பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டம்.


பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா) (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா)) இந்தியாவில் தீவிரவாதங்களை, பயங்கரவாதங்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த சட்டமாகும். 2001 ஆண்டின் பொட்டோ சட்டத்தின் மறு வடிவமாகும். அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் அடுத்து 2004 இல் வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இரத்து செய்யப்பட்டது.