வங்காளதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(பங்களாதேஷ் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
கணப்பிரஜாதந்திரி பாங்க்லாதேஷ்
வங்காளத்தேச மக்கள் குடியரசு
வங்காளத்தேசம் கொடி வங்காளத்தேசம் சின்னம்
நாட்டுப்பண்
அமர் சோனர் பங்களா
என் தங்கமான வங்காளம்

Location of வங்காளத்தேசம்
தலைநகரம்
பெரிய நகரம்
தாக்கா
23°42′N, 90°21′E
ஆட்சி மொழி(கள்) வங்காளம்
மக்கள் வங்காளத்தேசர்
அரசு நாடாளுமன்றக் குடியரசு[1]
 -  குடியரசுத் தலைவர் இயாஜுத்தீன் அஹமத்
 -  தலைமை அமைச்சர் யாரும் இல்லை
 -  முதன்மை உசாவுதுணை ஃபக்ருத்தீன் அகமத்
விடுதலை பாகிஸ்தானிலிருந்து 
 -  கூற்றம் மார்ச் 26 1971 
 -  வெற்றி நாள் திசம்பர் 16 1971 
பரப்பளவு
 -  மொத்தம் 147,570 கிமீ² (94ஆவது)
55,599 சது. மை 
 -  நீர் (%) 7.0
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 150,448,340[2] (7ஆவது)
 -  அடர்த்தி 1045/கிமீ² (11ஆவது)
2,706/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2008 IMF[3] கணிப்பீடு
 -  மொத்தம் $222.4 பில்லியன் (48ஆவது)
 -  நபர்வரி $1,374 (148vவது)
ஜினி சுட்டெண்? (2000) 31.8 (மத்தி
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.547 (மத்தி) (140ஆவது)
நாணயம் வங்காளத்தேசத் தாக்கா (BDT)
நேர வலயம் BDT (ஒ.ச.நே.+6)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (UTC+6)
இணைய குறி .bd
தொலைபேசி +880
1 Adjusted population, p.4, "Population Census 2001, Preliminary Report". Bangladesh Bureau of Statistics (2001-08).

வங்காளத்தேசம் (Bangladesh) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.

இந்நாட்டின் எல்லைகள் 1947ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947 ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்