திருநங்கை
|
|
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
பொருளடக்கம் |
[தொகு] சேவகர் பணி
விரைத் தறிப்புச் செய்யப்பட்ட ஒரு நபர் தன்னைப் பெண்ணாக, அல்லது ஆணாக அடையாளப்படுத்தலாம். எதிர்பால் உடையணிபவர்களையும் அலி என அழைப்பதுண்டு. முன்னைய காலத்தில் சேவகர்கள் விரைத் தறிப்புச் செய்யப்பட்டு சேவைக்கு அமர்த்தப்படுவதுண்டு. குறிப்பாக அந்தப்புரத்தில் சேவைக்கு இவர்கள் அமர்த்தப்படுவதுண்டு. மகாபாரதத்தில் அர்ச்சுனன் அலியாக இருந்தாகவும், சிகண்டி என்ற அலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.[1]
[தொகு] சமூக சிக்கல்கள்
[தொகு] இந்தியா
பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது.
[தொகு] கனடா
திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற, ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.
[தொகு] பண்பாடு
மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.
[தொகு] கூத்தாண்டவர் திருவிழா
ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்குஅது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்க
கூத்தாண்டவர் திருவிழா
திருநங்கை தினம்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ மகாராசன் (தொகுத்தது). (2007). அரவாணிகள்: உடலியல், உளவியல், வாழ்வியல். சென்னை: தோழமை வெளியீடு. பக்கம்: 152.
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.keetru.com/vizhippunarvu/sep06/priya_babu.html அரவாணிகள் மனுஷிகள் தான்...
- http://livingsmile.blogspot.com/2006/12/blog-post.html அலி, அரவானி, திருநங்கை
- திருநங்கைகளைப் பற்றி ஒரு மருத்துவரின் வலைப்பதிவு