நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் 1920களிலும், 1930களிலும் நாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.

இடம்[தொகு]

நாகப்பட்டினத்தில் பழங்காலத்தில் புத்த விகாரம் இருந்த இடமான தற்போதைய வெளிப்பாளையம் மற்றும் நாணயக்காரன் தெரு ஆகிய இடங்களிலிருந்து புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. [1]

காலம்[தொகு]

1856இலிருந்து தொடங்கி 1920களிலும், 1930களிலும் 350க்கும் மேற்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் சில முற்காலச் சோழர் காலத்தையும் (கி.பி.871-1070), மீதமுள்ளவை பிற்காலச் சோழர் காலத்தையும் சார்ந்தவையாகும். [1]

அருங்காட்சியகங்கள்[தொகு]

இவை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னையிலுள்ள எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இவை அதிக எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2] தமிழகத்தில் பௌத்தம் பரவியிருந்ததை உணர்த்தும் சான்றுகளாக இவை அமைந்துள்ளன.

2015[தொகு]

நாகப்பட்டினத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது சில புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி அமைப்பை ஒத்திருந்தன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 T.N.Ramachandran, The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum, Director of Museums, Madras, 1992
  2. Buddhist Bronzes, Government Museum, Chennai
  3. வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 10 புத்தர் சிலைகள் கண்டெடுப்பு, தினகரன், 6.5.2015

இவற்றையும் பார்க்கவும்[தொகு]