தேசிய புலனாய்வு முகமை (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய புலனாய்வு முகமை (இந்தியா) | |
|---|---|
| தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
| இணையதளம் | www.nia.gov.in |
தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.[1][2][3] இதன் முதல் தலைமை இயக்குனர் ஆர். வி. இராஜூ பணி ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது எஸ். சி. சின்கா தலைமை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.