வார்ப்புரு:Vcite journal
  183. வார்ப்புரு:Vcite journal
  184. வார்ப்புரு:Vcite journal
  185. 185.0 185.1 185.2 வார்ப்புரு:Vcite journal
  186. 186.0 186.1 186.2 வார்ப்புரு:Vcite journal
  187. Stone MB, Jones ML (2006-11-17). "Clinical review: relationship between antidepressant drugs and suicidality in adults" (PDF). Overview for December 13 Meeting of Psychopharmacologic Drugs Advisory Committee (PDAC) 11–74. FDA. பார்த்த நாள் 2007-09-22.
  188. Levenson M, Holland C (2006-11-17). "Statistical Evaluation of Suicidality in Adults Treated with Antidepressants" (PDF). Overview for December 13 Meeting of Psychopharmacologic Drugs Advisory Committee (PDAC) 75–140. FDA. பார்த்த நாள் 2007-09-22.
  189. வார்ப்புரு:Vcite journal
  190. Hammad TA (2004-08-116). "Review and evaluation of clinical data. Relationship between psychiatric drugs and pediatric suicidality." (PDF) 42; 115. FDA. பார்த்த நாள் 2008-05-29.
  191. 191.0 191.1 வார்ப்புரு:Vcite journal
  192. வார்ப்புரு:Vcite journal
  193. வார்ப்புரு:Vcite journal
  194. வார்ப்புரு:Vcite journal
  195. வார்ப்புரு:Vcite web
  196. "www1.mhlw.go.jp" (PDF) (Japanese). Japanese Ministry of Health.
  197. 197.0 197.1 வார்ப்புரு:Vcite journal
  198. வார்ப்புரு:Vcite journal
  199. வார்ப்புரு:Vcite journal
  200. வார்ப்புரு:Vcite journal
  201. வார்ப்புரு:Vcite journal
  202. வார்ப்புரு:Vcite journal
  203. வார்ப்புரு:Vcite journal
  204. வார்ப்புரு:Vcite book
  205. வார்ப்புரு:Vcite journal
  206. Barlow 2005, p. 239
  207. வார்ப்புரு:Vcite journal
  208. வார்ப்புரு:Vcite journal
  209. "Can a Shock to the Brain Cure Depression?". பார்த்த நாள் 2010-07-02.
  210. "Deep Brain Stimulation". பார்த்த நாள் 2010-07-02.
  211. வார்ப்புரு:Vcite web
  212. Mead GE, Morley W, Campbell P, Greig CA, McMurdo M, Lawlor DA (2009). "Exercise for depression". Cochrane Database Syst Rev (3): CD004366. doi:10.1002/14651858.CD004366.pub4. PMID 15753237
  213. வார்ப்புரு:Vcite web
  214. வார்ப்புரு:Vcite journal
  215. வார்ப்புரு:Vcite journal
  216. வார்ப்புரு:Vcite journal
  217. வார்ப்புரு:Vcite journal
  218. வார்ப்புரு:Vcite journal
  219. வார்ப்புரு:Vcite journal
  220. வார்ப்புரு:Vcite journal
  221. வார்ப்புரு:Vcite journal
  222. வார்ப்புரு:Vcite journal
  223. வார்ப்புரு:Vcite journal
  224. 224.0 224.1 வார்ப்புரு:Vcite journal
  225. வார்ப்புரு:Vcite web
  226. வார்ப்புரு:Vcite journal
  227. வார்ப்புரு:Vcite web
  228. வார்ப்புரு:Vcite journal
  229. வார்ப்புரு:Vcite journal
  230. வார்ப்புரு:Vcite journal
  231. வார்ப்புரு:Vcite journal
  232. வார்ப்புரு:Vcite journal
  233. வார்ப்புரு:Vcite journal
  234. வார்ப்புரு:Vcite journal
  235. வார்ப்புரு:Vcite journal
  236. வார்ப்புரு:Vcite journal
  237. வார்ப்புரு:Vcite journal
  238. "Major Depression". பார்த்த நாள் 2010-07-16.
  239. "Prognosis". பார்த்த நாள் 2010-07-16.
  240. வார்ப்புரு:Vcite journal
  241. வார்ப்புரு:Vcite journal
  242. 242.0 242.1 வார்ப்புரு:Vcite journal
  243. Barlow 2005, pp. 248–49
  244. வார்ப்புரு:Vcite journal
  245. வார்ப்புரு:Vcite journal
  246. வார்ப்புரு:Vcite journal
  247. [550]
  248. வார்ப்புரு:Vcite web
  249. வார்ப்புரு:Vcite journal
  250. வார்ப்புரு:Vcite journal
  251. வார்ப்புரு:Vcite journal
  252. வார்ப்புரு:Vcite journal
  253. 253.0 253.1 வார்ப்புரு:Vcite journal
  254. வார்ப்புரு:Vcite journal
  255. வார்ப்புரு:Vcite journal
  256. வார்ப்புரு:Vcite journal
  257. வார்ப்புரு:Vcite journal
  258. வார்ப்புரு:Vcite journal
  259. வார்ப்புரு:Vcite journal
  260. வார்ப்புரு:Vcite book
  261. வார்ப்புரு:Vcite journal
  262. வார்ப்புரு:Vcite book
  263. வார்ப்புரு:Vcite journal
  264. வார்ப்புரு:Vcite journal
  265. வார்ப்புரு:Vcite journal
  266. வார்ப்புரு:Vcite journal
  267. வார்ப்புரு:Vcite journal
  268. Hippocrates, Aphorisms , Section 6.23
  269. depress. (n.d.). Online Etymology Dictionary. Retrieved June 30, 2008, from Dictionary.com
  270. வார்ப்புரு:Vcite web
  271. வார்ப்புரு:Vcite journal
  272. வார்ப்புரு:Vcite journal
  273. வார்ப்புரு:Vcite journal
  274. வார்ப்புரு:Vcite book
  275. வார்ப்புரு:Vcite journal
  276. வார்ப்புரு:Vcite web
  277. 277.0 277.1 வார்ப்புரு:Vcite journal
  278. Gruenberg, A.M., Goldstein, R.D., Pincus, H.A. (2005) Classification of Depression: Research and Diagnostic Criteria: DSM-IV and ICD-10 (PDF). Wiley.com. Retrieved on October 30, 2008.
  279. வார்ப்புரு:Vcite journal
  280. வார்ப்புரு:Vcite journal
  281. வார்ப்புரு:Vcite book
  282. [643]
  283. வார்ப்புரு:Vcite web
  284. வார்ப்புரு:Vcite journal
  285. வார்ப்புரு:Vcite journal
  286. வார்ப்புரு:Vcite journal
  287. வார்ப்புரு:Vcite journal
  288. வார்ப்புரு:Vcite journal
  289. வார்ப்புரு:Vcite web
  290. வார்ப்புரு:Vcite book
  291. வார்ப்புரு:Vcite book
  292. வார்ப்புரு:Vcite book
  293. வார்ப்புரு:Vcite web
  294. வார்ப்புரு:Vcite book
  295. வார்ப்புரு:Vcite journal
  296. வார்ப்புரு:Vcite journal
  297. வார்ப்புரு:Vcite journal
  298. வார்ப்புரு:Vcite book
  299. வார்ப்புரு:Vcite book
  300. வார்ப்புரு:Vcite journal
  301. 301.0 301.1 வார்ப்புரு:Vcite web
  302. வார்ப்புரு:Vcite journal

[தொகு] தேர்ந்தெடுத்த மேற்கோள் நூல்கள்

[தொகு] புற இணைப்புகள்

வார்ப்புரு:Mental and behavioural disorders வார்ப்புரு:Bipolar disorder



சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்