பகத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பகத்சிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பகத் சிங்
Bhagat Singh
ਭਗਤ ਸਿੰਘ
بھگت سنگھ
Bhagat Singh 1922.jpg
சிறையில் பகத்சிங்
பிறப்பு: செப்டம்பர் 27, 1907
பிறந்த இடம்: லயால்பூர், பஞ்சாப், இந்தியா
இறப்பு: மார்ச் 23, 1931
இறந்த இடம்: லாகூர், பஞ்சாப், இந்தியா
இயக்கம்: இந்திய விடுதலைப் போராட்டம்
முக்கிய அமைப்புகள்: நாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும் இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பு

பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 27, 1907[1] –மார்ச் 23, 1931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு[4].

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்[5]. பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது[6].

பொருளடக்கம்

வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்[7].

தனட்டு 13வது அகவையில் பகத்சிங் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

பகத்சிங்கின் தூக்குதண்டனை [தொகு]

பகத்சிங்கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.[8]

மேற்கோள்கள் [தொகு]

  1. "He left a rich legacy for the youth". The Tribune (2006-03-19). பார்த்த நாள் 2008-01-01.
  2. "Indian History: Indian Freedom Struggle (1857-1947)". Government of India. NIC.
  3. Bhagat Singh :Indian revolutionary and freedom fighter. Diamond Books. 2005. pp. 124. ISBN 9788128808272. http://books.google.co.in/books?id=PEwJQ6_eTEUC&lpg=PP1&pg=PA124#v=onepage&q&f=false. 
  4. "Bhagat Singh an early Marxist, says Panikkar". The Hindu (2007-10-14). பார்த்த நாள் 2008-01-01.
  5. Rao, Niraja (April 1997). "Bhagat Singh and the Revolutionary Movement". Revolutionary Democracy 3 (1). http://www.revolutionarydemocracy.org/rdv3n1/bsingh.htm. 
  6. Reeta Sharma (2001-03-21). "What if Bhagat Singh had lived". The Tribune. பார்த்த நாள் 2008-01-01.
  7. O. P. Ralhan, ed (2002). Encyclopaedia of Political Parties. New Delhi, India: Anmol Publications. pp. Vol. 26, p349. ISBN 81-7488-313-4. 
  8. http://www.frontline.in/fl1808/18080910.htm

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பகத்_சிங்&oldid=1401192" இருந்து மீள்விக்கப்பட்டது