தென்மராட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான பகுதிகளாகும். தென்மராட்சிக்கு மேற்காக வலிகாமமும் வடக்கே வடமராட்சியும் உள்ளன.
தென்மராட்சி சாவகச்சேரியை தலை நகராகக் கொண்ட பிரதேசமாகும். யாழ்குடா நாட்டையும் கிளிநொச்சியையும் இணைக்கும் பாலமாகவும் தென்மராட்சி விளங்குகின்றது. நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி, மட்டுவில் போன்ற பிரதேசங்கள் தென்மராட்சியில் உள்ளன.

