திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமயேந்திரப்பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி
பெயர்
புராண பெயர்(கள்):திருமகேந்திரப் பள்ளி
பெயர்:அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி
அமைவிடம்
ஊர்:மகேந்திரப் பள்ளி
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருமேனியழகர்
தாயார்:வடிவாம்பிகை
தல விருட்சம்:கண்ட மரம், தாழை
தீர்த்தம்:மயேந்திர தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, மார்கழித் திருவாதிரை, பங்குனி உத்தரம், திருக்கார்த்திகை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 6 வது சிவத்தலமாகும்.

தல வரலாறு[தொகு]

இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான். பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி" என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதிகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

வழிபட்டோர்[தொகு]

இந்திரன், மயேந்திரன், சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

தினமலர்க் கோயில்கள்