நீர்நில வாழ்வன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலநீர் வாழிகள் அல்லது ஈரூடக வாழிகள் (இருவாழ்விகள் அல்லது நீர்நிலவாழ்வன) எனப்படுபவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். தவளை, தேரை, குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும்.
இவை குளிர் இரத்த வகையைச் சேர்ந்த முதுகெலும்புடைய விலங்குகள். இவற்றின் உடல் தலை, உடம்பு என்னும் இரு பகுதிகளைக் கொண்டது. வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் இதயம் மூன்று அறைகளைக் (இரு ஆரிக்கிள்கள், ஒரு வெண்டிரிக்கிள்) கொண்டது.
உசாத்துணை [தொகு]
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாடு அரசு, 2011