தேசிய முன்னணி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய முன்னணி (National Front) இந்திய அரசியல் கட்சிகளான வட இந்தியாவின் ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத், தமிழ்நாட்டின் திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைப்பாக நடுவண் அரசில் (1989-1991) பங்குபெற்ற கூட்டணி ஆகும். இக்கூட்டணியின் தலைவராக என். டி. ராமராவ் பொறுப்பேற்றிருந்தார் ஆனால் அவர் பிரதமர் பதவி ஏற்க விரும்பவில்லை. கூட்டணியினரால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் வி. பி. சிங் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார். இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளாக பாரதிய ஜனதா கட்சியும், இடது முன்னணி கட்சிகளும் இருந்தனர்.

பரிந்துரைக்கப்பட்ட பிரதமர்கள்[தொகு]

1) என்.டி.ராமா ராவ்தெலுங்கு தேசம் கட்சி
2) தேவி லால்ஜனதா தளம்
3) சந்திரசேகர்ஜனதா தளம்
4) வி. பி‌. சிங்ஜனதா தளம்

இறுதியாக தேர்வு செய்யபட்ட பிரதமர் திரு விஸ்வநாத் பிரதாப் சிங் ஆவார். அவர் தேர்வு செய்யப் பட்ட நிகழ்ச்சி வெகு ஸ்வாரஸ்யமானது. சந்திரசேகரின் சூழ்ச்சிகளை முறியடித்து அவர் முன் மொழிந்த தேவிலாலாலேயே முன் மொழியப் பட்டு, சந்திரசேகரை மூக்கறுத்து பிரதமரானார் வி.பி.சிங்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_முன்னணி_(இந்தியா)&oldid=3735855" இலிருந்து மீள்விக்கப்பட்டது