தொ. சானகிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொண்டை மண்டலம் செஞ்சிக்கு அருகில் உள்ள இரெ. பாளையத்தில் பிறந்தவர். தொப்பையா - இலக்குமி அம்மையார் பெற்றோர். இளமைக் காலங்களில் நாடகங்கள் இயக்கி - நடிக்கவும் செய்தவர். திருவள்ளுவர் மன்றம் (1964) அமைத்தவர். 1964-65இல் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றச் செயலர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பும் (P.U.C) மாநிலக் கல்லூரியில் இயற்பியலும் (B.Sc.) பயின்றவர். முதுகலை (M.A.) சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியில் முதுஆய்வர் (M.phill - Highly Commended) பட்டமும் பெற்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் (B.L.) பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (Ph.D) பட்டம் அளிக்கப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தொ.நி. பட்டயமும் (PG - D.L.A.) அண்ணா மேலாண்மைக் கழகத்தில் (Anna Institute of Management) நிர்வாகப் பயிற்சிச் சான்றிதழும் (Certificate) பெற்றவர். தமிழ்நாடு அரசு, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் “கணினி இணையத்திறன்” - பட்டயச் சான்றிதழ் பெற்றவர்.

‘விடுதலை’ நாளிதழ் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியர்; தந்தை பெரியார் அவர்கள் உடனிருந்து இரண்டு ஆண்டுகள் ‘பணிவிடை’ செய்யும் பேறு பெற்றவர். தந்தை பெரியார் அவர்களை வைத்துத் தம் தலைமையில் சென்னையில் திராவிட மாணவர் கழக மாநாட்டை (1971) நடத்தியவர். விக்டோரியா மாணவர் விடுதி இலக்கிய மன்றச் செயலராக - கவிப்பேரரசர் கண்ணதாசன். பெரும்புலவர் பேராசிரியர் மா.நன்னன். இனமானப் பேராசிரியர் ஆகியவர்களை அழைத்து இலக்கியக் கூட்டங்கள் கண்டவர். ‘தீக்குச்சிகள்’ (கவிதை), ‘அறிவியல் தமிழ் இலக்கியம்’ (தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை ‘சிறந்த நூற்கள்’ நிதி உதவியின் வெளியீடு) நூல்களின் ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர் மற்றும் முதல்வர் பணிகள் ஆற்றியவர். எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரி (தன்னாட்சி) சென்னை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி), புதுச்சேரி ஆகிய நிறுவனங்களின்,¢ தமிழ்த் துறை பாடதிட்டக் குழு உறுப்பினராக உள்ளவர். சென்னை வானொலியில் அறிவியலறிஞர், கல்வியாளர் முனைவர் வா.செ.கு., முனைவர் அவ்வை நடராசன் ஆகியவருடன் பங்கேற்றவர் கலைஞர் படைப்புலகம் தொகுப்பில் இடம்பெற்ற “மாவோவும் கலைஞரும் - ஓர் ஒப்பாய்வு” ஆகிய அறிவியல் பார்வை தமிழ்க் கட்டுரைகள் வழங்குபவர்.

சென்னைத் தொலைக்காட்சி நேர்காணல்களில் தோன்றியவர். கவிஞர், கட்டுரையாளர், செய்தியாளர், சமுதாயப்பணி ஆர்வலர், தற்பொழுது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் அறிவுரைஞர் மற்றும் பொதுத் தகவல் அலுவலராகப் பணியாற்றுபவர்.

மறைவு : 05-11-2022

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொ._சானகிராமன்&oldid=3598677" இலிருந்து மீள்விக்கப்பட்டது