தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற, பாண்டிய நாட்டிலுள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள்[தொகு]

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [1] [2]

பாண்டிய நாட்டுத் தலங்கள்[தொகு]

  1. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  2. செல்லூர் மதுரை திருவாப்புடையார் திருக்கோயில்
  3. திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்
  4. திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில்
  5. பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
  6. திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில்
  7. திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்
  8. ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில்
  9. திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்
  10. காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்
  11. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
  12. திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில்
  13. குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்
  14. திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13