தொழிலாளர் சர்வதிகாரம்
தொழிலாளர் சர்வதிகாரம் ( ஆங்கிலம் Dictatorship of the proletariat) அல்லது பட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்பது ஒரு அரசியல் கருத்து நிலை ஆகும். பொதுவுடமைக் கோட்பாட்டில் வர்க்கமற்ற சமுதாயத்தை அமைவதற்கு முன்பும், முதலாளி வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் இடைப்பட்டதான ஒரு நிலையே தொழிலாளர் சர்வதிகாரம் எனப்படுகிறது.
[தொகு] தமிழ்ச் சூழலில்
தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் நெடுங்காலமாக பட்டாளி வர்க்க புரட்சியையும், அதைத் தொடர்ந்த பட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை தமது இலக்காகப் பிரகடனப்படுத்தி இருந்தனர். எனினும் இந்த உரையாடலில் தற்காலத்தில் புதிய சனநாயகம், மக்கள் சனநாயகம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
[தொகு] விமர்சனங்கள்
சேவியத் ஒன்றியத்தில், சீனாவில், கியூபாவில் தொழிலாளர் சர்வதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்த சர்வதிகாரம் பொதுவடமைக் கட்சி சர்வதிகாரமாகவும், குறிப்பாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய தலைவர்களின் சர்வதிகாரமாக விளங்கின.
அரசின்மை கொள்கையாளர்கள் தொழிலாளர் சர்வதிகாரம் என்பது முதலாளித்துவம் கைக்கொண்ட அதிகாரத்தைப் பண்புகளையே கொண்டிருக்கும் எனவும், அதனால் யாருடைய சர்வதிகாரம் என்றாலும் எதிர்க்கபடவேன்றும் எனவும் விமர்சித்தனர்.