நாகர்கோவில் முன்னகர்வு முறியடிப்புச் சமர், செப்டம்பர் 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் செப்டம்பர் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2007 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தினர் படை முன்னகர்வை இரவு 11:30 மணியளவில் மேற்கொண்டனர். எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொண்ட இம்முன்னர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று போராளிகளின் உயிரழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது. இம்முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களாவன ஆர். பி. ஜி - ஒன்று, ஏ. கே. எல். எம். ஜி - இரண்டு, ரி56 ரைபிள் - இரண்டு, ரி56 2 ரக ரைபிள் - இரண்டு, ஆர். பி. ஜி. எறிகணைகள் - ஆறு, 40 மில்லி மீட்டர் மோட்டார் எறிகணைகள் - மூன்று, ஏ. கே. மேகசீன்கள் - நாட்பத்து இரண்டு, ஏ. கே. டிரம் மேகசீன்கள் - நான்கு, கைக்குண்டுகள் - பதினான்கு போன்றனவையாகும். இலங்கை இராணுவத்தரப்பினர் தம்முள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 7 இராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.