பதிபாத மூலத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிபாத மூலத்தர் என்போர் இறைவனுக்கு வழிபாட்டுத் தொண்டினைத் தூய்மையுடன் செய்யும் முதன்மையாளரான கோயில் அர்ச்சகர்கள் ஆவர்.

தூய்மை[தொகு]

இவர்கள் நாள்தோறும் ஆகமவிதிப்படி புறத்தூய்மை செய்து கொண்டாராக, அகத்தூய்மையுடன் இறையக வாயில் தாண்டிச் செல்லும் வழக்குடையவர்களாதலால் அப்பகுதியினைத் தாமே தூய்மை செய்தற்குரிய திருவலகுடனும், அபிடேகம் செய்வதற்குரிய குடமும் கைக்கொண்டு செல்லும் நெறியுடையார்கள் என்ற நிலையில் கல்வெட்டுக்களில் பின்வருமாறு சிறப்பிக்கப்பெறுகின்றனர். [1]

பொறுப்பு[தொகு]

இவர்கள் கோயில் நிர்வாகத்தினை முழுதும் நடத்துபவர்களாகவும், நிவந்தங்கள் ஏற்று முறைப்படி செலுத்துபவராகவும் சில சமயங்களில் இயங்கியுள்ளனர்.

தெய்வப்பணியாளர்[தொகு]

கோயிலின் முதன்மை அதிகாரமுடையாராக வழங்கப்பெறும் சண்டேசுவரரை முதல்வராகக் கொண்ட தெய்வப்பணியாளராகத் தம்மைக் குறித்துக்கொள்ளும் வகையில் 'ஆதிசண்டேசுவர தேவகன்மிகள்' என்றும், 'சண்டேசுவரர் உள்ளிட்ட தேவகன்மிகள்' என்றும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

<references>

  1. 1.0 1.1 கரந்தை கோவிந்தராசனார், தமிழகத்தில் கோயில் அமைப்பு, மகாமகம் 1992 சிறப்பு மலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிபாத_மூலத்தர்&oldid=1785062" இலிருந்து மீள்விக்கப்பட்டது