பதிபாத மூலத்தர்
பதிபாத மூலத்தர் என்போர் இறைவனுக்கு வழிபாட்டுத் தொண்டினைத் தூய்மையுடன் செய்யும் முதன்மையாளரான கோயில் அர்ச்சகர்கள் ஆவர்.
தூய்மை[தொகு]
இவர்கள் நாள்தோறும் ஆகமவிதிப்படி புறத்தூய்மை செய்து கொண்டாராக, அகத்தூய்மையுடன் இறையக வாயில் தாண்டிச் செல்லும் வழக்குடையவர்களாதலால் அப்பகுதியினைத் தாமே தூய்மை செய்தற்குரிய திருவலகுடனும், அபிடேகம் செய்வதற்குரிய குடமும் கைக்கொண்டு செல்லும் நெறியுடையார்கள் என்ற நிலையில் கல்வெட்டுக்களில் பின்வருமாறு சிறப்பிக்கப்பெறுகின்றனர். [1]
“ | குடமும் குச்சியும் கொண்டு புகுவார் | ” |
“ | படிதாண்டிப் பரிகரிப்பார் | ” |
“ | பதிபாத மூலத்தர் | ” |
“ | தேவகன்மிகள் | ” |
“ | பஞ்சாசார்ய தேவகன்மிகள் | ” |
பொறுப்பு[தொகு]
இவர்கள் கோயில் நிர்வாகத்தினை முழுதும் நடத்துபவர்களாகவும், நிவந்தங்கள் ஏற்று முறைப்படி செலுத்துபவராகவும் சில சமயங்களில் இயங்கியுள்ளனர்.
தெய்வப்பணியாளர்[தொகு]
கோயிலின் முதன்மை அதிகாரமுடையாராக வழங்கப்பெறும் சண்டேசுவரரை முதல்வராகக் கொண்ட தெய்வப்பணியாளராகத் தம்மைக் குறித்துக்கொள்ளும் வகையில் 'ஆதிசண்டேசுவர தேவகன்மிகள்' என்றும், 'சண்டேசுவரர் உள்ளிட்ட தேவகன்மிகள்' என்றும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளனர். [1]
மேற்கோள்கள்[தொகு]
<references>