பட்டுக்கோட்டை பிரபாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar; பிறப்பு:30 சூலை 1958) பிரபலமான தமிழ் எழுத்தாளராவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன. இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பிரபாகர் 1958 சூலை 30 இல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இராதாகிருஷ்ணன், சந்திரா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணமாகி சுவர்ணரம்யா, சுவர்ணபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்.[1][2]

படைப்புகள்[தொகு]

(அகரவரிசையில்)

  1. ஆகவே செக்சன் 302 படி; 1988; கல்கியில் வெளிவந்த தொடர்.
  2. உயிர்வரை இனித்தவள்
  3. கிழக்குத் தொடர்ச்சிக் கொலைகள்
  4. சுசிலாவுக்கு ஒரு சல்யூட்
  5. தயாளன் தீர்ப்பு
  6. தொட்டால் தொடரும்; 1986; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
  7. வல்லமை தாராயோ;1988; கல்கியில் வெளிவந்தது
  8. வெட்டு, குத்து, கண்ணே காதலி 1994 ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்
  9. வெள்ளைக்கொடி

மேற்கோள்கள்[தொகு]

  1. மாதேவன், சந்தோஷ். "`பயணம்' பிரச்னை முதல், `காப்பான்' கதைத் திருட்டு வழக்கு வரை... பட்டுக்கோட்டை பிரபாகர் ஷேரிங்ஸ்" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/pattukottai-prabhakar-on-the-current-trends-of-tamil-cinema. 
  2. "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - பட்டுக்கோட்டை பிரபாகர்". www.tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுக்கோட்டை_பிரபாகர்&oldid=3693045" இலிருந்து மீள்விக்கப்பட்டது