நத்தானியேல் வாலிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நத்தானியேல் வாலிக் (Nathaniel Wallich) (28 சனவரி 1786 - 28 ஏப்ரல் 1854) ஒரு அறுவை மருத்துவரும், தாவரவியலாளரும் ஆவார். கோப்பன்கேகன் நகரில் பிறந்த இவரது இயற்பெயர் நேதன் பென் வுல்ஃப். நேதன் வாலிக் என அழைக்கப்பட்ட இவர் பின்னர் நத்தானியேல் ஆனார். ஒரு வணிகரான இவரது தந்தை வுல்ஃப் பென் வாலிக், 18 ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில், ஆம்பர்க்குக்கு (Hamburg) அருகில் உள்ள ஓல்சேட்டிய நகரான அல்தோனாவில் இருந்து வந்து கோப்பன்கேகனில் குடியேறியிருந்தார். அறுவை மருத்துவர்களுக்கான ராயல் அக்கடமியில் பட்டம்பெற்ற நத்தானியேல், அவ்வாண்டின் இறுதியில், வங்காளத்தில் இருந்த டேனியக் குடியேற்றமாகிய செராம்பூரில் அறுவை மருத்துவராகப் பதவி பெற்றார். ஏப்ரல் 1807 ஆம் ஆண்டில் புறப்பட்டு ஆப்பிரிக்க முனையூடாக அவ்வாண்டு நவம்பர் மாதத்தில் செராம்பூர் வந்து சேர்ந்தார்.