நவம்பர் 2008
| << | நவம்பர் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMVIII | ||||||
நவம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் பதினோராம் மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர் 15 திங்கட்கிழமையில் முடிவடைகிறது.
[தொகு] சிறப்பு நாட்கள்
- நவம்பர் 2 - கல்லறைத் திருநாள்
- நவம்பர் 4 - கந்தசஷ்டி
- நவம்பர் 20 - ஆறுமுக நாவலர் குருபூசை
[தொகு] நிகழ்வுகள்
| செய்திகள் | மேலதிகச் செய்திகளை |
- நவம்பர் 30:
- மும்பாய் தாக்குதல்களுக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்று இந்தியாவின் உட்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார். (பிபிசி)
- பாங்கொக் நகரில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கிரனேட் வீசப்பட்டதில் 46 பேர் காயமடைந்தனர். (ஏபி)
- நவம்பர் 29:
- நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரங்களில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பிரேசிலில் பெரும் வெள்ளம் காரணமாக 105 பேர் கொல்லப்பட்டனர். (ஜி1)
- மும்பாய் தாக்குதல்கள்:
- நவம்பர் 28: தாய்லாந்தில் இடம்பெறும் அரச எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து அங்கு அவசர நிலமை பிறப்பிக்கப்பட்டது. (ஆஸ்திரேலிய வானொலி)
- நவம்பர் 27: ஏழு பேருடன் சென்ற நியூசிலாந்து விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது. (சீஎனென்)
- நவம்பர் 26:
- 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்: இந்தியாவின் மும்பாய் நகரில் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆப் இந்தியா))
- டென்மார்க்கிடமிருந்து அதிக சுயாட்சி பெறுவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கிரீன்லாந்து மக்கள் 75 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.
- நவம்பர் 25: ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தொடருந்து நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- நவம்பர் 24:
- தாய்லாந்தில் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் நாட்டின் தேசிய அரசுப் பேரவையைச் சூழ்ந்து கொண்டனர். (ஏஎஃப்பி)
- பிரேசிலின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டு 20,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)
- நவம்பர் 23:
- கினி-பிசாவு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- பாலஸ்தீன அரசின் தலைவராக மகமுது அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- நவம்பர் 22:
- கொலம்பியாவில் நெவாடோ டெல் ஹுயிலா எரிமலை வெடித்ததில் 10 பேர் கொல்லப்ப்பட்டனர். 12,000 பேர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி)
- மலேசியாவில் முஸ்லிம்கள் யோகக் கலையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டது. (பிபிசி)
- நவம்பர் 18: தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 20 சமீ உயரமான ஓர் அரிய வகை சருகு மான் கண்டுபிடிக்கப்பட்டது. (தினத்தந்தி)
- நவம்பர் 17: சோமாலியாவில் சவுதி அரேபிய எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிக் கடல் கொள்ளைக்காரர்களினால் கடத்தப்பட்டது. (பிபிசி)
- நவம்பர் 16:
- இந்தோனேசியா கரைக்கப்பால் 7.5 அளவு நிலநடுக்கம் பதிவாகியது. (சிஎனென்)
- ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஒபாமா தனது மேலவை உறுப்பினர் பதவியை துறந்தார். (வாஷிங்டன் போஸ்ட்)
- நவம்பர் 15:
- தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பாக ஜி20 நாட்டுத் தலைவர்கள் வாஷிங்டன், டிசியில் சந்தித்தனர். (பிபிசி)
- எண்டெவர் விண்ணோடம் எஸ்டிஎஸ்-126 விண்கலத்தைத் தாங்கி பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் சென்றது. (நாசா)
- புர்கினா பாசோவில் பேருந்து ஒன்றும் சுமையுந்து ஒன்றும் மோதியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)
- நவம்பர் 14: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம் இந்திய தேசியக் கொடியுடன் சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- நவம்பர் 13: எச்ஆர் 8799 விண்மீனைச் சுற்றிவரும் மூன்று கோள்களையும், பொமல்ஹோட் என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோளையும் தொலைக்காட்டிகளினூடாக பார்க்கக்கூடியதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (சிஎனென்)
- நவம்பர் 11:
- எகிப்தின் அரசி செசெஷெட்டுக்குச் சொந்தமான 4,300 ஆண்டுகள் பழமையான பிரமிட் ஒன்றைத் தான் கண்டுபிடித்திருப்பதாக எகிப்தின் வரலாற்றாய்வாளர் சாகி ஹவாஸ் அறிவித்தார். (சிஎனென்)
- மாலைதீவுகளின் புதிய குடியரசுத் தலைவராக முகமது நசீட் பதவியேற்றார். (சிஎனென்)
- நவம்பர் 9:
- 2002 பாலி குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான மூன்று தீவிரவாதிகள் பாலியில் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. (பிபிசி)
- பசிபிக் பெருங்கடல் பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் அணு ஆயுதங்களுக்கான நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 21 பேர் படுகாயமடைந்தனர். (அல்ஜசீரா)
- நவம்பர் 8: நியூசிலாந்து 2008 தேர்தலில் ஜோன் கீ தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. (நியூசிலாந்து ஹெரால்ட்)
- நவம்பர் 7: எயிட்டியில் பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 6: ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் பூட்டானின் 5வது மன்னராக முடிசூடினார். இவரே உலகின் வயதில் குறைந்த அரசுத்தலைவர் ஆவார். (பிபிசி)
- நவம்பர் 4:
- ஐக்கிய அமெரிக்கா குடியரசுத் தலைவர் தேர்தல், 2008: மக்காளாட்சிக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். (சிஎன்என்)
- சீனாவும் தாய்வானும் இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை அபிவிருத்தி செய்யும் பில்லியன் கணக்கான டாலர்கள் பெறுமதியான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளன. (தினக்குரல்)
- மெக்சிக்கோ நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் நாட்டின் உள்ளூராட்சி அமைச்சர் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நவம்பர் 1:
- இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் சந்திரனுக்குச் செல்லும் வழியில் பூமியின் இரு படங்களை எடுத்து அனுப்பியது. (த ஹிண்டு)
- முன்னர் தாம் நடத்திய தீவிரவாத தாக்குதல்களுக்கு நட்ட ஈடாக லிபியா $1.5 பில்லியன்களை ஐக்கிய அமெரிக்காவுக்குக் வழங்கியது. (ஏஎஃப்பி)
| ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- நவம்பர் 29:
- கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)
- மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 50 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 28:
- மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று இரவுகளில் சுமார் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 27:
- "நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்" என புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்தார். (புதினம்)
- புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியது. (புதினம்)
- நவம்பர் 26: வன்னியில் தொடர் மழை மற்றும் கடும் காற்றினால் பெரும் அழிவுகளும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதில் இருவர் உயிரிழந்தனர். (புதினம்)
- நவம்பர் 24: அம்பாறை, கஞ்சிக்குடிச்சசாறு காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு நால்வர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- நவம்பர் 23: குஞ்சுப்பரந்தன் நோக்கிய இலங்கைப் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும், படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 21: வன்னியில் இருந்து சென்ற நோயாளர் காவு வாகனங்கள் வவுனியாவுக்குள் செல்ல சிறிலங்கா படையினர் அனுமதியளிக்க மறுத்ததனால் இரண்டு நாள் பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. (புதினம்)
- நவம்பர் 16: முகமாலை இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும் 25 படையினர் கொல்லப்பட்டு 105 படையினர் படுகாயமடைந்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 15: பிரபல தமிழ் அறிவிப்பாளரும் வெற்றி எஃப்.எம். வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளருமான ரகுபதி பாலசிறீதரன் வாமலோசன் (லோஷன்) இலங்கை பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் நவம்பர் 22 இல் விடுவிக்கப்பட்டார்.(புதினம்),(புதினம்)
- நவம்பர் 14: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பூநகரியைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. (பிபிசி)
- நவம்பர் 14: கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பிள்ளையான் குழுவின் பிரத்தியேக செயலாளர் ரகு என்ற குமாரசுவாமி நந்தகோபன், மற்றும் அவரது சாரதி ஆகியோர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்), (டெய்லிமிரர்)
- நவம்பர் 13:
- மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பன்குடாவெளிப் பகுதியில் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். ஏழு பேர் காணாமல் போயினர். (புதினம்)
- பூநகரி நோக்கி முன்னேறி வரும் படையினர் பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்)
- நவம்பர் 12:
- போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (புதினம்)
- கிளிநொச்சி மாவட்டம், அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டு 45 பேர் காயமடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 11: அம்பாறை உகந்தை காட்டுப் பகுதியில் ஊடுருவிய இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரின் அணி ஒன்றை விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கியதில் அதிரடிப்படை உயர்திகாரி ஒருவர் உட்பட இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். (புதினம்)
- நவம்பர் 10:
- மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு பிரதேசத்தில் துணை இராணுவக் குழு முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- கிளிநொச்சிக்கு மேற்கே முன்நகர்வு முயற்சியில் ஈடுபடும் படையினர் பாலாவி பகுதியையும், பேய்முனைப் பகுதியில் கிராஞ்சிப் பிரதேசத்தையும் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்), (புதினம்)
- நவம்பர் 7:
- கிளிநொச்சி மாவட்டம், பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்கிதலில் 45 படையினர் கொல்லப்பட்டு 100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மட்டக்களப்பு மாவட்டத்தின் மகா ஒயா பிரதேசத்தில் அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 6:
- பிரிவினைவாதத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். (புதினம்)
- கிளிநொச்சிக்கு தென்மேற்காக ஒன்பது கிமீ தூரத்தில் உள்ள அக்கராயன்குளம் பகுதியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இலங்கைப் படையினர் தெரிவித்தனர். (புதினம்)
- நவம்பர் 5: மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பகுதியில் கருணா குழு மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- நவம்பர் 4: மட்டக்களப்பு மாவட்டத்தில் கோப்பாவெளி பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர். (புதினம்)
- நவம்பர் 1: யாழ். நாகர்கோயில் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. (புதினம்)
[தொகு] இறப்புகள்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்