திருவிழா
திருவிழா அல்லது உற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழி சொல்லாகும்.
பொருளடக்கம் |
இந்து மதத் திருவிழாக்கள் [தொகு]
தேர்த் திருவிழா [தொகு]
பழனி முருகன் கோயில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோயிலை சுற்றி பவனி வருவார்.[1]
தைப் பூசத் திருவிழா [தொகு]
தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். முருகன் கோவில்களில் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது.[2]
சித்திரைத் திருவிழா [தொகு]
முதன்மைக் கட்டுரை: சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா [தொகு]
கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா,திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று மாலை, திருவண்ணாமலையில் அகண்ட கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
கிறித்துவ மதத் திருவிழாக்கள் [தொகு]
தேவாலயத் திருவிழா [தொகு]
கிறித்துமசு கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலயத் திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறும்.
படங்கள் [தொகு]
மேலும் பார்க்க [தொகு]
மேற்கோள்களும் குறிப்புகளும் [தொகு]
- ↑ "ஸ்ரீ கல்யாணமுருகர் தேர்த் திருவிழா காணொளி". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.
- ↑ "பத்து மலை தைபூசத் திருவிழா". http://www.tamilhindu.net/t1341-topic. Retrieved அக்டோபர் 17, 2012.