நியூட்டனின் மூன்றாம் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூட்டனின் மூன்றாவது விதிக்கு ஓர் எடுத்துக்காட்டு: இருவர் பனியின் மீது ஸ்கேட் (சறுக்குக் கத்திக் காலணி) அணிந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு அசையாது நிற்கும் காட்சி. ஒருவர் உந்தித் தள்ளும் விசைக்கு ஏற்ப மற்றவரும் சரிசமமாக எதிர் விசை தருதல்.

நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது. ஐசாக் நியூட்டன் தான் 1687 ஆம் ஆண்டில் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா[1] என்னும் நூலில் கீழ்க்காணுமாறு கூறுகிறார்:

இலத்தீனில்: Lex III: Actioni contrariam semper et æqualem esse reactionem: sive corporum duorum actiones in se mutuo semper esse æquales et in partes contrarias dirigi.

தமிழில்: எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன, அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், திசையில் எதிரெதிராகவும் இருக்கும்.

மேற்கண்ட நியூட்டனின் மூன்றாம் விதியானது மொத்த உந்தம் மாறா விதி என்பதில் இருந்து எழுவதாகும்.

உரை : ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.

நியூட்டனின் மூன்றாம் விதியைப் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை[தொகு]

  • செயல் விசையும் எதிர்ச்செயல் விசையும் ஒரே பொருளின் மீது செலுத்தப்படுவது இல்லை; அவை செயலெதிர் செயலில் ஈடுபடும் இரு வெவ்வேறு பொருள்களின் மீது செலுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு -- தரையின் மீது நாம் நிற்கையில் நம் எடை தரையின் மீது செலுத்தப்படும் செயல் விசை; இதற்குச் சமமான எதிர்ச்செயல் விசை தரை நம் மீது செலுத்தும் செங்குத்துத் தாங்கு விசை.
  • பொருள்களின் செயலெதிர் செயலினால் நிர்ணயிக்கப்படும் மெய்யான விசைகளைப் பொருத்தவரையில் தான் இவ்விதி மெய்யானதேயன்றி, அவ்விசைகளின் தொகுவிசைக்கு அன்று.
  • செயல் விசையும் எதிர்ச்செயல் விசையும் வெவ்வேறு பொருட்களில் செயல்படுவதால் ஒன்றையொன்று அழிப்பதில்லை.
  • செயல் விசைக்கும் எதிர்ச்செயல் விசைக்கும் இடையே நேர இடைவேளை கிடையாது , இவ்விரு விசைகளும் ஒரே நேரத்தில் செயல்படும் .

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. நூலின் முழுப்பெயர்: Philosophiae Naturalis Principia Mathematica, 1687