திருவெண்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவெண்காடு
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருவெண்காடு தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[3]. இங்குள்ள சுவேதாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றுள்ளது. இக்கோயில் நவக்கிரகத் தலங்களில் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

சைவ சித்தாந்த முதல் சந்தான ஆசாரியார் மெய்கண்டார் பிறந்த ஊர். சைவ எல்லப்ப நாவலர் பிறந்த இராதா நல்லூர் இந்த ஊரிரிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. திருவெண்காட்டுப் புராணம் என்னும் நூல் இவ்வூர் இறைவன்மீது பாடப்பட்டது. [4]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவெண்காட்டில் 7403 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005. எழுத்தறிவு பெற்றவர்கள் 4948 பேர். இதில் 2733 பேர் ஆண்கள்; 2215 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 75.67. 13.21 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[5]


மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
  4. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 153. 
  5. "Rural - Nagapattinam District;Sirkali Taluk;Thiruvengadu Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெண்காடு&oldid=3558521" இலிருந்து மீள்விக்கப்பட்டது