பக்கிங்ஹாம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பக்கிங்ஹாம் அரண்மனை.

பக்கிங்ஹாம் அரண்மனை இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமாகும். முதலில், பக்கிங்ஹாம் இல்லம், 1703 ல் பக்கிங்ஹாம் டியூக் ஜோன் ஷெவ்வீல்ட்டுக்காகக் கட்டப்பட்டது. பின்னர் 1762 ல் அவருடைய வாரிசான சேர் சார்ள்ஸ் ஷெவ்வீல்டிடமிருந்து ஐக்கிய இராச்சியத்தின் ஜோர்ஜ் III அரசரால் வாங்கப்பட்டது. 1837ல், அரச குடும்பத்தின் இருப்பிடமானது.

[1]

ஒப்பீட்டளவில் அண்மைக்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட அரசகுடும்பத்தின் இந்தச் சொத்து, பின்னர் பெருமளவில் திருத்திக் கட்டப்பட்டது. விக்டோரியா அரசியாரின் சிலையொன்று முதன்மை வாயிற்கதவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ளது. அரண்மனையை நோக்கிச் செல்லும் பாதை மால் (Mall) என அழைக்கப்படுகிறது. அரண்மனைக்குப் பின்புறம் பக்கிங்ஹாம் அரண்மனைப் பூங்காவும், அரச குதிரை லாயங்களும் உள்ளன.

சுற்றுலாப்பயணிகளைக் கவரும், பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த நிகழ்ச்சி பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே நடைபெறுகிறது. 1990 ல், அரண்மனையின் ஒரு பகுதியைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டது, மரபுக்கு மாறான புரட்சிகர மாற்றமாகும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்