பஞ்சாப் தேசிய வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் தேசிய வங்கி
வகைபொதுத்துறை வஙகி
நிறுவுகை19 மே 1894 [1][2]
நிறுவனர்(கள்)லாலா லஜபதி ராய்
தலைமையகம்புதுதில்லி, இந்தியா
முதன்மை நபர்கள்கௌரி சங்கர்
(நிர்வாக இயக்குநர், மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவங்கித்தொழில், நிதிச் சேவைகள்
உற்பத்திகள்கடன் அட்டைகள்,
நுகர்வோர் வங்கி,
வணிக வங்கி,
நிதி மற்றும் காப்பீடு,
முதலீட்டு வங்கி,
அடமான கடன்கள்,
தனிநபர் வங்கி,
தனியார் சமபங்கு,
வள மேலாண்மை
வருமானம் 47,400 கோடிகள் (2013)[3][4]
நிகர வருமானம் INR 49.54 பில்லியன் (மில்லியன்) (2013)[3][4]
மொத்தச் சொத்துகள் ( பில்லியன்) (2013)[3][4]
உரிமையாளர்கள்இந்திய அரசு
பணியாளர்62,392 (March 2013)[3]
இணையத்தளம்www.pnbindia.in

பஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது 1894 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி, இந்தியாவின் 764 நகரங்களில், 6,300-க்கும் அதிகமான கிளைகளையும், 7,900-க்கும் அதிகமான ஏடிஎம் எனப்படும் தாவருவிகளையும் கொண்டுள்ளது. இவ்வங்கி இந்தியா முழுவதும் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.[3]

இந்தியாவில் செயல்பட்டுவரும் வரும் நான்கு பெரிய வங்கிகளில் பஞ்சாப் தேசிய வங்கியும் ஒன்றாகும். பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பரோடா வங்கி ஆகியவை மற்ற மூன்று பெரிய வங்கிகளாகும். மொத்த சொத்துக்களின் அடிப்படையில், (2012-13 நிதியாண்டின் இறுதி நிலவரப்படி) பஞ்சாப் தேசிய வங்கி இந்திய வங்கிகளில், மூன்றாவது பெரிய வங்கியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Origin of PNB". Punjab National Bank. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  2. "History of PNB". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Annual Report 2012-13" (PDF). PNB. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
  4. 4.0 4.1 4.2 "Financials Information for Punjab National Bank". Hoover's. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_தேசிய_வங்கி&oldid=3359972" இலிருந்து மீள்விக்கப்பட்டது