திருக்குவளை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குவளைத் வட்டம் , தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருக்குவளை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 60,771 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 30,044 ஆண்களும், 30,727 பெண்களும் உள்ளனர். 16,202 குடும்பங்கள் கொண்ட இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.13% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5850 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 31,911 மற்றும் 21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.64%, இசுலாமியர்கள் 1.37%, கிறித்தவர்கள் 3.9% மற்றும் பிறர் 0.08%ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குவளை_வட்டம்&oldid=3306542" இலிருந்து மீள்விக்கப்பட்டது