நீராதாரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்கையான ஈரநிலம்

நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.

[1] நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே புதுப்புனலாக இருக்கும் அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்திருக்கும்.[1] மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.[2]

சுத்தநீர் மறுபுதுப்பிக்கும் மூல ஆதாரமாகும் இருந்தபோதிலும், உலகின் சுத்த புதிய நீர்வழங்கல் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. நீரின் தேவை அதன் வழங்கலைக் காட்டிலும் உலகின் பல பகுதிகளில் விஞ்சியுள்ளது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உயிரின [[வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்|வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்]]பேணிப் பாதுகாக்கும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டில் சமீப காலமாகத்தான் தோன்றி வருகின்றது அதுவும் கிட்டத்தட்ட பாதியளவு ஈரநிலங்கள் மதிப்புமிகும் சுற்றுப்புறச் சூழல் சேவைகள் உடன் இழப்புக்குள்ளாகியதால் அவ்விழிப்புணர்வு பெருகியுள்ளது. வளமார் சுத்தநீர் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புகள் யாவும் நடப்பு நிலையில் குன்றி வருகின்றன அப்படி குறைந்து வருவது கடல் மற்றும் நில- உயரின வாழ்க்கைச் சூழல்அமைப்புகளைவிட வேகமாக இருப்பது கண்கூடு.[3] நீர்ப்பயனாளிகளுக்கு நீரின் ஆதாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டிய உருவரைச்சட்டமே (அப்படி ஒரு உருவரைச்சட்டம் இருக்குமானல்) நீர் உரிமைகள்என்று வழங்கப்படும்.

புவியில் நீருள்ள இருப்பிடங்கள் பற்றிய வரைபட விநியோகம்.

சுத்த நீரின் மூல ஆதாரங்கள்[தொகு]

மேற்பரப்பு நீர்[தொகு]

சுன்கரா ஏரி மற்றும் பரிநகோடா எரிமலை வட சிலி

மேற்பரப்பு நீர் என்பது நதி, ஏரி அல்லது சுத்தநீர் உள்ள ஈரநிலம் இவைகளில் உள்ள நீராகும். மேற்பரப்பு நீர் இயற்கையாக ஆவி குளிர்ந்து மழையாகி நீர்நிலைகளில் நிரம்புகின்றது. அதேபோல் கடலில் கலந்து வீணாகுவதும், ஆவியாகப் போய் விடுவதும், துணைமேற்பரப்பில் கசிந்தொழுகலாலும் இயற்கையாக இழந்து விடுகின்றது.

ஆவி குளிர்ந்து மழை ஆவதுதான் மேற்பரப்பு நீர் அமைப்பில் உள்ள நீர் வடிநிலத்தில் ஒரே இயற்கை உள்வைப்பாக இருந்த போதிலும், மொத்த நீர்அளவு ஒரு குறிப்பிட்ட நேரம் பல காரணங்களைச் சார்ந்துள்ளன. இந்தக் காரணங்களில் உள்ளடங்கும் ஏரிகள், ஈரநிலங்கள், மற்றும் செயற்கை நீர்த் தேக்கங்கள்ஆகியவைகளின் தேக்கத்திறன் ஒட்டியும், நீர்த்தேக்க நிலைகளின் மண்வளம்அதன் ஊடுருவ இடம் தரும் இயல்பு ஒட்டியும், நீரானது வடிநிலத்திலிருந்து மறைந்தோடிவிடுவதுஒட்டியும், பதங்கமாகும் நேரம் மற்றும் உள்ளூர் ஆவியாகும் வீதங்கள் ஒட்டியும் அமைந்திருக்கும். இத்தகு அனைத்துக் காரணங்கள் நீர்இழப்புக்குரிய விகிதாசாரங்களைப் பாதிக்கும்.

மேலும் இக்காரணங்கள் மனித நடவடிக்கைகள் பெருமளவு அல்லது சிலநேரங்களில் சீரழிக்கும் விளைவினை உண்டாக்கும். மனிதர்கள் நீர்த்தேக்கங்கள் கட்டிக்கொண்டே போவதால் தேக்கும் திறன் அதிகரிக்கின்றது. அது ஈரநிலங்களில் வடிகால்கள் வழியே குறைந்து போகின்றது. மனிதர்கள் அடிக்கடி வழிந்தோடும் நிர்த்தேக்க எண்ணிக்கைகள் மற்றும் அவைகளின் இயக்க வேகம் அதிகரிக்கச் செய்து நீர்சேரும் பிரதேசங்களின் ஊற்றொழுக்கு வழிமுறைப் படுத்தி வருகின்றனர்.

நீரின் ஒரு குறிப்பிட்ட காலம் மொத்தமாகக் கிடைக்கும் அளவு ஒரு முக்கிய மான கருத்தாக உள்ளது, சில நீர்ப் பயனாளிகள் நீர்த்தேவை விட்டுவிட்டு பெற வேண்டுவர். எடுத்துக்காட்டாக, பல பண்ணைகள்இளவேனில் காலம் அதிக அளவு நீர் வேண்டும் நிலையில் இருக்கும் ஆனால் குளிர் காலத்தில் நீர் கிடைப்பது அரிதாகி விடும். அப்படிப் பட்ட பண்ணைகளுக்கு நீர்வழங்கல் வேண்டி, மேற்பரப்பு நீர்அமைப்பு ஒன்று உருவாக்குதல் அவசியமாகின்றது. அது ஏராளமாக தேக்கும்திறன் கொண்டதாகவும் நீரை ஆண்டு முழுதும் சேகரிக்கத் தகுந்ததாகவும், குறுகிய காலத்தில் நீரை வெளிவரச்செய்யத் தக்கதாகவும் அந்த அமைப்பு விளங்கிட வேண்டும். வேறு சில பயனாளிகள் நீர் தொடர்ந்து தேவைப் பட ஒரு சக்தி சாதனம்நீரைக் குளிர வைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். அப்படி ஒரு சக்தி சாதனம் நீருக்கென உண்டாக்க மேற்பரப்பு நீர் அமைப்பு தேக்கும் திறன் போதுமானதாக இருக்கச் செய்ய வேண்டும். எனவே, அப்படி இருந்தால்தான் அது சராசரி ஊற்றொழுக்கு தேவைக்குக் குறைந்த போது ஈடுகட்டும் என்று அவர்கள் அதற்காவன செய்வர்.

இருந்தபோதிலும், ஒரு நீர்வடிநிலத்தின் நீண்ட கால சராசரி ஆவி குளிர்ந்திடும் வீதம் அந்த நீர்வடிநிலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் மேற்பரப்பு நீரின் சராசரி நுகர்வினை மேலாகக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும்.

இயற்கையான மேற்பரப்பு நீர் அதிகமாகப் பெருகச் செய்ய வேறொரு நீர்வடிநிலத்தில் இருந்து அதை இறக்குமதி செய்யலாம். அதைக் கால்வாய் வழியாகவோ, குழாய் வரிசை வழியாகவோக் கொண்டு வரலாம். அதேபோல் செயற்கையான முறையில் பிற இங்கு அட்டவணைப் படுத்திய மூல ஆதாரங்களில் இருந்து கொண்டு வரலாம் ஆனால் நடை முறையில் அளவுகள் புறக்கணிக்கக் கூடியதாகவே இருக்கும். ஏன்எனில் மனிதர்களே மேற்பரப்பு நீர் 'இழந்தது' என்றும்(அதாவது அது பயன் படுத்தத் தக்கதாக இல்லை) அதற்குக் காரணம் மாசுபடுத்தலேஎன்றும் கூறலாம்.

[4] உலகிலேயே பிரேசில் தான் அதிக அளவில் சுத்தநீர் வழங்கலில் முதலிடம் பிற நாடுகளைக் கட்டிலும் பெறுகின்றது. ருஷியா, கனடா நாடுகள் அடுத்து வருகின்றன.

ஆற்றொழுக்கின் கீழ்[தொகு]

ஆறு செல்லும் திசைஎங்கும், நீரின் மொத்தக் கொள்ளளவு நீரோட்டத்துடன் கொண்டு செல்லப் படும் அதில் கண்புலனாகும் தங்குதடையற்ற நீரின் ஓட்டம் அடிப்பரப்பில் ஓடும் போது பாறைகள் ஊடே உள்ளிருக்கும் சரளைக்கற்கள் எல்லாம் தாண்டி செல்லும் போது அது திடமான பங்களிப்பாக தருவது கலந்திருக்கும். அதன் வெள்ளப்பரப்பு ஹைபோரெய்க் மண்டலம் என அழைக்கப் படுகின்றது

பல ஆறுகளில் பெரும் பள்ளத்தாக்குகளில் இந்த கண்புலனாகாத ஓட்டத்தின் உட்புறம் கண்புலனாகும் ஓட்டத்தை விஞ்சியிருக்கும். இந்த ஹைபோரெய்க் மண்டலம் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்-தடி நீர் இடையில் அடிக்கடி ஓர் இயக்கும் உள்முகம் நீரினை உள்ளடியாகவே நீரடுக்குப் பாறையிலிருந்து பெற்றுக் கொண்டு அதை உள்ளீடற்றதாக்கச் செய்யும். இது பெரும்பாலும் நிலத்தடிப் பாறைச்சிதைவுப்பகுதியில் முக்கியமாகக் இருக்கும். அங்கு ஆழமான நீண்டதுளைகள் மற்றும் நிலத்தடி ஆறுகள் பொதுவாக காணப்படும்.

நிலத்தடி நீர்.[தொகு]

அடிப்பரப்பு நீர் பயண நேரம்.
ஷிபோட், ஒரு பொது நீர் மூல ஆதாரம் யுக்ரேனியன் கிராமங்கள்.

நிலத்தடி நீர்அடிப்பரப்புநீர் எனவும் அழைக்கப்படும். சுத்தநீர் மண்ணில் நுண்துளை மற்றும் பாறைகளில் அமைந்திருக்கும். அது ஆழமான நீண்ட துவாரங்கள்ஊடே அடிநில நீர்மட்டத்தின் கீழ்இருந்து கிளம்பிவரும். சிலசமயம் இதுஒரு தனிவேறுபாட்டை இருவகை யான நீர்ப்பரப்பிற்கும் இடையே வெளிப்படுத்தும் ஒன்று அடிப்பரப்பு நீர் அது மேற்பரப்புடன் தொடர்பு கொண்டிருக்கும். மற்றொன்று ஆழமான உள்ளடி நீர்ப்பரப்பு அதை ஆழ்நீளத்துளை என்பர்.(சில சமயங்களில் அது புதைபடிவ நீர் என்றும் கூறுவதுண்டு)

அடிப்பரப்பு நீர் மேற்பரப்பு நீர்உடன் சேர்த்து உள்வைப்பு, வெளிவைப்பு, நீர்ச்சேகரிப்பு சொற்றொடர்களில் சேர்த்துக் கருதப்படும். ஆனாலும் மாறுநிலை வேற்றுமையானது அதன் மெதுவான நீர்வரத்து கொண்டு செல்லப்படும் வீதம், அடிப்பரப்பில் உள்ள நீரின்சேகரிப்பு பொறுத்திருக்கும். பொதுவாக உள்வைப்பைக் காட்டிலும் மேற்பரப்பு நீர்அதிகமாகவே இருக்கும். இந்த வேற்றுமை மனிதர்களுக்கு அடிப்பரப்பின் நீரை நெடுங்காலத்திற்கு அதன் விளைவுகள் பற்றி எண்ணாமல் பயன்படுத்த ஏதுவாகும். இருந்த போதிலும் நெடுங்காலத்திற்கு கசிந்தொழுகும் நீர் அதன் சராசரி வீதம் மேற் பரப்பின் நீர் விட அதிகம் கட்டுப்பட்டதாக இருக்கும். அது அந்த சராசரி நுகர்வுக்கு உகந்த தாக இருக்கும்.

அடிப்பரப்பிற்கு உரிய நீர் மேற்பரப்பு நீர்கசிந்தொழுகல் மூலம் இயல்பான உள்வைப்பாக அமைந்திருக்கும். இயல்பான வெளிவைப்புகள் என்பதுதான் அடிப்பரப்பிலிருந்து வரும் ஊற்றுகள் ஆகும். ஆழநீண்டதுளைகள் கடல்களுக்கு ஏதுவாக அமைந்திருக்கும்.

மேற்பரப்பு நீர் ஆதாரம் திடமான ஆவி யாகுதலுக்கு உட்பட்டால் ஒரு நீர் மூலஆதாரம் ஆகும். அது உவர்ப்புத் தன்மைபடைத்திருக்கும். இது கண்மறைவாக உள்ள புதைந்திருக்கும் நீர்நிலைகளுக்குப்பொருந்தும். செயற்கையான முறையில்பாசனம் பெறும்பண்ணைகளிலும் இது காணலாம். கடற்கரைப் பகுதிகளில் மனிதர்கள் அடிப்பரப்பில் இருந்து பயன் படுத்தும் போது கசிந்தொழுகலின் போக்கை மாறு படுத்திவிட ஏதுவாகும். ஆதனால் மண் ணானது உப்புத்தன்மை பெற்றிருக்கும். மனிதர்களும் தங்களது பயன்பாட்டால் அடிப்பரப்பின் நீரை 'இழக்கச்' செய்யலாம். (அதாவது அதைப் பயன்படுத்த இயலாத வண்ணம்) ஏன்எனில் அது அந்த அளவிற்கு மாசு படிந்து விடும். அவர்கள் உள்வைப்பை அதிகரிக்கச் செய்யலாம் அதைஅடிப்பரப்பிற்கு நீர்த்தேக்கங்கள் எழுப்பி கொண்டுவரலாம் அல்லது குளங்களிலும் நிலைநிறுத்தச் செய்யலாம்.

உப்புநீக்குதல்[தொகு]

உப்புநீர் சுத்திகரிப்பு ஓர் இயற்கை வழிமுறையாகும். அதனால் உப்புநீர் (பொதுவாக கடல்நீர்) சுத்தநீராக மாற்றப்படும். பொதுவாக உப்புநீர் சுத்திகரிப்பு வழிமுறைகள் என்பனவடிகட்டுதல் மற்றும் மறுதலை ஊடுகலப்பு(துளைகள் உள்ள இடைத்தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை) நடப்புரீதியில் கடல்நீர் சுத்திகரிப்பு மாற்று நீர்ஆதாரங்களைக் காட்டிலும் அதிகச் செலவு வைக்கும் பணியாகும்.மொத்த மனிதப் பயன்பாட்டில் ஒரு சிறிதளவு பின்னம்தான் சுத்திகரிப்புப் பணியால் திருப்தி பெறுவர். அது பொருளாதார ரீதியில் அதிகமதிப்புடைய பயன்பாடுகளுக்கு (அதாவது குடும்ப அமைப்பு மற்றும் தொழிற்சாலை உபயோகங்கள்) மட்டுமே உகந்ததாகும். அதுவும் வறண்ட பகுதிகளுக்கேசாலப் பொருந்தும். இந்த சுத்திகரிப்புப்பணி அதிகப் பரவலாக பாரசீக வளைகுடா நாடுகளில் நடைபெறுகின்றது.

உறைபனி நீர்[தொகு]

நியூபௌந்துலாந்து கண்ட பனிப்பாறை போல

பல்வேறுபட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டுபனிப்பாறைகளைஓர் நீர்ஆதரா மாக்க முனைவதுண்டு, ஆயினும் இன்றளவும் அது புதுமையான நோக்கங்கள் கொண்ட தாகவே இருந்து வந்துள்ளது. பனிப்படல நீரொழுக்கு ஒரு மேற்பரப்புநீர் ஆதாரம் என்றும் கருதப் படுகின்றது.

இமாலயங்கள் அடிக்கடி 'உலகின் கூரை' என்றழைக்கப் படுகின்றன. அது பூமியில் மிகப் பரந்த மற்றும் கடல்மட்ட உயரமானப் பிரதேசங்கள் கொண்டுள்ளன. மேலும் அதிகம் பனிப்பாறைகளும் துருவப்பிரதேசங்கள் போல உள்ளன. ஆசியாவின் பத்து பெரிய நதிகள் இங்கு உற்பத்தி யாகின்றன. ஒருகோடி மக்களுக்கும் மேற்பட்டோர் இதை நம்பி உள்ளனர். தட்பவெப்பநிலை மேலும் சிக்கலாக்கும் வண்ணம், உலக சராசரிக்கும் மேல் செல்லும் வண்ணம் நிலைமை உள்ளது. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளில் வெப்பநிலை 0.6 டிகிரிகளுக்கும் மேலாக உள்ளது, அதேசமயம் உலகவெப்பமயமாகுதல் புடி 0.7 என்றே கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.[5]

சுத்த நீரின் பயன்கள்[தொகு]

சுத்தநீரின் பயன்கள் நுகர்வு மற்றும் நுகர்வற்றது என இருவகைப்படுத்தப் படலாம் (நுகர்வற்றது சிலசமயங்களில் 'புதுப்பித்தல்' என்றழைக்கப் படுகின்றது. நீரின் பயன் வேறுபயன்பாடுகளுக்குக் கிடைக்காத வரை நுகர்ச்சியானதாகவே இருக்கும். இழப்புகள் என்பது அடிநீர்ப்பரப்பின் கசிவு மற்றும் ஆவியாகுதல் ஆகும் இவைகள் நுகர்ச்சியாகவும் கருதப்படும். ஏன்எனில் நீரானது விளைபொரு ளாகவும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றது.(அதாவது பண்ணை விளைபொருள் போல) நீர் சுத்திகரித்தபிறகு மேற்பரப்புநீர் போல மாற்றிவிட இயலும். அதாவது கழிவுநீர் பொதுவாக நுகர்ச்சியற்றதென்று கூடுதல் பயன்பாட்டிற்கு மாற்றும்வரை கருதப்படும்.

விவசாய எந்திரங்கள்[தொகு]

ஒரு பண்ணை நிலம் ஆணடரியோ

உலகெகங்கும் நீரின் பயன்பாடு 69% பாசனத்திற்கே செலவிடப்படுகின்றது என கணக்கிடப்பட்டுள்ளது. 15-35% பாசனத்திற்கு மீட்டுப்பெறத் தாங்குதல் இன்றி உள்ளது.[6]

உலகில் சிலபகுதிகளில் பாசனம் எந்த பயிரினையும் விளைவிக்க அவசியமாகின்றது. ஆனால் மற்ற பகுதிகளில் அதிக லாபம் ஈட்டும் பயிர்களை வளர்க்கவும், பயிர்விளைச்சலை அமோகமாக்கவும் முடிகின்றது பாசன முறைகளில் பல்வகைகள் பயிர்விளைச்சல், நீரின் நுகர்ச்சி, கருவிகளுக்கு முதலீட்டுச்செலவு, மற்றும் கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. பாசன திட்டங்கள் அதாவது உழுசால்மற்றும் தலைக்குமேல்நீர்தெளித்தல் போன்ற செலவுகுறைவாகப் பிடிக்கும் ஆயினும் திறனிலும் குறைவாகவே இருக்கும். ஏன்எனில் நீரானது பெருமளவு ஆவியாகுதல், ஓடிவிடுதல், அல்லது மண்டல வேர்ப்பகுதியில் வடிந்துவிடுதல் போன்ற காரணங்களால் இழப்புக்கு உள்ளாகின்றது கண்கூடு. மற்ற பாசன முறைகளான, சொட்டுநீர்ப் பாசனம்அல்லது துளித்துளிப் பாசனம்,அலைநீர்ப் பாசனம், தெளிப்புப் பாசனம்-தெளிப்பான்களை தரையிலிருந்து இயக்குதல், கடைபிடிக்கலாம். ஆனால் இவைகள் செலவுபிடிக்கும் திட்டங்கள் ஆகும் அதுவும் ஓடுதல்,வடிதல்,ஆவியாதல் எல்லாவற்றாலும் ஏற்படும் இழப்பைக் குறைக்கக் கூடும். எந்த வழிமுறையானாலும் அது சரிவர நிர்வகிக்கப் படவில்லை எனில் பலன் வீணாகிவிடும். எல்லா வழிமுறைகளும் அவைகள் தகுந்த நிலவரங்களில் பயன்படுத்தப் படும் வரையில் ஆற்றல் மிக்கவைதான உரிய பாசன நேரம், மற்றும் மேலாண்மை இரண்டையும் ஒட்டியே பாசன வழிமுறை அமைந்திருக்கும். ஒரு பிரச்னை என அடிக்கடி கருதப்படுவது உப்புநீர் சுத்திகரிப்பு செய்வதால் அடிப்பரப்பு நீர் பாதிக்கப் படுவதாகும்.

நீரியல்கலாசாரம்ஒரு வளர்ந்துவரும் விவசாய நீர்ப்பயன்பாட்டு முறையாகும். சுத்தநீர் கொண்ட வணிகநோக்கில் மீன்பிடித்தல் தொழிலும் விவசாய நோக்கில் நீர்பயன்படுத்துவது போன்று இணையாகக் கருதப்படலாம் ஆயினும் குறைவான முன்னுரிமை பாசனத்தை விட அது பெற்றிருக்கலாம். (ஆரல் கடல் மற்றும் பிரமிடு ஏரி காண்க)

உலகில் மக்கள்தொகை பெருகப் பெருக, உணவுத் தேவை அதிகரிக்க, வேண்டியுள்ளதால் நிர்ணயிக்கப் பட்ட நீர்வழங்கல் அடிப்படையில் அதிகம் உணவு உற்பத்தி செய்வதும் அதற்கு குறைவாக நீர் பயன்படுத்த முனைவதும், பாசன முறைகளில்[7] அபிவிருத்தி செய்வதும்,தொழில்நுட்பங்கள் பயன் படுத்துவதும், விவசாய நீர் மேலாண்மை மற்றும் பயிர் வகைகள் மற்றும்நீர்உபயோகம்பற்றிச் சரிபார்த்து எச்சரிப்பதும் யாவும் மேற்கொள்ளப் படவேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது.

தொழிற் புரட்சி[தொகு]

போலந்து ஒரு சக்தி சாதனம்

]] உலகெங்கிலும் நீரின் பயன்பாடு 15% தொழிற்சாலைகளுக்கென்று அளவிடப்பட்டுள்ளது, முக்கிய தொழில்துறை பயனாளிகள் சக்தி சாதனங்கள், குளிரூட்ட, எரிஆற்றல் மூல மாகப் பயன்படுத்தவே செய்கின்றனர். (அதாவது நீர்மின்விசைத் திட்டங்கள்) உலோகமற்றும் எண்ணெய் சுத்தி கரிப்புகள் போன்ற நீரினை வேதியல் செயல்முறைகளுக்கெனவும், பொருளுற்பத்தித் திட்டங்களுக்காகவும், ஒரு தீர்வாகப் பயன் படுத்துகின்றனர்.

தொழில்துறைக்கென்று ஒரு பங்கு நீரின் பயன்பாடு நுகர்ச்சியாகத்தான் உள்ளது ஆனால் மொத்தமாக அது விவசாயப் பயன்பாட்டைவிடக் குறைந்துள்ளது.

நீர் எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

நீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும்,மாசுபடுத்தாததாயும், புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது. சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது.


த்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர்விசை மின்நிலையம் ஆக உள்ளது. அழுத்தத்திற்குள்ளானநீர், நீர்வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,மேலும் பாதுகாப்பானதாகவும்,சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது. அதிகவெப்பம் குளிர்ச்சியடையவும் வைக்கின்றது அல்லது ரம்பப் பிளேடுகளை அதிகச்சூடு ஏறாத வண்ணம் தடுக்கவும் செய்கின்றது.

நீரானது நீராவிச்சுழலி, வெப்பப் பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிக்கப் படாமல் வெளியேற்றும் நீர் தொழிற்சாலையில் மாசுபடுத்தும். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு தொழிற்சாலை களிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியல் மாசு), வெளியேற்றப் பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன.

வீடுகள்[தொகு]

குடிநீர்

உலகெங்கிலும் 15% நீரின் பயன்பாடு குடும்ப அமைப்புகளுக்காகவே ஆகின்றது. இதில் குடிநீர் குளியல், சமையல், துப்புரவு, மற்றும் தோட்டப் பராமரிப்பு யாவும் அடங்குகின்றன. அடிப்படை குடும்ப அமைப்பிற்கு என நீர்த்தேவைகள் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 50 லிட்டர்கள் என்று பீட்டர் கிளேக்கு என்பார் கணக்கிட்டுள்ளார். அதில் தோட்டப் பராமரிப்பு அடங்காது.

குடிநீர் என்பது போதுமான உயர்தரம் கொண்ட தாகவும், அது நுகரத் தக்க தாகவும், அல்லது பயன்படுத்தினால் அபாயம் ஏற்படாத தெனவும், நீணட காலத் தீங்கிழைக்கா தெனவும் இருத்தல் வேண்டும். அத்தகைய நீர் பொதுப்படையாக பருகத்தகும் நீர் என்று வழங்கப்பெறும் முன்னேறிய நாடுகளில் குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மேலும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கும் சேர்த்து பருகும் தரம் மிக்கதாக இருக்கவேண்டும்.அதில் ஒரு சிறிதளவு உண்மையில் நுகரப்படுகின்றது அல்லது உணவு தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.

பொழுதுபோக்கு[தொகு]

கடற்கரை ஊற்றுக்களின் நீரோட்டங்கள்

பொழுது போக்குகேளிக்கைகளுக்காக நீரின் பயன்பாடு சிறிதெனினும் அது மொத்தத்தில் வளர்ந்துவரும் சதவீத மாகவே உள்ளது. அத்தகு பயன்பாடு பெரும்பாலும் நீர்த் தேக்கங்களில் நடைபெற்றக் கொண்டு வருகின்றது. நீர்த்தேக்கம் பூர்த்தியானதும் மிகைநீர் இந் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றது. அது கேளிக்கைப் பயன்பாடு என வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீர்வெளியேற்றும் பொழுது ஒருசில நீர்த்தேக்கங்களில் வெண் நீர்- கரைஊற்றுநீர் படகுச் சவாரிக்கெனப் பயன்படுத்தப் படுகின்றது.அது கேளிக்கைப் பயன்பாட்டின் கீழ்வரும். பிற எடுத்துக்காட்டுகள் பயன்பாட்டாளர்களில் தூண்டில் மீன்பிடிப்பாளர்கள், பனிநடைக்கட்டைப் பயனாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நீச்சல்காரர்கள் முக்கியமாக அடங்குவர்.

பொழுதுபோக்குப் பயன்பாடு வழக்கமாக நுகர்ச்சியற்றதாகும். கோல்ப் ஆடுகளங்களில் அதிக அளவில் நீர்உபயோகம் படுத்தப் படுவதாகவும் அதுவும் வறண்ட பகுதிகளில் என்றும் குறிவைத்துக் கூறுவதுண்டு. பொழுதுபோக்குப் பாசனம் (தனியார் தோட்டங்கள் உள்பட) குறிப்பிடத்தக்க விளைவை நீர்வள ஆதாரங்கள் பேரில் ஏற்படுத்துகின்றதா என்பது தெளிவில்லாமல் தான் இருக்கின்றது. ஏன்எனில் போதிய நம்பகமான தரவுகள் கிடைக்கப்பெறாததும் காரணம் ஆகும். சில அரசாங்கங்கள் கலிபோர்னியா அரசாங்கம் உள்பட கோல்ப் ஆடுகளத்தை விவசாயநோக்கம் கொண்டவை என்று அங்கீகரித்துள்ளன. சுற்றப்புறச் சூழல் ஆர்வலர்களின் குற்றச் சாட்டுகளுக்காக வீணாகும் தண்ணீர் பயன் படுத்துவதற்காக அங்ஙனம் செய்துள்ளனர். எப்படி எனினும், கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்கள் காண்கையில் அதன்விளைவு இதற்கெல்லாம் மீண்டும் அளிக்கப்பட்டாலும் பூஜ்யம் அளவிற்கு நெருங்கியுள்ளது.

கூடுதலாக பொழுதுபோக்குப் பயன்பாடு பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக நீர்த்தேக்கத்தில் மிகுந்துள்ள நீர் கோடையின் பிற்பகுதியில் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தப் பட்டால் அது குடியானவர்களுக்கு இளவேனிற்காலத்தில் நடவுக்காலத்தில் கிடைக்காமல் போய்விடும். நீர் வெண்ணீர் தெப்பச் சவாரிக்கு வெளி யேற்றப்படுவது நீர்மின்விசை பற்றாக்குறை காலத்தில் தேவைக்கேற்ப கிடைக்காமல் போய்விட வாய்ப்புண்டு.

சுற்றுச்சூழல் ரீதியான[தொகு]

சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பாடு சிறி தளவெனினும் அது மொத்தத்தில் சதவீதம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது. சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பர்டுகளில் அடங்குவது: செயற்கை ஈரநிலங்கள், செயற்கை ஏரிகள், வனவிலங்குகளுக்குகந்த சூழ்நிலை உருவாக்குதல், அணைக்கட்டுகளில்மீன் பிடிக்க ஏணிப்படிகள் அமைத்தல், நீர்த்தேக்கங்களில் நீர்வெளியேற்றும் போது அத்தருணமாக மீன்குஞ்சு உற்பத்தி செய்வித்தல் ஆகியவாகும்.

பொழுது போக்குப் பயன்பாடு போல சுற்றுப்புறச் சூழல் பயன்பாடும் நுகர்வற்றதாகக் கருதப் படுகின்றது. பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக, நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றும் பொழுது அதை மீன் குஞ்சுகள் உற்பத்திக்குப் பயன்படுத்தினால் அது அற்றின் மேல்பகுதியில் உள்ள நிலங்களுக்குதவாமல் போய்விடும்.

நீர் இறுக்கம்[தொகு]

1970–2000 காலகட்டத்தில் வளரும் நாடுகளின் மக்கள் பெற்ற குடிநீர் பங்கின் சிறந்த கணிப்பு.

நீர்இறுக்கம் என்ற கோட்பாடு என்பது தொடர்பு படுத்திப் பார்த்தால் சுலபமாகத் தோன்றும். உலக வணிகத் தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக் குழுவின் படி நிலைமைகளுக்கு ஏற்ற வாறு பயன்பாடு அமையும் நீர் எல்லா உபயோகங்களுக்கென போதுமானதாக இல்லாமல் போனாலும் அது விவசாயம். தொழில்சாலை, மற்றும் வீட்டு உபயோகம் என்று இருந்தாலும் நீர்இறுக்கம் ஆகிவிடும்.

தனிநபர்வருவாய்போல வரையரை செய்வது கடினம் எனினும் அது நீரின் பயன்பாடு மற்றும் திறன்பற்றிய யூகக் கருத்துக்கள் கொள்ளவைக்கின்றது என்றாலும் முன்மொழியப்பட்ட கருத்து: வருடாந்திர தனிநபர் புதுப்பித்துக்கொள்ளும் சுத்தநீர் கிடைக்கும் அளவு 1700 கனமீட்டர் குறைவாகும் பொழுது நாடுகள் நீர்இறுக்கம் கிரமமாகவோ அல்லது கால வேளையாகவோ பெறும் அனுபவம் அடையக் கூடும். 1,000 கனமீட்டர் கீழ் நீர்கிடைப்பது சொற்பம்

ஆனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கக் கூடும் அதனால் மனிதர்களின் ஆரோக்கியம் உடல்நலம் பாதிக்கும் நிலை ஏற்படும்.

மக்கள்தொகை வளர்ச்சி[தொகு]

2000-ல் உலக ஜனத்தொகை 6.2 பில்லியன்கள் ஆகும். ஐ.நா மதிப்பீட்டின்படி 2050ல் கூடுதலாக 3.5 பில்லியன்கள் ஆகும்போது வளர்முக நாடுகள் நீர் இறுக்கம் என்ற பிடியில் சிக்கித் தவிக்கக்கூடும்.[8] [9] எனவே நீரின் தேவை அதிகரிக்கும்நீர்ப்பாதுகாப்பு முறைகள்மற்றும் மறுசுழற்சி முறைகள்எந்த அளவிற்கு நடைபெறகின்றதோ அதை ஒட்டி வீதாசாரமாக முக்கிய நீர்வள ஆதாரங்கள் பொறுத்து அமையும்.[9]

அதிகரிக்கும் செழுமை[தொகு]

வறுமை துயர்தணிப்பு வீதம் இருபெரும் ஜனத்தொகை அரக்கர்களான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது செழுமைஅதிகரிப்பு என்பதின் பொருள் அதிக நீர்நுகர்வாகும். சுத்த புதிய நீர் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் மற்றும் வாரத்திற்கு 7 நாட்கள் என்றளவில் ஆதாரத்துப்புரவுச்சேவைகள் தோட்டம் மற்றும் கார் போன்றவற்றிற்காக மட்டுமின்றி தனியார் நீச்சல் குளங்கள் ஜாக்குசிசிஸ் பராமரிக்க நீர் தேவைப்படுகின்றது.

வணிக நடவடிக்கைகள் விரிவாக்கம்[தொகு]

வணிக நடவடிக்கை என்பது தொழில் மயமாகுதல் இருந்து சேவைத்துறைகள் வரையில் அதாவது சுற்றுலா மற்றும் பொழுது போக்கு துறைகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து வேகமாக விரிவாகிக் கொண்டே வருகின்றது. அதன்விளைவாக நீர்த்தேவை அதிகரிக்கின்றது. வழங்கல்மற்றும் துப்புரவு நிமித்தம் வேண்டப்படுவதால் அது நீர்வள ஆதாரங்கள் மேல் அழுத்தங்கள் மற்றும் இயற்கை உயரின வாழ்க்கைச் சூழல் மேல் தாக்கங்கள் உருவாக்குகின்றன.

வேகமாக நகரமயம் ஆகுதல்[தொகு]

நகரமயமாகும் போக்குமுடுக்கி விடப்பட்டுள்ளது. சிறிய தனியார் கிணறுகள் மற்றும் மலக்கழிவுத்தொட்டிகள் குறைந்த அடர்த்திகொண்ட சமுதாயங்களில் நன்கு செயல்பட்டதுபோல அதிக அடர்த்திகொண்ட நகரப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படஇயலவில்லை. நகரமயமாகுதல் குறிப்பிடத்தக்க மூலதனம் நீர் உள்கட்டமைப்பபுகளுக்காகவேண்டப் படுகின்றது. அப்பொழுது தான் நீர் தனியார் களுக்கு, மற்றும் கழிவுநீர் ஒருங்குவிப்புகள் மேல் உரிய கவனம் செலுத்த இயலும். அது தனியார்கள் மட்டுமின்றி வணிக நோக்கிலும் கைகூடும். மாசுபடிந்த தொற்றுநோய் பரவவைக்கும் நீர்வளங்கள் சுத்திகரிக்கப் படவேண்டும் இல்லைஎனில் அது பெர்துமக்களின் சுகாதார அபாயநேர்வுகளுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

[10] ஐரோப்பிய நகரங்களில் அறுபது சதவீதம் 100000 பேர்கள் கொண்டுள்ளன. வேகமான வீதம் நிலத்தடிநீர் சேமித்து வைப்பது காட்டிலும் பயன்படுத்தப் படுகின்றது.[10] ஏதேனும் நீர் எஞ்சியிருப்பினும் அது கைவரப் பெறுதற்கு அதிகம் செலவாகின்றதுஎன்பது நிதர்சனமான உண்மை நிலவரமாகும்.

தட்ப வெப்பநிலை மாற்றம், கால நிலை மாற்றம்[தொகு]

சீதோஷ்ணநிலை மாற்றம்என்பது நீர்வள ஆதராங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகளை உலகெங்கும் ஏற்படுத்தும் ஏன்எனில் சீதோஷ்ண நிலைக்கும் மற்றும் நீரின் பண்பியல் அமைதிகள் பற்றிய சுழற்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு கள் இருப்பதுதான்! சீதோஷ்ணநிலை உயர்வு ஆவி யாகுதலைஅதிகரிக்கும் அதனால் திடீர் உறைவால் கனமழை பெய்யும் அந்த மழையளவில் பிரதேச ரீதியில் மாறுபாடுகள் காணலாம். மொத்தமாக உலகளாவிய சுத்தநீர் வழங்கல் அதிகமாகும். வறட்சிகளும் மற்றும் வெள்ளங்களும் அடிக்கடி பலவேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழும். வறட்சிகளும் மற்றும் வெள்ளங்களும் அடிக்கடி பலவேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழும். பனிவீழ்வுமற்றும்பனிஉருகுதல்இரண்டிலும் சட்டென நடக்கும் மாற்றங்கள் மலைப்பிரதேசங்களில் தோன்றும். மிகுஉயர் வெப்பம் நிலைகள் நீரின் தரத்தை பலவழிகளில் மாற்றும். அவைகள் எல்லாம் நன்கறிந்துகொள்ளப் படவில்லை. யூடிராபிக்கேஷன் நோக்கிச் செல்லும்- அடர்ந்த தாவரங்களின் தொகை உருவாகிச் சிதைந்து அதனால் மிருகங்கள் வாழ்க்கை பிராணவாயு குன்றியதால் வரும் பாதிப்பு-இந்த நிலை அதிகரிக்கும சீதோஷ்ண நிலை மாற்றம் மேலும் பொருள் பயப்பது பண்ணைப் பாசனம் அதன் தேவை அதிகரித்தல், தோட்டத்திற்கு நீர்தெளிப்பு, மேலும் நீச்சல் குளங்கள் இவைகளின் தேவையும் அதிகரிக்கச் செய்வதாகும்.

அடுக்குநீர்ப் பாறைகள் உள்ளீடற்றல்[தொகு]

மக்கள்தொகை விஸ்தரிக்கும்காரணத்தால் நீருக்குப் போட்டி நடந்து அதனால் உலகில் முக்கியமான அடுக்கு நீர்ப்பாறைகள் அல்லது நிலங்கள் உள்வளம் குன்றிப்போகும் நிலை உருவாகும். மனிதர்களின் நேரடி நுகர்ச்சி மற்றும் விவசாயப் பாசனம் நிலத்தடிநீர் அதற்குப் பயன்படுத்தல் இவைகளே இதற்குரிய காரணங்களாகும். உலகெங்கும் லட்சோப லட்சம் பம்பு செட்டுகள்பலவடிவங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது நடப்புலகில் இயல்பாகிவிட்டது. வறண்ட பகுதிகளில் பாசனம் வடசீனா மற்றும் இந்தியாவில் நிலத்தடி நீரால் தான் நடை பெறுகின்றது. அது உறிஞ்சப்படுவதும் தாக்குப் பிடிக்காத வீதத்தில் இருப்பதும் கண்கூடாக உள்ளது. [11] நகரங்கள் அடுக்கு நீர்ப்பாறைகளில் உள்ளீடற்ற நிலை காண்பது அதாவது 10 முதல் 50 மீட்டர்கள் வரை குறைந்துபோவது மெக்ஸிகோ, பாங்காக், மணிலா, [[பெய்ஜிங், மெட்ராஸ்,|பெய்ஜிங், மெட்ராஸ், ]]மற்றும் ஷாங்காய் ஆகியனவாகும்.

மாசுபடிதல் மற்றும் நீர் பாதுகாப்பு[தொகு]

மாசுபடிந்த நீர்.

நீர் மாசுபடுதல் இன்றைய உலகில் முக்கியமான கவலைகளில் ஒன்றாக உள்ளது.

பலநாடுகளின் அரசுகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வுகள் காண முயன்று கொண்டு இருக்கின்றன. பலவகையான மாசுகள் நீர்வழங்கலை அச்சுறுத்திக்கொண்டே வருகின்றன. அதுவும் வளங்குன்றியுள்ள நாடுகளில் அது பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக, இயற்கை நீரில் புதிதான கழிவுநீர்க்கால்கள் இரண்டறக் கலப்பது என்பது கழிவுநீர் அகற்றும் முறையில் ஒரு பொதுமுறையாகி உள்ளது இத்தகைய நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பாதி வளர்ச்சி அடைந்த சீனா, இந்தியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இது பரவலானதாக உள்ளது.

கழிவுநீர், சாக்கடைச்சேறு, குப்பை மற்றும் நச்சாக உள்ள மாசுகள் யாவும் நீரில் இறுதியில் வந்து குவியலாகி விழுகின்றன. அதிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தாலும் பிரச்னைகள் தோன்றத்தான் செய்கின்றன. சுத்திரிகரிக்கப்பட்ட கழிவுநீரால் சாக்கடைச் சகதிகள் தோன்றி அவைகள் நிலத்தினில் நிரம்பு கின்றன. அதனால் நிலமெங்கும் பரவு கின்றன. கடைசியில் கடலினில் குவிந்து கலக்கின்றன.[12] இதற்குக் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட இடம் என்றுசொல்ல இயலாத மாசுகள் தோன்றும் பகுதி அதாவது விவசாயஇடங்களில் நீர்பொங்கிவழிதலாலும் அதுவே ஒருமுக்கிய மாசுகளின் மூல ஆதாரம் ஆகின்றது.அதனோடு நகரங்களில்புயல்மழைநீர்பொங்கி வழிவதும் உடன் ரசாயன கழிவுகள்தொழிற் சாலைகளால் மற்றும் அரசாங்கங்களால் குவிந்து விடுதலும் உரிய காரணங்களாகி விடுகின்றன.

நீரும் சச்சரவும்[தொகு]

இரு மாநிலங்கள் இடையில் நிகழ்ந்த சச்சரவு என்பதற்கு தெரிந்த உதாரணமாக விளங்குவது கிமு 2500 மற்றும் 2350 காலத்தில்சுமேரியமாநிலங்களான லாகேஷ் மற்றும் உம்மா இரண்டுக்கும் ஏற்பட்ட நதிநீர்ப் பிணக்கே ஆகும்.[13] அதுதவிர்த்து சர்வதேச அளவில் நீருக்காகச் சண்டை என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் நீரானது வரலாற்றில் தொடர்ந்து சண்டைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. நீர்சொற்பமாகக்கிடைக்கும் போது அரசியல் உளைச்சல்கள் கிளம்பிவரும். இதுவே நீர்இறுக்கம் என்றும் குறிப்பிடுவதுண்டு. நீர்இறுக்கம் உள்ளூர் மற்றும் பிரதேசஅளவில் பிணக்குகள் தோன்றிவரக் காரணமாய் அமைந்தது.[14] ஒரு சுத்தமான எண்ணிக்கை சார்ந்த வழி முறைமையியல்படி, தாமஸ்-டிக்ஸன் நீர்ப்பற்றாக்குறை மற்றும் சாகுபடிநிலம் கிடைப்பதிலும் பற்றாக்குறை இரண்டுமே வன்முறைப்பிணக்குகளுக்குப் பிரகாசமான வாய்ப்பளிக்கின்றன.[15]

நீர்இறுக்கம் சண்டைகள் மற்றும் அரசியல் உளைச்சல்கள்-இழு உலைவுகள் தோன்றவதற்கு கடுப்பூட்ட வல்லதாக அமைந்துள்ளது. அரசியல் உளைச்சல்கள் நீரால் மட்டும் நேரடியாகக் தோன்றுவது கிடையாது. சுத்தநீர் கிடைப்பது தரத்திலும் அளவிலும் நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்துவருவதில் ஒரு பிரதேசத்தின் ஸ்திரத்தன்மையை அது பாதிக்கின்றது. அதன்விளைவாக மக்கள் தொகையின் ஆரோக்கியம், பொருளாதார வளர்ச்சிக்குமுட்டுக்கட்டை, பெரியசச்சரவுகள் வர கடுப்பூட்டும் வண்ணம் நிலைமை உருவாகும்.[16]

சச்சரவுகள் மற்றும் உளைச்சல்கள் நீரால் தேசிய எல்லைகளுக்குள் ஆற்றின்கீழ்ப்படுகையில் உள்ள வடிநிலப் பிரதேசங்களில் நிகழக்கூடும். சீனாவின்மஞ்சள்நதியின் அல்லது தாய் லாந்தின்சாவோ பார்யா நதியின் தாழ்வான பகுதிகள், எடுத்துக் காட்டாக, நீர் இறுக்கத்தைப் பலவருடங்களாக அனுபவித்துக் கொண்டுவருகின்றது. மேலும் கூடுதலாக, சில உழுநிலமுடைய நாடுகள் பாசனத்திற்காக நீரையே நம்பியுள்ளவைகள் அதாவது சீனா, இந்தியா, ஈரான், மற்றும் பாகிஸ்தான் யாவும் குறிப்பாக நீர்சம்பந்தமான சச்சரவுகள் தோன்றக் கூடிய அபாயக்கட்டங்களைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன.[16] அரசியல் உளைச்சல்கள், பொதுமக்கள் பேராட்டம், வன்முறை இவைகள் நீர்தனியார்மயமானதால் வெடித்துக்கிளம்பும். 2000ல் நடந்த பொலிவியன் தண்ணீர்ச் சண்டைகள் இக்கருத்தில் ஒரு வழக்காக ஆகியுள்ளது.

உலக நீர் வழங்கலும் விநியோகமும்[தொகு]

உணவும் மற்றும் நீரும் மனிதின் இரு அடிப்படைத் தேவைகள் ஆகும். எப்படிஎனினும், உலகளாவிய புள்ளிவிவரங்கள் 2002 சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பத்து நபர்களுக்குமாக:

  • சுமார் 5பேர்கள் மட்டுமே வீட்டில் குழாய்வழி நீர்வழங்கலுக்குத் தொடர்பு பெற்றுள்ளனர்.(அவர்கள் வசிப்பிடம், மனை, அல்லது முற்றம்)
  • 3 பேர்கள் சற்று அபிவிருத்தியாக நீர் வழங்கல் அதாவது பாதுகாக்கப் பட்ட கிணறு அல்லது பொதுக்குழாய் வழி பெறுகின்றனர்.
  • 2 பேர்கள் எதுவும் வழங்கப்படாமல் உள்ளனர்.
  • கூடுதலாக, பத்தில் நால்வர் அபிவிருத்தியில்லாத துப்புரவோடு வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.[6]

2002 ல் நடந்த பூமி உச்சிமாநாட்டில்அரசாங்கங்கள் ஒரு செயல்திட்டம் வகுத்தனர்:

  • 2015ல் மக்களில் விகிதாச்சாரமாக பாதிபேர்கள் பாதுகாப்பான குடிநீர் பெற அல்லது அடைய முடியாமல் தவிப்பர்.

உலகளாவிய நீர் வழங்கல் மற்றும் துப்புரவு மதிப்பீடு 2000 அறிக்கை (GWSSAR) வரையறை செய்துள்ளது: 'இணக்கமான செவ்வி' நீரைப்பொருத்த மட்டில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 20 லிட்டர்கள் அது கிடைக்கும் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயனாளியின் வீட்டிலிருந்து இருத்தல் வேண்டும்.

  • மக்களில் விகிதாச்சாரமாக பாதிபேர்கள் அடிப்படை துப்புரவுக்குரிய செவ்வி(அணுகுமுறை) காணாமல் உள்ளனர்.

GWSSR வரையறை செய்துள்ளதன்படி, 'அடிப்படைத் துப்பரவு' தனியார் மயமாகவே அல்லது பங்காகவோ இருக்கவேண்டும் பொதுமக்களுக்குரிய கழிவை மனிதர்களின் தொடர்பிலிருந்து பிரித்தொதுக்கும் முறைகள் ஏதும் கிடையாது.

படத்தில் காட்டியுள்ளதன்படி, 2025ல் நீர்ப்பற்றாக்குறை ஏழை நாடுகளில் மிகப்பரவலாகக் காணப்படும் ஏனெனில் அங்கெல்லாம் நீர்ஆதாரங்கள் வரையறுக்கப் பட்டும் அதேசமயம் மக்கள் தொகை வேகமாக வளர்ந்துவருதாலும் அது நிலவும். அப்படிப் பட்ட நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள், {/00ஆப்பிரிக்கா, ஆசியாவின் சிலபகுதிகள் ஆகும். 2025ல் பெரிய நகரங்கள் அதைஒட்டியுள்ள அரை நகரப் பகுதிகள் புதிய உள்கட்டமைப்பு பாதுகாக்கப் பட்ட குடிநீர் மற்றும் போதுமான துப்புரவு பெற்றிருக்கக் கூடும். இது விவசாய நீர்ப்பயனாளிகள் வளர்முக சச்சரவுகள் பெறக்கூடிய நிலைமையைத் தோற்றுவிக்கலாம் ஏனெனில் அவர்கள்தாம் மனிதர்களில் அதிகமாக நீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுவாகக் கூறும்பொழுது அதிகம் வளர்ந்த நாடுகள் ஆனவடஅமெரிக்கா,ஐரோப்பா, மற்றும் ரஷ்யா ஆகியன 2025ல் நீருக்காக அபாயகரமான அச்சுறுத்தல் பெறாது. அவைகள் பணம்படைத்த நாடுகளாக இருப்பது மட்டுமல்ல அவைகளின் மக்கள்தொகை கிடைக்கும் நீர்ஆதாரங்கள் அவர்களுக்கு ஏற்ப கிடைத்துவருவதே காரணமாகும். வடஆப்பிரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள், வடசீனா முதலியன கடும் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திக்கும் ஏனெனில் இயற்பியல் சொற்பம்அளவு கிடைப்பதும், மிஞ்சிய மக்கள்தொகையுமே அவர்களின் திறன் நீர்வழங்கலுக்கேற்ப கொண்டுசெலுத்த இயலாத நிலைமையுமே காரணங்களாகும். 2025ல் பெரும்பாலும் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்சஹாராபகுதிகள்,தென் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடும் நீர் வழங்கல் நெருக்கடியைச் சந்திக்கும். இந்த பிரதேசங்களில் பொருளாதார வலுக்கட்டாயப் பற்றாக்குறைகள் சுத்தமான நீர் வழங்கலில் அவைகளின் மிதமிஞ்சிய மக்கள்தொகை வளர்ச்சியால்தட்டுப்பாடுகளைச் சந்திக்க வைக்கும்.

1990லிருந்து இன்றுவரை 1.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பான சுத்தநீர்பெற உரிய செவ்வி (அணுகுமுறை) பெற்று வந்துள்ளனர். [2] வளர்ந்துவரும் நாடுகள் மக்களின் விகிதாச்சாரம் அவர்களுக்கு வேண்டிய சுத்தநீர் கணக்கிட்டுப் பார்க்கையில் 1970[17] நிலவரப்படி 30 சதவீதமும், 1990ல் 79 சதவீதமும், 2004 ல் 84 சதவீதமும் அபிவிருத்தி கண்டுள்ளது.

இந்தப் போக்கு தொடர்ந்து செல்ல வேண்டுமென முடுக்கிவிடப் பட்டுள்ளது.[18]

பொருளாதார சலுகைகள்[தொகு]

நீர்வழங்கல் மற்றும் துப்புரவுப்பணிகளுக்காகநிதிமுதலீடுஏராளமாக உள் கட்டமைப்புகளில் செய்யவேண்டிய நிலை உள்ளது. குழாய் வரிசைவேலைகள், நீரேற்று நிலையங்கள் அமைத்தல், நீர் சுத்திகரிப்புப் பணிகள் இவைகளுக்கு நிதி அதிகம் தேவைப் படுகின்றது. பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி என்ற அமைப்பின் படி,(OECD) கணக்கிடப்பட்டுள்ளது யாதெனில், ஒவ்வொரு ஆண்டும் நாடுகள் யுஎஸ்டாலர் கணக்கில் 200 பில்லியன் முதலீடு செய்ய வேண்டும் அப்படிச் செய்தால்தான் பழைய உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றிவிட்டு புதிய உள் கட்டமைப்புகள் உருவாக்கி பின்னர், நீர் வழங்கலுக்கு உறுதி அளிக்க இயலும் அது மட்டுமின்றி கசிவு வீதம் குறைக்கவும், நல்ல தரமான குடிநீர் தரவும் முடியும்.[19]

வளரும் நாடுகளின் தேவைகள் பூர்த்தி செய்ய, சர்வதேச கவனம் அந்நாடுகள் பால் ஒருங்குவிக்கப் பட்டுள்ளது. மில்லேனியம் வளர்ச்சி குறிக்கோள்கள்நிறைவேற்றிட, மக்கள்தொகையில் பாதிஅளவினர் சுத்தநீர் மற்றும் துப்புரவு பெறாமல் உள்ளதைக்கணக்கிட்டு 2015 ஆண்டிற்குள் முதலீடு நடப்பு வருடாந்திரத்தில் உள்ள யுஎஸ்டாலர் 10 முதல் 15 மில்லியன்கள் என்பது தோராயமாக இரட்டிப்பாக்கப்படும். ஆனால் அதில் இடம்பெறாத முதலீடுகள் தற்போதுள்ள உள்கட்டமைப்புகளின் பராமரிப்புச் செலவினங்கள் கிடையாது.[20]

உள்கட்டமைப்புகள் சரிசெய்யப் பட்டதும். நீர்வழங்கல் இயக்கும்முறைகள், துப்புரவு முறைகள் யாவும் குறிப்பிடத்தக்க தொடர் செலவுகள் யாவும் செய்யக் கூடிய அளவிற்கு அதாவது பணியாளர்கள், எரிசக்தி, ரசாயனங்கள், பராமரிப்பு, மற்றும் பிற செலவினங்கள் மேற்கொள்ளவும் நிதிஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக நிதி மற்றும் நிர்வாகச் செலவினங்கள் ஒப்பேற்ற பயனாளிகளிடமிருந்து உபயோகிப்புக் கட்டணங்கள் மற்றும் பொதுநல நிதிகள் அல்லது இரண்டும் சேர்ந்த முறைகள் கடைபிடிக்கப் படவேண்டும்.

இங்குதான் நீர்மேலாண்மையின் பொருளியல் தொடங்கப் பெறுகின்றது. அது போகப் போக மிகுந்த சிக்கலாகி விடுகின்றது. அது சமூக மற்றும் பொருளியல் கோட்பாடு வகுக்க அவைகளுடன் ஊடுருவிக் கலந்துள்ளது அந்த கொள்கைக் கோட்பாடுகள் வரையறை செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல அந்த நோக்கம் நீர் கிடைக்கும் வழிகள் மற்றும் அதன் பயன் பாடுகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அளிப்பது மட்டுமே யாகும். ஆயினும் நீர்ப்பிரச்னைகள் அபாயகட்டம் அடையும் போது அவைகள் எந்த அளவுக்குப் பெர்ருத்தமாக அமையவேண்டும் என்பது அதனுள் அடங்கும் ஏன்எனில் வணிக மற்றும் தொழில் துறைகள் அது எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் வாய்ப்புகள் அதனால் பாதிக்கப்படும்.

வியாபார மறுமொழி[தொகு]

உலக வியாபாரக் குழு தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக்கானது அதனுடைய H2O திரைக்காட்சிகள் அதிலொரு காட்சி எப்படி வழிமுறைமை வகுப்பது அதனுடைய H2O திரைக்காட்சிகள் பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம் அதிலொரு காட்சி எப்படி வழிமுறைமை வகுப்பது என்பதில் ஈடுபாடு செலுத்துகின்றது. அதன்படி:

  • நீரின் சம்பந்தப் பட்ட மாறுதல்கள் நிகழ்விக்கும் ஓட்டுநர்கள் மற்றும் முக்கிய வியாபாரப் பிரச்னைகள் பற்றி புரிந்து கொள்வதை அதிகரிப்பது மற்றும் தெளிவபடுத்துவது.
  • வியாபாரச் சமுதாயத்தினர் மற்றும் வியாபாரமற்ற நீர் மேலாண்மைப் பிரச்னை பற்றிய பங்குதாரர்கள் இவர்கள் இடையே நல்லிணக்கம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இரண்டையும் மேம்படுத்துதல்.
  • தாக்குப்பிடிக்கும் நீர் மேலாண்மை பற்றிய வியாபார செயல்முறையை ஒரு பங்குத்தீர்வாக்கி அதன்மூலம் நல்ல விளைவை ஏற்படுத்துவதை ஆதரித்தல்.

மேலும் அதில் முடிவாக இடம்பெறுவது:

  • ஒரு சமூகம் தாகத்தால் தவிக்கும் போது வியாபாரம் தழைக்காது
  • யார் ஒருவரும் நீர் வியாபாரத்தில் அது நீர் நெருக்கடிஏற்படுத்தினால் அதை வைத்துக்கொண்டிருக்க மாட்டார்.
  • வியாபாரம் என்பதே தீர்வின் ஒருபிரிவாகும் அதன் உள்ளாற்றல் என்பது அதில் பங்கேற்பது எவ்வளவு தூரம் முடுக்கப் படுகின்றது என்பது ஒட்டியே அமையும்.
  • நீர்ப்பிரச்னைகள் மற்றும் அதன் சிக்கல்கள் தொடர்ந்தால் அவைகளின் செலவினங்கள் மேலும் அதிகரிக்க முடுக்கிவிடும்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Earth's water distribution". United States Geological Survey. Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2009-05-13.
  2. "Scientific Facts on Water: State of the Resource". GreenFacts Website. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  3. [1] பரணிடப்பட்டது 2008-10-30 at the வந்தவழி இயந்திரம் ஹோஎக்ஸ்தர,A.Y. 2006. உலகளாவிய நீர் ஆளுகையின் பருமானம்: ஒன்பது காரணங்கள் உள்ளூர் பிரச்சினைகளுக்கு ஈடு கொடுக்க உலகளாவிய ஏற்பாடுகள். நீர் ஆராய்ச்சி அறிக்கை தொடர்கள் மதிப்பு No. 20 யுனெஸ்கோ-ஐஎச்யீ நீர் கல்வி நிறுவனம்.
  4. "The World's Water 2006-2007 Tables, Pacific Institute". Worldwater.org. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-23. பார்க்கப்பட்ட நாள் 2009-12-18.
  6. "FAO Water Unit | Water News: water scarcity". Fao.org. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  7. "World population to reach 9.1 billion in 2050, UN projects". Un.org. 2005-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  8. 9.0 9.1 "Groundwater – the processes and global significance of aquifer degradation". Google.com. 2003-12-29. doi:10.1098/rstb.2003.1380. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  9. 10.0 10.1 "Europe's Environment: The Dobris Assessment". Reports.eea.europa.eu. 1995-05-20. Archived from the original on 2008-09-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  10. "Groundwater in Urban Development". Wds.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
  11. பெருங்கடலில் கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாக்கடை சகதிகள் வீழ்வது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது- கடல் சார் பாதுகாப்பு,ஆராய்ச்சி,மற்றும் சரணாலயங்கள் சட்டம்.(எம்பிஆர்எஸ்எ)
  12. ரசல் , கரேன் A. மற்றும் W. R.தாம்சன். "போட்டியிடும் நிலப்பகுதி,வியூக யுக்தி கொண்ட போட்டிக் குழுக்கள், மற்றும் சச்சரவின் உச்சாளவு." சர்வதேச ஆய்வுகள் காலாண்டு. என்எச் 50 1. (2006): 145-168.
  13. ஒல்ப் ஆரோன் T. “நீர் மற்றும் மனித பாதுகாப்பு .” நீர் ஆராய்ச்சி மற்றும் கல்வி பற்றிய சமகாலத்திய பத்திரிகை. [118] ^ லாண்டவு அண்ட் லிஃப்ஷிப்ட்ஸ் (1975), ப ப . (2001): 29
  14. ஹோம் -டிக்ஸ்ன் , தாமஸ் . "சூழ்நிலை, சொற்பம்,மற்றும் வன்முறை." பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பிரஸ் (1999)
  15. 16.0 16.1 போச்டேல் , S. L. மற்றும் A. T. ஒல்ப் . "நீர் அகற்றும் சச்சரவு." வெளிநாட்டு கொள்கை [126] ^ பழைய எண்கள்: லாரன்ஸ், மைக். (2001): 60-67.
  16. ப்öரன் லாம்போர்க் (2001), ஐயுறவு மனப்பான்மை கொண்ட சூல்நிலையாளர் (கேம்பிரிட்ஜ் யுனிவேர்சிட்டி பிரஸ் ), ISBN 0-521-01068-3, p. 22 பரணிடப்பட்டது 2013-07-25 at the வந்தவழி இயந்திரம்
  17. http://mdgs.un.org/unsd/mdg/Resources/Static/Products/Progress2008/MDG_Report_2008_En.pdf#page=44
  18. "The cost of meeting the Johannesburg targets for drinking water". Water-academy.org. 2004-06-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. அனைவருக்கும் நீர் வழங்க நிதிஉதவி

சுற்றுப்புறம் சூழ்நிலை முகமை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராதாரங்கள்&oldid=3657999" இலிருந்து மீள்விக்கப்பட்டது